Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் அடாவடி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க இராணுவம் தயார்: சரத் பொன்சேகா

யாழ்ப்பாணத்தில் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க சிறிலங்கா இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு நிலைமைகளை நேற்று வெள்ளிக்கிழமை சரத் பொன்சேகா பார்வையிட்டார்.

அதன் பின்பு அவர் கூறியதாவது:

ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்புக்குப் பின்னர் படையினர் மீதான தாக்குதல் செய்தி எதுவும் வரவில்லை. யாழ். குடாவில் எந்தச் சூழலுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவம் தயார் நிலையில் இருப்பது திருப்தியளிக்கிறது.

யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதில் எமது பங்களிப்பை நாம் செய்திருக்கிறோம். ஜெனீவா பேச்சுக்களுக்கான அறிவிப்பையடுத்து விடுதலைப் புலிகளும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.

இருந்தபோதும் நாம் குடாநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அலட்சியமாக இருக்கவில்லை. எந்த நேரத்திலும் எந்தத் தாக்குதலுக்கும் முகம் கொடுக்க தயாராக உள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளானது பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு உதவியாக உள்ளது. இந்தத் தேடுதல் நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு சிறிய அளவில்தான் தொந்தரவு உள்ளது என்றார் அவர்.

யாழ்ப்பாணத்தில் தளபதிகளுடன் அவர் சந்தித்து உரையாடினார். தேடுதல் நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிற ஆயுதங்களையும் அவர் பார்வையிட்டதாக இராணுவத் தரப்பினர் தெரிவித்தனர்.

தகவல் மூலம்- புதினம்.கொம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அச்சுறுத்தலை மறைக்க நாடகமாடும் இராணுவம்

யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுவினரது அச்சுறுத்தலால் பெருந்தொகையாக மக்கள் வெளியேறிவருவதை மறைக்க துண்டுப் பிரசுர நாடகத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் பொதுமக்கள் மீது மேற்கொண்ட அச்சுறுத்தல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளால் பொதுமக்கள் 25,000 பேருக்கு மேல் இடம் பெயர்ந்து வன்னி மாவட்டத்திற்குச் சென்றுள்ளனர்.

இடம்பெயர்ந்தோர் பற்றி பிழையான தகவல்கள் அடங்கிய விவரங்களை துண்டுப் பிரசுரங்களை யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இத்துண்டுப் பிரசுரத்தில் உண்மைக்குப் புறம்பாக பல விடயங்களைத் தெரிவித்துள்ளதுடன் இரவுடன் இரவாக பொது மக்கள் கூடும் இடங்களில் ஒட்டிவிட்டும் சென்றுள்ளனர்.

அத்துண்டுப் பிரசுரம் விவரம்:

தற்போது யாழ்ப்பாணத்தில் நிலவும் நெருக்கடி காரணமாக சாதாரண தமிழ் மக்கள் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் தமது இருப்பிடங்களைக் கைவிட்டு பாதுகாப்பற்ற பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதாக மக்கள் விரோத குழுவொன்று உலக நாடுகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால் மாவீரர் மற்றும் போராளிகள் குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இடம்பெயர்ந்துள்ளதாக அறிய முடிகின்றது. கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிதாக இந்த அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள் மற்றும் கொடுமைகளினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்காலத்தில் இந்த அமைப்பினருக்கு எதிராக செயல்படுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே அந்த குடும்பங்கள் தற்போது இடம்பெயர்ந்து செல்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவினருக்கு சமுதாயத்தில் முகம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தமது இருப்பிடங்களைக் கைவிட்டு யாரும் இடம்பெயரத் தேவையில்லை என்பதுடன் சகல மக்களையும் பாதுகாப்பதற்குப் பாதுகாப்புப் படையினர் தயாராக இருப்பதுடன், இந்த அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்ட பிள்ளைகளை மீண்டும் கடத்தித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியத் தருகிறோம்

தகவல் மூலம்- புதினம்.கொம்

இங்கும் கொலைதானா? ம்.. அதுவும் இனம் தெரியாதவங்க செஞ்சாங்களா?

மக்களே இல்லை.. எல்லாரும் இடம் பெயர்ந்திட்டதா சொன்னாங்க.. இப்ப இப்படி சொல்லுறாங்க?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் மக்களை அச்சுறுத்தும் படையினர் நடவடிக்கைகள் அதிகரிப்பு!

யாழ். குடாநாட்டில் பொதுமக்கள் பயணம் செய்யும் பேரூந்துகள், வான், கார் மற்றும் லொறிகளில் பலாத்காரமாக ஆயுதமுனைகளில் மறித்து பயணம் செய்யும் படையினரின் செயலுக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக தொடர்ந்து பொதுமக்களின் வாகனங்களில் படையினர் பயணம் செய்வது நீடிப்பதாகவும் அச்சத்தின் காரணமாக பொதுமக்களை பணயமாகப் பயன்படுத்தும் மனநிலையில் படையினரின் செயற்பாடுகள் மாறிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் வாகனங்களை படையினர் தாம் நினைத்த இடத்தில் மறித்து ஏறுவதும் தமது முகாம்களுக்கு முன்னால் நிறுத்தி இறங்குவதும் தற்பொழுது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் நாவற்குழி சந்தியில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினர் மாலை ஏழு மணிக்கு பின்னர் பிரதான சாலை வழியாக வருவோரை மறித்து தாக்கி வருவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேலை முடித்து விட்டு களைப்புடன் வீடு திரும்பும் அப்பாவி மக்களை படையினரின் ஈவிரக்கமற்ற முறையில் தாக்கி வருகின்றனர்.

மக்களின் சைக்கிள்களின் காற்றுக்களை பிடுங்கி விடும் படையினர் பொதுமக்களை சைக்கிள்களை உருட்டிச் செல்லுமாறு பணித்து வருகின்றனர்.

சிலருடைய அடையாள அட்டைகளைப் பறித்து வைத்துக்கொண்டு காலையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு அச்சுறுத்துவதுடன் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே யாழ். குடாநாட்டில் அரச படைகளால் சமாதான காலத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்ட்ட படுகொலைகள் மற்றும் படுகாயப்படுத்தப்பட்டு ஊனமாக்கப்பட்டோருக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படையினரின் தாக்குதலில் சொத்துக்கள் மற்றும் பொருட்களை இழந்த மக்களுக்கு போர் ஓய்வு கால நட்டஈடு வழங்க யாழ். அரச செயலகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சமாதான காலத்திலும், சிறிலங்காப் படைகளால் மக்கள் சந்தித்த உயிர், உள பொருளாதார இழப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பு என்பதால் யாழ். குடாநாட்டில் படையினராலும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும் அரசிடமிருந்து இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க யாழ். அரச அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமரங்கள் சில காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கும் மீனவர்கள், இவை படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு கரையோர பாதுகாப்பு நிலைகள் அமைக்க கட்டுமரத்தில் உள்ள மரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

படையினரின் பிரசன்னம் உள்ள கரையோரப் பகுதிகளில் பிறிதொருவரின் நடமாட்டம் இடம்பெற வாய்ப்பு இல்லாமையால் படையினர் இவற்றை தமது தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கடந்த காலங்களிலும் இவ்வாறாக கட்டுமரங்கள் சில காணாமல் போய்யிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் தென்மராட்சி இராணுவ உயர்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் வசிக்கும் மக்கள் படையினரின் அச்சுறுத்தல்களுக்கும் கொலை மிரட்டல்களுக்கும் அஞ்சி வாழ்வதாக தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் ஒரு சிறிலங்காப் படைச் சிப்பாய்க்கும் ஆபத்து நேரும் எனில் அனைவரையும் சாம்பல் ஆக்குவோம் என்றும் ஒருவரேனும் இப்பகுதியில் கடத்தப்பட்டாலோ, காணாமல் போனாலோ உங்களில் பலர் காணாமல் போய்விடுவீர்கள் என்றும் நேரடியாகவே அச்சுறுத்தி வரும் படையினர் பொதுமக்களை ஆயுதமுனையில் அச்சுறுத்தும் முயற்சிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல குடும்பங்களை அச்சத்திற்குள்ளாக்கியிருப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.