Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையும் இந்தியாவும் சர்வதேச நீதிமன்றத்தில் சந்திக்குமா?

Featured Replies

Posted by: on Jul 24, 2011

சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே., 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணை, மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன. சில ஆய்வாளர்கள் உட்பட பலர் ஐ.சி.ஜே.யையும் ஐ.சி.சி.யையும் ஒன்றாக எண்ணிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது உலக நீதிமன்றம் என்னும் சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice- I.C.J) என்பார்கள். இவ் ஐ.சி.ஜே. நாடுகளுக்கு இடையேயான சர்ச்சைகளை தீர்ப்பதற்கானது. ஐ.சி.சி. என்னும் (International Criminal Court - ICC) சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் என்பது 1998 ஆம் ஆண்டு ரோம் சாசனத்திற்கு அமைய உருவாக்கப்பட்டது.

2002 ஆம் ஆண்டு முதல் உலகில் மனிதாபிமான மனித உரிமை போர்க் குற்றங்களை புரிந்த தனி நபர்களை விசாரித்து தண்டனை வழங்கப்படுவதற்காக நிறுவப்பட்டுள்ளது. இவ்விரு நீதிமன்றங்களும், காரியாலயங்களும் நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரிலேயே அமைந்துள்ளன. இன்று வரையில் பல நாடுகளுக்கிடையேயான ஆட்சி உரிமை, எல்லைப் பிரச்சினைகள், கடல் எல்லைகள், ஆகாய பிரதேசங்கள், அணு குண்டு, எண்ணெய் வளங்கள் போன்ற விடயங்களை இவ் ஐ.சி.ஜே. விசாரித்துள்ளது.

இந்த அடிப்படையில் இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சில தீவுகள் மீதான ஆட்சி உரிமை; புக்கினோபசோ நையர், பேனி நையர், லிபியா சாட் ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட எல்லைத் தகராறுகள்; நிக்கரகுவா கொலம்பியா, கட்டார் பஹ்ரெயின் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சில தீவுகள் மீதான ஆட்சி உரிமை, கடற்பிராந்திய சர்ச்சைகள் சிலவாகும்.

இதேவேளை, லொக்கர்பி விமானம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அமெக்கா லிபியா, பித்தானியா, லிபியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சைகள்; அமெரிக்க கடற்படையினால் 1987 88 ல் ஈரான் எண்ணெய் குதங்கள் தாக்கப்பட்டமை; பிரான்ஸிற்கும் அவுஸ்திரேலியாவிற்குமிடையில் ஏற்பட்ட பசுபிக் பிராந்தியத்தில் அணுகுண்டு சோதனை, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் ஏற்பட்ட போர்க் கைதிகள், விமானத் தாக்குதல் போன்ற விடயங்கள் உலக நீதிமன்றத்தின் கவனத்திற்கு சர்ச்சைக்குரிய நாடுகளினால் கொண்டு வரப்பட்ட சில வழக்குகள் ஆகும்.

சர்ச்சைகள் தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் காணப்படும் உறவின் அடிப்படையில் இவ்விரு நாடுகளும் தமது சர்ச்சைகளை தீர்ப்பதற்கு சர்வதேச நீதிமன்றமான ஐ.சி.ஜே. யின் உதவியை நாடுமா? என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இதற்கான காரணிகளை ஆராயுமிடத்து இலங்கை இந்தியாவை ஐ.சி.ஜே.யிடம் முறையிடுவதற்கு சந்தர்ப்பம் மிக குறைந்தே காணப்படுகிறது. ஆனால் இந்தியா இலங்கையை ஐ.சி. ஜே.யிடம் முறையிடுவதற்கான காரணிகள் பெரிதாக காணப்படுகின்றன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியினால் 1974 ஆம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக அவ்வேளையில் இலங்கையின் பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க உள்நாட்டில் மிகவும் செல்வாக்ழந்து காணப்பட்ட காரணத்தினால் கச்சதீவை பெற்றுக்கொள்வதன் மூலம் சிறிமாவோ மீண்டும் செல்வாக்கு பெறமுடியுமென இந்திரா காந்தி நம்பியதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, இந்தியாவின் மத்திய அரசிற்கும் மாநில அரசான தமிழ்நாட்டிற்குமிடையில் சில அரசியல் முறுகல்கள் ஏற்பட்டதாகவும், இதற்கு பழிவாங்குகமாக மாநில அரசான தமிழ்நாட்டின் ஆதரவைப் பெறாமல் திருமதி இந்திரா காந்தி கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தரெனவும் கூறப்படுகிறது.

எது எப்படியிருந்தபோதும் கச்சதீவு பிராந்தியம் 1974 ஆம் ஆண்டின் பின்னரே இலங்கையின் தேர்தல் தொகுதியான ஊர்காவற்றுறையுடன் இணைக்கப்பட்டதாகவும், அதற்கு முன்னர் கச்சதீவு ஒரு பொழுதும் இலங்கை தேர்தல் தொகுதிகளில் காணப்படவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. வின் அமோக வெற்றி, இந்தியாவின் மத்திய அரசு தமிழ் நாட்டு மாநில அரசுடன் கலந்தாலோசித்து விடயங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது.

அண்ணா தி.மு.க. வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 16ஆவது விடயமாக இலங்கை வடக்கு கிழக்கு வாழ்மக்களின் இடப் பெயர்வு பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அதேவே ளை, ன்றாவது றையாக தமிழ்நாட்டின் தலமைச்சர் பதவியை வகிக்கும் செல்வி ஜெயலலிதா இலங்கை தமிழர் விடயத்தில் மிக வும் ஆதரவாக உள்ளதை நாம் காணக் கூடியதாகவுள்ளது. செல்வி ஜெயலலிதாவின் தற்போதைய செயற்பாடுகள், பிரபல நடிகரும் அண்ணா தி.க.மு.வின் ஸ்தாபகருமான எம்.ஜி.ராமச்சந்திரனை பிரதிபலிப்பவையாகவும் உள்ளன.

எம்.ஜி.ஆர். இலங்கைத் தமிழர்களுடன் மிக நெருங்கியவர் என்பதை யாவரும் அறிவர். இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையில் இனப்பிரச்சினையை தீர்க்கும் பொருட்டு 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களான தமிழர் தாயக பிரதேசங்கள் இலங்கை ஜனாதிபதியின் விசேட ஆணையின் பிரகாரம் ஒன்றாக இணைக்கப்பட்டன.

ஆனால் 18 ஆண்டுகளின் பின்னர் அதாவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின் நீதிமன்றத்தில் வழக்கை வெல்வதற்காக முன்னெடுத்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முறையற்றதென இலங்கை உச்ச நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. யாவரும் எதிர்பார்த்தது போல் உச்ச நீதிமன்றம் தனது தீர்வின் பிரகாரம் ஜனாதிபதி ஆணை மூலம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது சட்ட விரோதமானது என தீர்ப்பு வழங்கியது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் 2.3 ஆம் பந்தியின் பிரகாரம், வடக்கு கிழக்கு பற்றிய சர்வசன வாக்கெடுப்பை 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியிருக்க வேண்டும் அல்லது பிற்போட்டிருக்க வேண்டும்'' ஆனால் இவ்விரு விடயம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும்வரை ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால் சர்வதேச ஒப்பந்தத்தை இலங்கை மீறியுள்ளமை மிக தெட்ட தெளிவானது.

இவ்விடயமாக 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி வீரகேசரி வார இதழில் வெளியான கட்டுரையில் இலங்கை இந்திய உடன்படிக்கையை இலங்கை மீறியுள்ளதனால் இந்தியா எவற்றை செய்ய முயற்சிக்கலாமென அன்று ஆரூடம் கூறப்பட்டது இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கச்சதீவு வீரகேசரி வார இதழ் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதிக் கட்டுரையில் கூறப்பட்டது போல் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவியாக அவ்வேளையில் பதவி வகித்த அண்ணா தி..க. வின் செயலாளர் செல்வி ஜெயலலிதா 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி இந்திய மேல் நீதிமன்றத்தில் 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியின் காலத்தில் கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது தவறு என்றும், இதனால் இந்திய மீனவர் பெரும் கஷ்டத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தமிழ்நாடு மாநில அரசுடைய அல்லது மத்திய அரசினுடைய அனுமதி இல்லாது கொடுக்கப்பட்ட கச்சதீவு மீளப் பெறப்பட வேண்டுமென வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசு மௌனம் சாதித்து வந்தாலும் 2001 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவ்வேளையில் மீன் பிடித்துறை அமைச்சராக கடமையாற்றிய இப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியதாவது, "காலம் சென்ற பிரதமர் இந்திரா காந்தியினால் எம்மிடம் கையளிக்கப்பட்ட கச்சதீவை நாம் திரும்ப இந்தியாவிடம் கையளிக்க மாட்டோம்'' எனக் கூறியிருந்தார்.

செல்வி ஜெயலலிதாவினால் தாக்கல் செய்யப்பட்ட கச்சதீவு பற்றிய வழக்கு இன்றும் மேல் உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கிறது. 543 தமிழக மீனவர்கள் உயிழப்பு கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி வெளியான செய்திகளின் பிரகாரம் இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் 543 பேர் படு கொலை செய்யப்பட்டும் 2000 பேர் படுகாயம் அடைந்தும் 700 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை 78 இலங்கை மீனவர்களை இந்திய அரசு கைது செய்து காவலில் வைத்துள்ளதுடன் 16 மீன் பிடி படகுகளையும் தடுத்து வைத்துள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.

இவ்வேளையில் தமிழ் நாட்டு மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினைகள் தீரும் வரை ஓர் பொருளாதார தடையை இந்தியா இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாட்டின் தலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அரசை கேட்டுள்ளார். ஐ.சி.ஜே. வழக்குகள் இலங்கை இந்தியாவிற்கு தற்பொழுது முன்று முக்கிய விடயங்களான இலங்கை இந்திய ஒப்பந்தம், கச்சதீவு, மீனவர்கள் ஆகிய விடயங்கள் உள்ளன. இவ்விடயம் ஐ.சி.ஜே.வரை செல்வதற்கான சாத்தியக் கூறுகள் பெ தாக காணப்படுகின்றன.

இந்த அடிப்படையில் இலங்கை நேரத்தை வீண் விரயம் செய்யாது மற்றைய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற தீவுகள் மீதான ஆட்சி பிரயோகம், கடல் எல்லைகள், உடன்படிக்கை மீறல்கள் போன்ற வழக்குகளைப் படித்து இப்படியான வழக்குகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.உதாரணமாக கட்டார் பஹ்ரேன், நிக்கரகுவா கொலம்பியா, பெரு சிலி ஆகிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட தீவுகள் மீதான ஆட்சி பிரச்சினை; கம்போடியா தாய்லாந்து ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட பௌத்த விஹாரை பற்றிய சர்ச்சை; முன்னைய யூகொஸ்லேவியா அல்லது மஸிடோனியா விற்கும் கிறீஸ் நாட்டிற்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை சர்ச்சைகள், இலங்கை இந்திய விடயத்தில் நல்ல உதாரணங்களாக அமைகின்றன.

இதேவேளை, தற்பொழுது இலங்கையில் உள்ள நிலங்களையும் சொத்துகளையும் மற்றைய நாடுகளுக்கு விற்பனை செய்வதால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படவுள்ள வினைகள் பற்றி அறிய விரும்பினால் ஐ.சி. ஜே. இல் ஜேர்மனிக்கும், இத்தாலிக்கும் லீஞ் சென்ஸ்ரைனுக்கும் இடையில் ஏற்பட்ட வழக்குகளை இலங்கை அரசு படிப்பது புத்திசாலித்தனமானது. அத்துடன் அமெரிக்க ராஜங்க செயலாளரான திருமதி கிலாரி கிளின்டனுடைய சென்னை விஜயம், இந்திய வெளிநாட்டுப் பேச்சாளன் யூலை 15 ஆம் திகதி இலங்கை பற்றிய அறிக்கை; பொது நலவாய நாட்டுச் செயலகத்திற்கும் சர்வதேச கிமினல் நீதிமன்றத்திற்கும் இடையே ஜூலை 13 ஆம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை ஆகியவற்றின் ஆள்பரியத்தை இலங்கை விளங்கிக் கொள்ளுமென நம்புகிறேன்.

இலங்கை, தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தை வெளிநாட்டு உதவிகளுடன் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இலங்கை அரசு தற்பொழுது எதிர்கொள்வது சர்வதேச சமுதாயத்தின் நெருக்கடிகளையும் சர்வதேச நீதிமன்றங்களின் சட்ட நடவடிக்கைகளையுமே! இவை அவ்வளவு சுலபமான விடயங்கள் அல்ல!

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்

http://www.tamilkathir.com/news/5127/58//d,view.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.