Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது

Featured Replies

‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு

சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

n3.jpg

மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தலைமறைவாகியிருந்த இவரை மலேசிய அரசாங்கம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

நாடுகடத்தப்பட்ட உகண்டா பாலா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக மீண்டும் இலங்கைவர முற்பட்டபோதே சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

வெள்ளவத்தை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த இவரை ஆட்களை வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக அனுப்புதல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சி.ஐ.டி.யினர் இவரை தேடி வலைவிரித்து வந்துள்ளனர்.

ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் விடயத்தில் முன்னணி விமானசேவை ஒன்றில் கடமைபுரியும் இரு ஊழியர்களுடன் இணைந்து இவர் செயற்பட்டுவந்துள்ளார். குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேசமயம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதிலும் பாலா சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் சி.ஐ.டி.யினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பாலாவிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் எவரும் இருப்பின் 011-2422176 அல்லது 011-2392917 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ பணிப்பாளர், குற்றப் புலனாய்வு திணைக்களம், கொழும்பு-01 என்ற முகவருக்கோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.thinakara...18/?fn=n1108183

Edited by akootha

‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது

மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மலேசியாவில் தலைமறைவாகியிருந்த இவரை மலேசிய அரசாங்கம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது.

நாடுகடத்தப்பட்ட உகண்டா பாலா கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக மீண்டும் இலங்கைவர முற்பட்டபோதே சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர்.

http://www.thinakara...18/?fn=n1108183

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

ஆம் மல்லையூரான், இந்த பத்திரிக்கை, தினகரன், சிங்களத்தின் அரச நிர்வாகத்துக்குள் (லேக் ஹவுஸ்) இயங்கும் பத்திரிகை. முன்கூட்டியே எல்லாம் தெரிந்தும் 'மடக்கி பிரித்தனர்' என தம்மை தாமே மார்தட்டி கூறியுள்ளார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.