Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை அவுஸ்திரேலியாவிடம் கோரி மெல்பேணில்,சிட்னி நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்கான ஆதரவை அவுஸ்திரேலியாவிடம் கோரி மெல்பேணில்,சிட்னி நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழீழத் தாயகத்தில் இதுவரை காலமும் சிறிலங்கா அரச அடக்குமுறையால் அழிந்துபோயுள்ள எம் உறவுகளுக்கான நீதிகேட்கும் குரல்கள், இப்போது உலகசமுதாயத்தின் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட காணொளியை அவுஸ்திரேலியாவிலும் ஏபிசி(ABC) தொலைக்காட்சி மீள்ஒளிபரப்பு செய்துள்ளது.

தாயகத்தில் மறைக்கப்பட்டுப்போன எம்மக்களின் மீதான இனப்படுகொலை குறித்த விபரங்கள், சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளிக்கொண்டு வரப்பட்டபோதுதான், இதனை சர்வதேச சமுதாயம் புரிந்துகொள்ளத் தொடங்கியமை என்பது ஆச்சரியமாக உள்ளபோதும், எமது மக்களுக்கான நியாயப்பாடுகளை, இப்போதாவது சர்வதேசங்கள் புரிந்துகொள்ள தொடங்கியமையானது, உலகப் பரப்பெங்கும் பரவிவாழும் தமிழர்களுக்கு ஓரளவாவது ஆறுதலையும் எதிர்பார்ப்பையும் தந்துள்ளது.

சிறிலங்கா அரசும் அதன் படைகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில், இப்பேரழிவிற்கான நீதியைக்கோரி, சர்வதேச நியமங்களுக்குட்பட்ட தீர்ப்பினை எதிர்பார்த்து, அவுஸ்திரேலிய அரசினதும் சக குடிமக்களதும் ஒத்துழைப்பை நாடி, கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை 23 ம் திகதி காலை 10.30 மணிக்கு, மெல்பேணில் பெடரேசன் சதுக்கத்திலும், எதிர்வரும் ஜூலை 30 ம் திகதி காலை 10.30 மணிக்கு சிட்னியில் மாட்டின் பிளேசிலும் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதற்கான அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இணையுமாறு அன்புடன் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.

மெல்பேண் – 23 – 07 – 2011 சனிக்கிழமை 10.30AM, @ Federation Square, Melbourne

தொடர்புகளிற்கு – 0425 174 918 / 0433 002 621

சிட்னி - 30 – 07 – 2011 சனிக்கிழமை 10.30AM, @ Martin Place, Sydney

தொடர்புகளிற்கு - 0469 089 883

ஜூலைப்பெருநினைவுகளை சுமந்த இம்மாதத்தில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எழுந்துவரும் குரல்களோடு நாமும் கைகோர்த்து, உரிமை மறுக்கப்பட்ட எமது தேசத்திற்காக நாங்களும் எங்கள் கரங்களை இணைத்துக்கொள்வோம்.

http://www.eeladhesam.com/index.php?option=com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கவனயீர்ப்பு நிகழ்வுகளில் அவுஸ்திரேலியாவில் வாழும் உறவுகளே நீங்களும் கலந்துகொள்ளும்படி உரிமையுடன் அழைக்கின்றேன் நன்றி ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.