Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்கா படைத்துறை அமைச்சின் அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு கையளிப்பு!

Featured Replies

சிறிலங்கா படைத்துறை அமைச்சின் அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு கையளிப்பு! - ஜாலிய விக்கிரமசூரிய

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர் தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறை அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 'மனிதாபிமானப் போரின் உண்மை சார்ந்த அலசல்கள்' என்ற தலைப்பிலான அறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்குக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாடுகள், கொழும்பிலுள்ள அனைத்து இராஜதந்திர தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் அமைப்புக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இவ்வறிக்கையின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் படைத்துறை அமைச்சு கடந்த மாத இறுதியில் அறிவித்திருந்தது.

இந்நிலையில், சிறிலங்காவின் படைத்துறை அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவால் கடந்த 01ஆம் திகதி கொழும்பில் வைத்து வெளியிடப்பட்ட 161 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சகல பிரிவுகளுக்கும் கையளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அத்துடன், அமெரிக்க காங்கிரஸின் நூலகம், பல்கலைக்கழங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சகல முகவர் நிலையங்களுக்கும் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க காங்கிரஸின் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்விகளை எழுப்புகின்ற இந்திய ஊடகவியலாளர்கயைளயும் விரைவில் சந்தித்து போருக்குப் பிற்பட்ட இலங்கையில் நிலைமைகள் குறித்து விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மனிதவுரிமை விவகாரங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அதிக கவனம் எடுத்து வருவதாகவும், அது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அவ்வப்போது விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்னகத்துக்கு எதிராக அமெரிக்கா செயற்படவில்லை எனக் கூறிய அவர், அமெரிக்காவிலுள்ள சில தீவிரவாத சக்திகளே சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையில், சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வறிக்கையில் தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குற்றம் சுமத்தியிருந்தது.

அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப நம்பத்தகுந்த விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளாது விட்டால், சர்வதேச பொறிமுறையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்கா கொழும்பை தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.c...8-CE50AC78CD76}

சிங்கள அரச பயங்கரவாதிகள் கைது செய்து வைத்திருக்கும் ஒருசிலரை மிரட்டி போய்ச் சாட்சியம் அளிக்க வைத்துள்ளார்கள்.

பதவிக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் நாடுகடந்த அரசு உறுப்பினர்கள் உருப்படியான ஆவணங்களை தயார் செய்து நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் உட்பட பலவற்றுக்கு வழங்காமல் மீண்டும் சிங்கள பயங்கரவாதிகளின் பொய்ப் பிரச்சாரத்துக்கு துணை போகின்றனர்.

அத்துடன், அமெரிக்க காங்கிரஸின் நூலகம், பல்கலைக்கழங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பிலான சகல முகவர் நிலையங்களுக்கும் இவ்வறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள அரச பயங்கரவாதிகள் கைது செய்து வைத்திருக்கும் ஒருசிலரை மிரட்டி போய்ச் சாட்சியம் அளிக்க வைத்துள்ளார்கள்.

பதவிக்கு அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் நாடுகடந்த அரசு உறுப்பினர்கள் உருப்படியான ஆவணங்களை தயார் செய்து நூலகங்கள், பல்கலைக்கழகங்கள் உட்பட பலவற்றுக்கு வழங்காமல் மீண்டும் சிங்கள பயங்கரவாதிகளின் பொய்ப் பிரச்சாரத்துக்கு துணை போகின்றனர்.

  • தொடங்கியவர்

காங்கிரஸ் அடுத்தமாதம் தனது புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ளது. அதில் சிங்களத்தின் மீதான 'பொருளாதார தடை' விவாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நகர்வுகள்.

காங்கிரஸ் அடுத்தமாதம் தனது புதிய தொடரை ஆரம்பிக்கவுள்ளது. அதில் சிங்களத்தின் மீதான 'பொருளாதார தடை' விவாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நகர்வுகள்.

இந்த ஊகங்களைக் கைவிட்டு,

"Sri Lankan State Terrorism", "Five Decaades of Tamil Genocide", "Sinhala Baudhdha Terrorism", "Terrorism under the guise of Democracy" போன்ற தலைப்புக்களில் பல ஆவணகளைத் தயார் செய்து முக்கிய பல்கலைக்கழக நூலகங்கள், வெளிவிவகார அமைச்சு நூலகங்கள், வெளிநாட்டு தூதுவராலய நூலகங்கள், முக்கிய ஊடக தாபனங்கள் போன்றனவற்றுக்கு வழங்க வேண்டும்.

அமெரிக்காவிலும், கனடா, அவுஸ்திரேலியா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் உள்ளவர்கள் இவற்றை செய்வார்களா?

இவ்வாறான கருத்தை முன்னரும் யாழ் களத்தில் சிலர் காத்திரமான நடவடிக்கைகளாக முன்வைத்திருந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.