Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசை சிக்கவைக்கவே மூன்று பேரைத் தூக்கிலிடுகிறார்கள்!''சீமான்

Featured Replies

ரலாறு படிப்பதற்கு மட்டும் அல்ல; படைப்பதற்கும்தான்!'' - என்று மாணவர் படைக்கு அழைப்பு விடுத்து, மாணவர்கள் படையைத் திரட்​டத் தயாராகிவிட்டார் சீமான்.

'நாம் தமிழர் கட்சி’யின் மாணவர் பா​சறையின் முதல் கலந்தாய்வுக் கூட்டம், கடந்த 15-ம் தேதி, சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்தது. பேரா​சிரியர் தீரன், சாகுல் ஹமீது, தடா சந்திரசேகர், கலைக்கோட்டுதயம் ஆகியோ​ருடன் சீமான் மேடையேற... மாணவர்கள் மத்தியில் பலத்த ஆரவாரம்!

நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கு எப்படி இருக்க வேண்​டும்? அடுத்த இலக்கு என்ன என்பவை​பற்றி விரிவாக அலசப்பட்டது. இதில் பேசிய இளைஞர் பாசறையின் ஒருங்கிணைப்​பாளர்​களான இளமாறன், ராஜீவ்காந்தி ஆகியோரின் பேச்சுதான், வந்திருந்தவர்களை முறுக்கேறச் செய்தது.

முதலில் பேசிய இளமாறன், ''தமிழ்நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் உள்ளன. இவற்றில் எல்லாம் இணையாமல், 'நாம் தமிழர் கட்சி’யில் நான் ஏன் இணைந்தேன் தெரியுமா? சீமான் ஒரு நடிகர், இயக்குநர் என்ற கவர்ச்சியால் அல்ல. ஈழத்தில் நமது இனம் அழிக்கப்பட்ட சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. மற்ற கட்சிகள் தேர்தல் வந்ததும் சில அரசியல் கணக்கு வழக்குகளுக்காக 'கப்சிப்’ என்று அமைதியாகிவிட்டனர். சீமான் ஒருவர்தான், காங்கிரஸைக் கருவறுக்கத் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தார். தமிழர் நலனுக்காகப் போராட, இதுபோன்ற துணிச்சலான ஒரு தலைவனைத்தான் நான் எதிர்பார்த்தேன்... இணைந்தேன். தமிழகத்தில் விரைவில் நமது கட்சி, ஆட்சிக்கு வரும். துளித்துளியாய் இணைவோம், பெருங்கடலாகும் கனவோடு!'' என்று கைத்தட்டலை அள்ளினார்.

அடுத்துப் பேசிய ராஜீவ்காந்தி, ''21 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நாம் அனுமதிக்கக் கூடாது. அப்சல் குரு என்ற பயங்கரவாதிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டபோது, காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத், 'அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்தால்... காஷ்மீர் கலவர பூமியாகும்!’ என்றார். இன்னொரு காஷ்மீர் அமைச்​சரான ஃபரூக் அப்துல்லா, 'அப்சல் குருவைத் தூக்கில் போட்டுக்கொள்ளுங்கள்.

அதுபற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், தண்டனை விதித்த நீதிபதியின் உயிரைப்பற்றியும், அதை நிறைவேற்றப்போகும் போலீஸாரின் உயிரைப்​பற்றியும்தான் கவலைப்படுகிறேன்!’ என்று கூறினார். அதே வார்த்தையைத்தான் இன்று நான் மத்திய அரசுக்குச் சொல்ல விரும்புகிறேன். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நினைப்பவர்களின் உயிரை நினைத்து நானும் கவலைப்படுகிறேன். காலம் காலமாக தமிழர் நலனுக்கு விரோதமாகச் செயல்படுகிறது காங்கிரஸ். பயங்கரவாதத்தை ஒழிப்போம், காங்கிரஸை வளர்ப்​போம் என்கிறார் தங்கபாலு. காங்கிரஸை ஒழித்தாலே, பயங்கரவாதம் ஒழிந்துவிடுமே!'' என்று முடிக்க... தொடர்ந்து விசில் மழை!

இறுதியாக மைக் பிடித்த சீமான், ''ஈழ விடுதலைக்​காகத் தீக்குளித்த முதல் தமிழன் அப்துல் ரஹூப்தான், நமது மாணவர் பாசறையின் உந்துசக்தி. கற்றவர்கள்தான் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அந்த அடிப்படையிலேயே தன்னலம் அற்றுப் பாடுபட உங்களை அழைக்கிறேன். விலகி நிற்பது பிரச்னைக்குத் தீர்வாகாது. 'மௌனமாக எப்போது ஒதுங்க நினைக்கிறோமோ... அது மரணத்துக்குச் சமம்’ என்பார் மார்ட்டின் லூதர் கிங். எனவே, தமிழர் நலன் மீது அக்கறை செலுத்தும் அரசைத் தீர்மானிக்க, மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுப்போம்...'' என்று மாணவர் பாசறை நோக்கம் குறித்துப் பேசியவர், தொடர்ந்து காங்கிரஸை நோக்கி கர்ஜித்தார்...

''தூக்கு தண்டனை விதிக்க எட்டு ஆண்டுகள்... கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டுகள்... இப்படி இத்தனை நாளும் காலம் தாழ்த்திவிட்டு, தற்போது தமிழக அரசை இக்கட்டில் ஆழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட முடிவு​எடுத்து இருக்கிறது இந்த காங்கிரஸ் அரசு. இலங்​கை அரசின் மீது போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டி, தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அனைத்து தமிழகக் கட்சிகளும் இதை வரவேற்றுப் பாராட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள ஒற்றுமையை உடைக்கவே, நயவஞ்சக காங்கிரஸ் அரசு, மூவர் மீதான மனுக்களை நிராகரிக்க​வைத்து, தமிழக அரசுக்கு சிக்கலை உண்டு பண்ண நினைக்கிறது. உலக நாடுகளில் 135 நாடுகள் தூக்கு தண்டனையை ரத்து செய்துவிட்டன. தூக்கு தண்டனை அமலில் உள்ள 58 நாடுகளில் இந்தியா முதலாவதாக உள்ளது. நாம் ரத்து செய்தவர் பட்டியலில் இருக்க வேண்டிய நாடு. கொலைக்குக் கொலை தீர்வாகாது.

தேசத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்வதைத் தவிர, மற்ற எல்லா வேலை​களையும் காங்கிரஸ் செய்து வருகிறது. மானம் உள்ள காங்கிரஸ்காரன் துணிவு இருந்தால் என் கேள்விக்குப் பதில் சொல்லட்டும்... '65 ஆண்டுகள் இந்தத் தேசத்தை ஆண்டார்களே... உடல்நிலை சரி இல்லாத உங்கள் அன்னை சிகிச்சைக்காக ஏன் அமெரிக்கா ஓடுகிறார்? இதுதான் இதுவரை நீங்கள் ஆற்றிய சாதனையின் லட்சணம்!'' என்று அவர் சிவக்க, பிழம்பாக ஆர்ப்பரித்தார்கள்இளைஞர்கள்.

Thanks to Junior Vikatan.

To see the pictures of this news...

http://www.thedipaar...ws.php?id=32737

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசு மனம் வைத்தால், தனது அதிகாரத்தை பயன் படுத்தி அவர்களை விடுதலை செய்யலாம் என்று நினைக்கின்றேன்.

முதல்வர் அதனைச் செய்தால் குற்றம் செய்யாதவர்களை, தூக்கிலிருந்து காப்பாற்றிய பெருமை கிடைக்கும்.

  • தொடங்கியவர்

தமிழக முதல்வர் நிச்சயம் உலக தமிழர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவார்

இறுதியில் பயங்கரவாதி ராஜீவின் வீட்டுக்குள்ளேயே இருக்கும் உண்மையான கொலைகாரர்களை நோக்கி விசாரணை சென்றுவிடும் என்று பயப்படுவதால் மூவரை தூக்கில் போட முயலுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.