Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம்

Featured Replies

இன அழிப்பு நோக்கி திரும்பியுள்ள சிங்கள அரசின் நிழல் யுத்தம்

-ஜெயராஜ்-

யுத்த நிறுத்த மீறல் என்பது தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தரப்பிற்கும்- விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஆயுத மோதல்; யுத்த நிறுத்த உடன்பாட்டின்படி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரங்கள,; அனுமதிகள் என்பனவற்றிற்கும் அப்பால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை என்ற வடிவத் தினை முற்றுமுழுதாகப் பெற்றுக்கொண்டு விட்டது.

இவற்றிற்குத் தொடர்ச்சியான பல சம்பவங்களைச் சுட்டிக்காட்டமுடியும். அதாவது விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான நிழல் யுத்தத்திற்கு அப்பால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன ஒடுக்குமுறைகள் அண்மைக்காலத்தில் மிகத் தீவிரம்பெற்று இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமிழர் தாயகப்பகுதியில் பெரும் அச்சமும், பீதியும் நிலவும் பெரும் பயங்கரச்சூழ்நிலை ஒன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அதாவது யுத்த நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னதான காலத்தில்- யுத்த காலத்தில்- தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து ஒடுக்குமுறைகளும் மீண்டும் தமிழர் தாயகத்தில் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. இந்த வகையில்

1. ஆயுதப்படையினரால் கைது செய்யப்படு வோர் காணாமல் போதல்,

2. படுகொலை செய்யப்படுதல்,

3. கோரமான தாக்குதல்களும், சித்திரவதைகளும்,

4. பாலியல் பலாத்காரமும், படுகொலையும்.

என சிறிலங்கா ஆயுதப்படையின் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடர்கின்றன.

இப்படுகொலை மற்றும் இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை எவராலும் தடுத்து நிறுத்த முடியாததொரு நிலை உருவாகியுள்ளது என்பது வெளிப்படையானது. அதிலும் குறிப்பாக இச்சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எதனையுமே செய்யமுடியாதுள்ளது. இம்மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எந்தவித ஒத்துழைப்பையும் படைத்தரப்பு வழங்குவதாக இல்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்டப்பிரதிநிதிகளே கைவிரித்து விட்டனர்.

தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இவ்வொடுக்குமுறை நடவடிக்கையில் சிறிலங்கா ஆயுதப்படைத்தரப்புடன் தமிழ்த் தேச விரோதக்குழுவினரும் இணைந்துள்ளனர் என்பது வெளிப்படையானது. ஆனால் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் தமிழினத்தேச விரோதக்குழுக்கள் மாறுபட்டவையாகவுள்ளன என்பதே வேறுபாடானது.

அதாவது மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளில் இத்தேசவிரோதக்குழுக்களாகச் செயற்படுபவர்களில் கருணா குழுவினர் முக்கிய பாத்திரத்தை பெற்றுள்ளனர் எனின் யாழ். குடாநாட்டில் ஈ.பி.டி.பி.யினர் அப்பாத்திரத்தை வகிக்கின்றனர். ஆனால் இவ்விரு குழுக்களும் பெயரளவில் வேறுபாடனவர்களேயொழிய அவர்களின் பணி ஒன்றேயாகும்.

இன்று தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் பல இலக்குகளையும், நோக்கங்களையும் கொண்டவையாகவுள்ளன. இப்படுகொலைகள் தமிழ்த் தேசியத்தின் பால் உறுதியான நிலைப்பாடு கொண்டவர்கள் தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்கொண்டு செல்ல முற்பட்டவர்கள் என முக்கிய நபர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த வகையில் ஊடகவியலாளர்கள் ஜி.நடேசன், டி.சிவராம், விரிவுரையாளர் தம்பையா போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வகையில் இறுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை ஆர்வலருமான ஜோசப் பரராசசிங்கம் அவர்களின் படுகொலையும் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்தாகப் பழிதீர்ப்பது போன்ற தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுவது அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எடுத்துக்காட்டாக கருணா குழுவிலிருந்த இரு இளைஞர்கள் சிலரைச் சுட்டுக்கொன்று விட்டு விடுதலைப் புலிகளின் அமைப்பிடம் சரணடைந்த வேளை சரணடைந்த ஒருவரின் சகோதரிகள் மிலேச்சத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

இந்த வகையிலேயே ஆயுதப்படைத் தாக்குதலுக்குள்ளாகும் இடங்களில் வாழும் அன்றி அப்பகுதியூடாகப்பயணிக்கும் மக்களைத் தாக்குவதும், சிறிலங்காப் படைத்தரப்பு படுகொலை செய்ததுமுண்டு. இந்த வகையில் பலர் அண்மைக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவற்றிக்கும் மேலாக அச்சம், சந்தேகம் என்பன காரணமாகச் சிறிலங்காப் படைத்தரப்பால் பல இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தி விடுவார்களோ என்ற அச்சம், விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக இப்படுகொலைகள் இடம் பெறுபவையாகவுள்ளன. இவை தவிர விடுதலைப் புலிகளுடன் தொடர்பு, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகம், ஐயப்பாடு என்பவற்றின் அடிப்படையிலும் பல படுகொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த வகையிலானதே இறுதியாக நேற்று முன்தினம் யாழ். மானிப்பாயிலும் தாயும், இரு மகள்மாரும் படுகொலை செய்யப்பட்டமையும், தகப்பனும், மகனும் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டமையும் ஆகும்.

இவற்றிற்குப்புறம்பாக இனவெறித்தனத்தின் வெளிப்பாடாகவும், இனப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. இந்த வகையில் இடம்பெற்ற படுகொலைகளில் முக்கியமானதே திருமலையில் ஐந்து பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும்.

இப்படுகொலைகளுக்குச் சிங்கள ஆட்சியாளர்களின்;ஃ ஆயுதப் படைத்தரப்பின் இன வெறியைத்தவிர வேறு காரணங்கள் எதுவுமே இருக்க முடியாது. ஏனெனில் இப்படுகொலைகளுக்கு காரணிகள் எதுவுமில்லை. பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும், பல்கலைக்கழகங்கள் செல்லவுள்ள மாணவர்கள் உரையாடிக்கொண்டிருந்த வேளையில் இப்படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை தமிழ் மக்கள் மீதான இவ்வினப்படுகொலைகளுக்கு எத்தகைய காரணிகள் பின்னணியாக இருப்பினும் சிறிலங்கா அரசினதும், அதன் ஆயுதப்படைத்தரப்பினதும்- தீர்மானங்களே அடிப்படையானவையாகும். அதாவது இப்படுகொலைகள் சிறிலங்கா அரசினதும், ஆயுதப்படையினரதும் புலனாய்வுத்துறை உட்பட- அங்கீகாரம், அனுசரணையின்றி நடைபெறுபவையாக இல்லை என்பதே நிதர்சனமானதாகும்.

சிறிலங்காவின் புதிய இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, வடக்கு-கிழக்கைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதற்கான வழிமுறையாக இனப் படுகொலையையே தனது மார்க்கமாகத் தெரிவு செய்துள்ளதை அவரது சில அறிவிப்புக்களே வெளிப்படுத்தப்போதுமானதாகும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.