Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை-

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடத்தலவின்ன வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை-

உடத்தலவின்ன படுகொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை ஆகியோர் உட்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 5 பேருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் நாள் பொதுத் தேர்தலின் போது கண்டி உடத்தலவின்ன பிரதேசத்தில் வானில் பயணித்த 10 முஸ்லிம் வாலிபர்களை சுட்டுக் கொன்றமை மற்றும் பலரைக் காயப்படுத்தியமை, கொலைக்குத் திட்டமிட்டமை, அதற்கு ஆதரவளித்தமை, கள்ள வாக்குப் பதிவு, வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்காளர் அட்டைகளை அபகரித்தமை உட்பட 72 குற்றங்கள் தொடர்பாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பமைச்சர் அனுருத்த ரத்வத்தை, அவரின் இரு புதல்வர்களான லொஹான் ரத்வத்தை, சானுக ரத்வத்தை, இராணுவ லெப்டினன் விஜேரத்ன, இராணுவ மற்றும் கொமாண்டோ படையினர் உட்பட 15 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீபானி விஜேசுந்தர, எரிக் பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ச ஆகியோர் முன்னிலையில் 2003 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் நாள் இந்த வழக்கு விசாரணை தொடங்கியது.

பின்னர் நீதிபதி எரிக் பஸ்நாயக்க மேல்முறையீட்டு நீதிபதியாக பதவியேற்றதையடுத்து இரண்டு நீதிபதிகள் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது.

வழக்கு விசாரணையின் போது போதிய சாட்சியமின்மையினால் இரண்டு பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அனுருத்த ரத்வத்தை உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அரசியல் பலமப்பா!!

ரத்வத்தையின் மகனும் நின்ற சுட்டதைப் பலர் பாத்திருப்பதாக சொன்னார்கள். பழிவாங்கப்பட்டிருப்பது மற்றவர்கள்

கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என கூறப்படும் ரத்வத்தையும் மகனுக்கும் விடுதலை. ஆனால் இதை விடய சிறிய வழக்கில் எதிர்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்காவுக்கு ஜெயில். நீதிதுறை அதிகாரத்தில் உள்ளவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.