Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவுத் தடுமாற்றம்! -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் இந்திய அரசின் நெடுகாலக் குறிக்கோள் தோல்வி அடைந்துள்ளது. இதை விமர்சகர்கள் மாத்திரமல்ல கொள்கை வகுப்பாளர்களும் ஒத்துக் கொண்டுள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போர் வெற்றி அடைவதற்கு இந்தியா கடுமையாக உழைத்தது. சிங்களத்தின் வெற்றி இந்தியாவின் வெற்றி என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசின் தந்திரோபாயம் வகுக்கப்பட்டது. அது எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் எதிர்பாராத தோல்வியைக் கொடுத்துள்ளது.

அதாவது இலங்கையைக் கைப்பிள்ளையாக்கும் திட்டம். விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் பூசாரி என்பார்கள். அந்தக் கதையாகி விட்டது இந்தியாவின் பாடு. தமிழ் நாட்டைத் தட்டியெழுப்பியது தான் இந்திய மத்திய அரசின் சாதனை. எதிர்ப்புக் கிளம்பாது என்று நினைத்தவர்களுக்கு எதிர்ப்பை வெளிப்படையாகக் காட்டும் மாநில அரசின் தோற்றம் அதிர்ச்சி அளித்துள்ளது.

இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டு வரவேண்டும் என்ற தமிழக அரசுத் தீர்மானத்தை மத்திய அரசு உதாசீனம் செய்ததோடு பொருளாதார வலுப்படுத்தலையும் மேற்கொள்கிறது. இது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வினவிய போது அவர் பொருளாதாரத் தடை இந்திய நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றார்.

மேலும் விளக்கிக் கூறிய பிரதமர் சீனாவின் பொருளாதாரப் பங்களிப்பும் இலங்கையில் பிரசன்னமும் வலுப்பெற்றுவிடும் என்றார். இந்த விளக்கம் கடும் விமர்சனப் புயலைக் கிளப்பியுள்ளது. ஆகஸ்து 12ம் நாள் பிஜேபி, லோக் ஜன் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ‘இந்த நிலைப்பாடு இந்தியாவின் கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு” என்று டில்லிப் பேரணியில் கூறினார்கள்.

இந்தப் பேரணியில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் நீதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருமான யஸ்வந்த் சின்ஹா ”இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை காரணமாகவே இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து” விட்டதாக குற்றஞ் சாட்டினர்.

இதே கருத்தை லோக் ஜன் சக்திக் கட்சித் தலைவர் றாம் விலாஸ் பஸ்வான் அவர்கள் ஆமோதித்தார். இந்திய அரசு இலங்கையுடன் பேணும் நெருக்க உறவுக்குச் சீனாவைக் காரணம் காட்ட முடியாது என்று கூறிய யஸ்வந்த் சின்ஹா இந்திய வெளியுறவுக் கொள்கை சீனாவைப் பின்புலமாகக் கொண்டா உருவாக்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார்.

தமிழ் நாட்டின் பிரபல சிற்றேடு யூனியர் விகடன் கேள்வி பதில் மூலம் இந்திய வெளியுறவுக் கொள்கையின் இலக்கை விமர்சித்துள்ளது.

கேள்வி: இலங்கைக்கு இந்தியா ஏன் பயப்பிடுகிறது..?

பதில்: இந்தியா பயப்படுவது இலங்கையைப் பார்த்து அல்ல. இலங்கைக்கு ஆபத்பாந்தவனாக இருக்கும் சீனாவைப் பார்த்துத் தான். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து சீனாவின் குடைச்சல் சகிக்க முடியாததாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட நாடு இலங்கையில் வந்து உட்கார்ந்தால் என்னவாவது என்பது தான் இந்தியாவின் பயம். அதற்காக இலங்கை செய்வதற்கு எல்லாம் இந்தியா தலையாட்டினால் அந்த நாட்டுக்குப் பக்கத்துக் கூண்டில் நிற்க வேண்டியது தான்.

இலங்கைக்குச் சாதகமான சரணாகதி வெளியுறவுக் கொள்கைக்குப் பரவலான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ”இலங்கை மீது ஆயுதமின்றிப் போர் தொடுப்போம். இந்தியாவில் எல்லோரும் ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறோம். என்பதை உலகிற்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்று அடுத்த தேர்தலில் வெற்றி பெறவிருக்கும் பிஜேபியின் சின்ஹா முழக்கமிட்டார்.

காங்கிரஸ் அரசிற்கு நெருக்கடி வலுப்பெறுவதை இந்திய ஊடகங்கள் உறுதி செய்கின்றன. உடனடியாக இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால் மீளாய்வு ஏற்படும் என்பதை மறுக்க இயலாது.

-க.வீமன்-

http://www.pathivu.c...ticle_full.aspx

Edited by தமிழ் அரசு

இந்திய வரலாற்றில் இருந்து காங்கிரஸ் கட்சியை அழிக்கும் வாய்ப்பு இந்திய மக்களுக்கு முன் உருவாகி வருகின்றது. இந்த கட்சியை அழிக்காவிட்டால் இந்தியாவை சீனா ஒருநாள் அழிக்கும்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள சோனியா வர்க்க அரசியல், ஒட்டு மொத்த இந்திய மக்களையும் தனது குடும்பச்சொத்து போன்று நினைத்து ஏமாற்றி வருகின்றது.

- ஊழலை எதிர்த்தால் அது ஜனநாயகம் இல்லை என்கிறது

- தமிழர்களை அழித்த போர்குற்றத்தை மூடி மறைக்கின்றது

- கொலைகாரன் இராஜீவின் பெயரின் தமிழக உறவுகளை பழிவாங்குகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்கு இந்தியா (காங்கிரஸ் கட்சி) செய்த துரோகத்துக்கு பிராயசித்தம் செய்ய நல்ல வாய்ப்பு இதை சரியான முறையில் செய்யாவிட்டால் ஈழத்தமிழரை அழித்த இந்தியா என்பதை வரலாறு சொல்லும்.

அசல் பிச்சைக்காரர்கள் என்பதை சீனாவுக்காக ஆடும் கூத்தை பார்த்தால் தெரியவில்லையா?

மானம், ரோஷம் எதுவுமில்லாத காட்டுமிராண்டி ஜனநாயகக் கும்பல்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.