Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் சுப்பிரமணியபுரம் பகுதியில் இலங்கை மூதாட்டி அபர்ணா என்பவரை கொலை செய்துவிட்டு, அவரின் சொத்துக்கலையும் அபகரித்த திமுக முக்கிய புள்ளிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரட்டும் பொலீஸ், மதுரையைக் காலி செய்யும் அழகிரியின் சகாக்கள்

அட்டாக் பாண்டியின் கைது, அழகிரியின் கூட்டத்தை ஆட்டிப் பார்த்துவிட்டது. தென் மாவட்டங்களை ‘அழகிரி நாடு’ என்று தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் அழைத்து வந்தன. அங்கு அழகிரி இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்தது.

அழகிரியின் தளபதிகளாக அட்டாக் பாண்டியன், தளபதி, மன்னன், கோபிநாதன், எஸ்.ஆர்.கோபி, மூர்த்தி, பொட்டு சுரேஷ், மிசாபாண்டியன் ஆகியோர் வலம் வந்தனர். மதுரையில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. மீறுபவர்கள் மிரட்டப்பட்டனர். ஏன் கொலைகூட செய்யப்பட்டனர். அதிகாரிகளும் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இவர்கள் ஆக்கிரமித்த, அபகரித்த இடங்கள் மீட்பு, இவர்கள் மீதுள்ள வழக்குகளை தூசி தட்டுவது என தனது வேலையை ஆரம்பித்து ள்ளது போலீஸ். இதில் பயந்துபோன தி.மு.க.வைச் சேர்ந்த பலர் தங்களது வாலைச் சுருட்டிக்கொண்டு அமைதியாகிவிட்டனர். பலர் ஊரைவிட்டு ஓடுகின்றனர். அழகிரியின் நிழலாக வலம் வந்த பொட்டு சுரேஷ், கடந்த சில நாட்களாக மதுரையில் இல்லை. பெங்களூருவுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும், புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தியும் அழகிரியின் வலது மற்றும் இடதுகரமாகச் செயல்படுகின்றனர். அடுத்த வரிசையில் பி.எம். மன்னன், ப.கோபிநாதன், எஸ்.ஆர். கோபி, மிசா.பாண்டியன், தாய் மூகாம்பிகை சேதுராமன், ஜெயராமன், எம்.உதயகுமார், வி.கே குருசாமி, பால.தம்புராஜ், செல்லூர் மின்னல்கொடி உள்ளிட்டவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. அவர்களின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ‘அ.தி.மு.க. தலைமையைப் பேசி சரி செய்துவிட்டோம்’ என்று பீலா விட்டவர்களும், கட்சி மாறப்போவதாகச் சொல்லி வந்தவர்களும் இருக்கும் இடமே தெரியவில்லை. அதே நேரத்தில் இவர்கள் மீது வழக்குகளும் குவிய ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், ஈஸ்வரலால் என்பவரது மனைவி கல்பனா கொடுத்த மோசடிப் புகாரில் அட்டாக் பாண்டியும், அவரது உறவினர்கள் திருச்செல்வம், மாரிமுத்து ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கல்பனாவுக்குச் சொந்தமான இடத்தை இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்து அபகரித்ததாக புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த அட்டாக் பாண்டி தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக இருந்தவர். மதுரை தினகரன் எரிப்பு வழக்கிற்குப் பின்னர் பிரபலமானவர். கட்டப் பஞ்சாயத்து நடக்கும் போது தனக்கு வேண்டியவர்களுக்கு சாதகமான தீர்ப்பை வாங்கித் தருவதில் வல்லவர். இதனாலேயே இவருக்குப் பெயருக்கு முன்னால் ‘அட்டாக்’ என்று பெயர் ஒட்டிக் கொண்டது. நிதி நிறுவன அதிபரைக் கடத்தி சித்திரவதை செய்த வழக்கு இவர் மீது தி.மு.க. ஆட்சியில் போடப்பட்டது. அதன் பின்னர் கட்சியில் இருந்து நீக்கப்ப ட்டாலும், கட்சியின் அனைத்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுதான் இருந்தார். இவர் கைது மூலம் அழகிரி ஆதரவாளர்களின் வயிற்றியில் புளியைக் கரைத்துள்ளது போலீஸ்.

இதே போல சில நாட்களுக்கு முன்பு, திருமங்கலத்தைச் சேர்ந்த சிவனாண்டி என்பவரின் மனைவி பாப்பு, ‘தனது 5 ஏக்கர் நிலத்தை தி.மு.க.வினர் அபகரித்து விட்டனர்’ என்று புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், ‘‘பொட்டு சுரேஷ் அலுவலகத்தில் வைத்து, அவரும், தளபதி, தாய் மூகாம்பிகை சேதுராமன் மற்றும் பெயர் தெரியாத சில ரவுடிகள் மிரட்டி இடத்தை அபகரித்துக் கொண்டனர்’’ என எஸ்.பி., அஸ்ரா கர்க்கிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் முன் ஜாமீன் வாங்கு வதற்கு கோர்ட் படியேறி வருகின்றனர்.

இது குறித்து பொட்டு சுரேஷ் தரப்பில் கேட்ட போது, ‘பொட்டு சுரேஷுக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது போன்ற விவகாரங்களில் அவர் ஒரு போதும் தலையிட்டதில்லை. தப்பான எந்தச் செயலுக்கும் அவர் துணை போனது இல்லை. பாப்பு சிவனாண்டி யார் என்பதே அவருக்குத் தெரியாது’ என்று சொல்கின்றனர். ஆனால் அவரும் தற்போது தலைமறைவாகியிருக்கிறார். மதுரை திரும்பினால் அவர் கைது செய்யப்படுவார் என்கிறார்கள்.

இது தவிர, கூடல்நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2 இஸ்லாமியப் பெண்கள் கடத்தப்பட்டனர். அவர்கள் இருவரையும், தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சொகுசு பங்களாவுக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘அ’வருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஒரு வர்தான், அந்த பெண்களைக் கடத்திச் சென்றதாகவும், அடுத்த இடத்தில் இருக்கும் நபர் ‘அ’வருக்கு அந்தப் பெண்களை விருந்தாக்கிவிட்டு, தானும் அவரை 10 நாட் களுக்கு மேல் அனுபவித்தாராம். அந்தப் பெண்களில் ஒருவர் ‘அடுத்த’ நபரின் செல்போனை எடுத்து, அவருக்கே தெரியாமல் தனது வீட்டிற்குப் பேசிவிட்டார். அந்த செ ல்போன் எண்ணை வீட்டிலுள்ளவர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல் நிலையத்திலிருந்த கருப்பான ஏட்டு, அந்த எண்ணில் தொடர்பு கொண்டு அந்த ‘அடுத்த’ நபரை விசாரனை செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அடுத்த நபர் ‘என்னை யார் எனத் தெரியாமல் பேசுகிறாய்... மரியாதையாக உன் வேலையைக் காப்பாற்றிக்கொள்’ என மிரட்டியுள்ளார். அடுத்த கணமே அந்த ஏட்டை அழைத்த ஒரு இன்ஸ்பெக்டர் ‘அவர் யாருன்னு தெரியுமா? சோனியாகாந்தியை விட பவரானவர்... ஆள் தெரியாம பிரச்னை பண்ணவேண்டாம்’ என மிரட்டியுள்ளார். சில நாட்களில் அந்த ஏட்டு வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்கள் வீட்டார்களை மிரட்டி, தி.மு.க. வட்டச் செயலாளர் வீட்டில் குடி வைத்துவிட்டனர். அந்த வட் டச் செயலாளரை மீறி இவர்கள் எதுவும் செய்ய முடியாதபடி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தப் பிரச்னையையும் போலீஸார் தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

அதோடு, மதுரையில் நடந்த பாசி, பிஎம்சி போன்ற நிதி நிறுவனங்கள் செய்த மோசடிகளில் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கும், சில போலீஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது. மேலும் சுப்பிரமணியபுரம் பகுதியில் இலங்கை மூதாட்டி அபர்ணா என்பவரை கொலை செய்துவிட்டு, அவரின் சொத்துக்க¬ ளயும், செல்லூரில் ஒரு மூதாட்டியைக் கொலை செய்து அவரின் சொத்துக்களையும் சில தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் ஸ்வாகா பண்ணியுள்ளனர். இந்த வழக்குகளும் தற்போது தோண்டி துருவப்படுகிறது. ஏற்கெனவே பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்துக் கொண்டிருக்கும் அழகிரியின் சகாக்கள், அட்டாக் பாண்டியின் கைதுக்குப் பின்னர் மிரண்டு போய்த்தான் இருக்கின் றனர். அட்டாக் பாண்டியனுக்கு தி.மு.க. புள்ளிகள் அத்தனை பேரின் ரகசியங்களும் அத்துபடி. தன்னை கட்சியில் இருந்து நீக்க காரணமாக இருந்தவர்கள் சிலர் மீது ஏற்கெனவே கோபமாக இருக்கிறாராம். இந்த நிலையில் அவர் போலீஸில் ஏதாவது போட்டுக் கொடுத்தால் என்ன செய்வது என்று ஷாக்காகிப் போய் உள்ளார்கள்.

அழகிரியின் சகாக்கள் மதுரையை காலி செய்துகொண்டு இருப்பதால், மதுரையில் லேசாக சுதந்திரக்காற்று வீச ஆரம்பித்துள்ளது என்கின்றனர், மக்கள்.

படங்கள் : விக்கி

வீர.வெற்றிப்பாண்டியன்

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.