Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Zero Casualties & Zero Tolerance இந்தியாவின் தர்ம சங்கடம்

Featured Replies

பொதுமக்கள் இழப்பு இன்றிய ( Zero Casualties) பூரண சகிப்பு தன்மை கொண்ட (Zero Tolerance) இராணுவ நடவடிக்கைகள். இவை கேட்க நன்றாக இருக்கும் மனிதாபிமானத்தை போற்றும் அனைவரும் வரவேற்கும் சொற்கள்தான் ஆனால் நடப்பது?

.

பூட்சிய பொதுமக்கள் இழப்பு என நாற்பதாயிரத்திற்கு அதிகமான தமிழ் மக்களை இரு சிறிய பகுதிக்குள் குண்டு வீசியும், எறிகணை வீசியும், பட்டிணி போட்டும் கொன்றது சிங்கள அரசு அதற்கு பூட்சிய பொதுமக்கள் இழப்பு என அழகாக பெயர்வைத்து உலகை ஏமாற்றியது சிங்களம்.

.

ஆனால் இரண்டு வருடத்தில் தனது வாயாலேயே சிங்களம் உண்மைகளைகட்டவிழ்த்துவிட்டுக்கொண்டு இருக்கின்றது. பூட்சிய பொதுமக்கள் இழப்பு என்பது எல்லோரும் அறிந்ததொன்றுதான். ஆனால் அடுத்தது என்ன ? அதுதான் இலங்கை போன்று அதே பாணியில் இந்திய அரசாங்கம் இரகசியமாக செய்யும் மாவோ வாதிகளுக்கு எதிரான நடவடிக்கை. இங்கு பல ஆண்டுகளாக உரிமை மீறல்கள் படுகொலைகள் நடக்கின்றன ஆனால் மன்மோகன் சிங் அரசோ தாம் அனைத்து நடவடிக்கைகளையும் பூரண சகிப்புத்தன்மையுடன் செய்வதாக கூறி வருகின்றது. ஜம்மு காஸ்மீர் மனிப்பூர் ஆகிய மா நிலங்களில் இந்திய விசேட படையினரின் கொடுமைகள் எண்ணிலடங்கா.

.

தனக்காக தானே பேசுமா இந்தியா?

.

நடப்பு மாதம் சுழற்சி முறையிலான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைமைப் பதவி இந்தியாவிற்கு வருகின்றது. இதன் போது இந்தியா, சிரியா, அமெரிக்கா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய அறிக்கைகள் உள்ளன. இந்தியாவிற்கு இது ஒரு தர்ம சங்கடமான நிலைதான். ஏனென்றால் அமெரிக்க முன் நாள் அதிபர் ஜோர்ச் புஸ், துணை அதிபர் டிக்செனி, பாதுகாப்பு செயலர் ரம்ஸ்பீல் ஆகியோர் மீது குவாண்டனாமோவில் கைதிகளை சித்திரவதை செய்தமை தொடர்பான விசாரணை அறிக்கைகள் உ.ள்ளன.

.

அடுத்து பர்மாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள் உள்ளன. அதுபோலவே இலங்கை தொடர்பான அறிக்கைகளும் இருக்கின்றன. இதில் முதலாவதாக இந்தியா தான் சுத்தமானவன் என்பதனை கூறவேண்டும். கூறுவார்களா?

.

அடுத்து அமெரிக்காவின் அறிக்கையினை இந்தியா அமத்தியே வாசிக்கும் தொடர்ந்து இலங்கை இந்தியாவின் நண்பன் என்ற வகையில் அதனையும் பெரிது படுத்தாது. பர்மா மீதே கூடுதல் கவனம் எடுக்க வாய்ப்புண்டு.

.

இங்கு பிரச்சினை என்னவெனில் அனைத்துலக சமூகத்தின் முன்னால் இந்தியா தான் ஒரு நல்ல பிள்ளை என காட்டவேண்டும். அதற்காக இந்தியா என்ன செய்யும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஈழநாதம்

ZERO TOLERANCE of Manmohan Singh

Indian%20army%20killed%20Maoist%20supporters.jpg

ZERO CASUALTIES of Mahinda Rajapaksha

Srilankan%20army%20killed%20Tamils.jpg

இந்தியா ஒரு பெரிய அண்டை நாடு. அதன் எதிரிகள் பாகிஸ்தானும் சீனாவும். இன்று இவர்கள் இருவரும் சிங்கள நாட்டின் நண்பர்கள். இந்ந்த கோட்டில் நாம் இந்திய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் ஆதரவுதேடி பிரச்சாரம் செய்யவேண்டும்.

இப்படியான கருத்துக்கள் இந்தியாவில் பலப்பட தொடங்கியுள்ளன. இந்த தருணத்தை பயன்படுத்தி கூடுதலான ஆதரவை வளர்க்க வேண்டும்.

உள்ளுக்குள் என்ன தான் இருந்தாலும் இன்று வெளியில் நாம் சொல்லவேண்டியது, 'இந்தியா எமது நண்பன்'.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒரு பெரிய அண்டை நாடு. அதன் எதிரிகள் பாகிஸ்தானும் சீனாவும். இன்று இவர்கள் இருவரும் சிங்கள நாட்டின் நண்பர்கள். இந்ந்த கோட்டில் நாம் இந்திய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் ஆதரவுதேடி பிரச்சாரம் செய்யவேண்டும்.

இப்படியான கருத்துக்கள் இந்தியாவில் பலப்பட தொடங்கியுள்ளன. இந்த தருணத்தை பயன்படுத்தி கூடுதலான ஆதரவை வளர்க்க வேண்டும்.

உள்ளுக்குள் என்ன தான் இருந்தாலும் இன்று வெளியில் நாம் சொல்லவேண்டியது, 'இந்தியா எமது நண்பன்'.

நன்றி பதிவிற்கு, எமக்கு தேவை இந்திய தமிழ் & மத்திய அரசின் ஆதரவே, அவர்களுக்குள் என்ன அடிபடுகிறார்கள் என்பதல்ல, அதை கேட்க அங்கேயே பல அமைப்புக்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.

  • தொடங்கியவர்

நன்றி பதிவிற்கு, எமக்கு தேவை இந்திய தமிழ் & மத்திய அரசின் ஆதரவே, அவர்களுக்குள் என்ன அடிபடுகிறார்கள் என்பதல்ல, அதை கேட்க அங்கேயே பல அமைப்புக்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் உரிமை மீறல்கள் எல்லொருக்கும் தெரிந்தாலும் உண்மையில் இனி இந்தியா உலக வல்லரசுகளில் ஒன்றாக பரிணமிக்க அது சரியான பாதையில் செல்லவேண்டும் என உலக மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்ரன.

INDIA SHOULD BE FIRST RIGHT(S) FOOT

என கூறுகின்றன. இதனை உள்ளூரிலும் பிரச்சாரப்படுத்துவதன் ஊடாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.