Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனை தீர்ப்பை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. நீதிமன்றம்தான் இறுதி செய்தது. கார்த்திக் சிதம்பரம்

Featured Replies

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எந்த விஷயத்தையும் நிதானித்துப் பேசுவதில் வல்லவர் என்றால், அவரது மகன் கார்த்தி சொல்ல வரும் விஷயத்தை பரபரப்பு குறையாமல் வேகமாகப் பேசுவதில் கில்லாடி. ‘அன்னா ஹசாரேவின் போராட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் பதவி கலாட்டா, ஈழப் போராட்டம்’ என எந்தக் கேள்வி கேட் டாலும் வேகமாக வந்து விழுகிறது வார்த்தைகள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருக்கும் கார்த்தி ப.சிதம்பரத்தைச் சந்தித்தோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை தங்கபாலு ராஜினாமா செய்துவிட்டார். வேறு தலைவரை இன்னமும் நியமிக்கவில்லை. உங்கள் கட்சியில் வேறு தலைவர்களே இல்லையா?

“தங்கபாலு ராஜினாமா செய்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே தவிர, அதிகாரபூர்வமாக எனக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கடிதத்தின் நகலை யாரும் பார்த்ததாகவும் என்னிடம் சொல்லவில்லை. சட்டமன்றத் தேர்தல் தோல்வி காரணமாக அவர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார் என்ற செய்தியை நானும் படித்தேன். அவர் ராஜினாமா கடிதத்தை யாரிடம் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை. இது உறுதியானால்தானே புதிய தலைவரைப் பற்றிப் பேச முடியும்?’’

நில அபகரிப்புப் புகாரில் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து கைதாகி வருகிறார்கள். இதற்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்புக் குர லும் எழவில்லையே?

“பழிவாங்கும் போக்கு இருக்கக் கூடாது என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. இந்த நில அபகரிப்புப் புகார்கள் உண்மையா, பொய்யா? என்பதைப் பற்றிச் சொல் லும் நிலையில் நான் இல்லை. பொதுமக்களின் நலன்களை மையமாக வைத்துத்தான் அரசு செயல்பட வேண்டுமே தவிர, எடுத்தவுடன் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் வகையில் செயல்படுவது சரியானதல்ல.’’

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்விக்குக் காரணமாக எதைச் சொல்கிறீர்கள்?

“படுதோல்வி என்பதே கடுமையான வார்த்தை. 96-ம் ஆண்டில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அ.தி.மு.க. சில தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2001 -ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. எனவே, இது சுழல்கின்ற சக்கரம். ஒரு கட்சி வெற்றி பெறுவதும், இன்னொரு கட்சி ஆட்சிக்கு வருவதும் சகஜமான விஷயம். இந்த முறை மக்கள் ஆதரவு எங்கள் கூட்டணிக்கு இல்லாமல் போய்விட்டது அவ்வளவுதான்.’’

தோல்விக்கு ஈழப் பிரச்னையும் ஒரு முக்கியக் காரணம் என ஒத்துக் கொள்கிறீர்களா?

இது தவறான வாதம். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, இந்தியாவில் எப்படி பல மதங்கள், ஜாதிகள் இருக்கிறதோ அதைப் போலவே இலங்கையிலும் சிங்களர், தமிழர், பவுத்தர், பர்கர் ஆகியோர் ஒற்றுமையாக வாழ வேண்டும். இலங்கையின் மற்ற பிராந்தியங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் ராஜிவ்காந்தி, ஜெயவர் த்தனே ஒப்பந்தம். இதை விடுதலைப் புலிகளும் ஏற்கவில்லை. அந்நாட்டு அரசும் ஏற்கவில்லை. இவர்களுக்குள்ளேயே ஓர் உடன்பாடு வரவில்லை. இதில், காங்கிரஸ் என்ன செய்தது?

அப்படியானால், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் தனி ஈழ கோரிக்கையில் உறுதியாக இருந்தன. இவர்களும் தோல்வி அடைந்தார்களே? தேர்தல் தோல்வி பற்றிப் பேசுவதையே நான் போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டேன்.’’

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி பெயரளவுக்குத்தான் நீடிப்பதாக சொல்கிறார்களே?

“கட்சியின் மூத்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்தபோது, ‘கூட்டணி வலுவாக இருக்கிறது’ என மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு டெல்லியில் உள்ளவர்களுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.’’

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருக்கும் கனிமொழி விரைவில் வெளியே வருவார் என்றும், அப்படி வரும்போது மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறதே?

“என்னைப் பொறுத்தவரை ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரையில் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருப்பது தவறு. நீதிமன்றத்தில் வழக்குப் போடும்போது முதல் கட்ட புலனாய்வுக்குப் பிறகு யாராக இருந்தாலும், அவர் அரசியல் கைதியாக இருந்தாலும் ஜாமீன் வழங்கியே தீர வேண்டும். ஜாமீன் பெறுவது என்பது உரிமை. அவர் அமைச்சராக வேண்டுமா? வேண்டாமா? என்பது கூட்டணிக் கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவு.’’

ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனை கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு தமிழராக இருந்தும், இதைத் தடுக்க முடியவில்லையா?

“முதலில் இந்தியாவில் தூக்கு தண்டனை வேண்டுமா, வேண்டாமா? என்பதுதான் வாதம். இந்தியாவில் மரண தண்டனை இருக்கிறது. இவர்களுக்குக் கொடுக்க வேண்டாம் என்றால் அப்சல் குருவுக்கும் வழங்கக் கூடாது என்ற கோரிக்கை வரும். சட்டத்தில் மரண தண்டனை இருப்பது நியாயமானது. ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் விசாரணை நடந்து உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஜனாதிபதியின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில்தான் தூக்கு உறுதியாகியிருக்கிறது.

இதில், தமிழ்நாட்டில் உள்ளவர்களைத் தூக்கில் போடலாமா? என்ற கேள்வியே தவறு. விடுதலைப்புலிகளின் கோர்ட், மாத்தையாவுக்கும், அமிர்தலிங்கத்திற்கும் எப்படி மரண தண்டனை விதித்தார்கள்? இதுபற்றி யாராவது பேசுகிறார்களா? என்னைப் பொறுத்தவரையில் தூக்கு தண்டனை சரியானதுதான்.’’

அப்படியே பார்த்தாலும், ‘என் கணவர் படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களைத் தூக்கில் போடுவதில் எமக்கோ, என் பிள்ளைகளுக்கோ விருப்பமில்லை’ என ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனுக்கு எழுதிய கடிதத்தில் சோனியா சொல்லியிருக்கிறாரே?

“மரண தண்டனை தீர்ப்பை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. நீதிமன்றம்தான் இறுதி வரையறை செய்தது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். சட்டப்படி தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அதைச் செயல்படுத்துவதுதான் சரியானது. இவர்கள் விடுதலையாக சட்டப்படி எந்த யுக்தியைக் கையாண்டாலும் எங்களுக்குக் கவலையில்லை. அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. இது ஒன்றும் காங்கிரஸ் கட்சிக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளனுக்கு உள்ள சண்டை கிடையாது. நாங்கள் ஒன்றும் நீதிபதிகள் அல்ல.’’

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறது. இதனால் ஆட்சியில் நீடிப்பது சிரமம் என்றும், இடைத்தேர்தல் வரும் என்றும் சொல்கிறார்களே?

“ஐந்தாண்டுகள் ஆட்சியை காங்கிரஸ் கட்சி முழுமையாக நிறைவு செய்யும். அடுத்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.’’

‘உண்ணாவிரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது’ என்கிறார் ப.சிதம்பரம். ஆனால், ஊழல் பெருகிக் கொண்டே போவதால்தானே அன்னா ஹசாரே போன்றவர்களின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு வலுத்துக் கொண்டே போகிறது?

“அன்னா ஹசாரே நடத்தும் போராட்டம் ஒரு தவறான வழிகாட்டுதல்படி நடக்கும் போராட்டம். அவர் போராட்டத்திற்கு வருகிறவர்களை பூதக் கண்ணாடி வைத்துக் காட் டினால் பத்தாயிரம் பேர் வருவதைப் போல் காட்ட முடியும். ஐநூறு பேர் மெழுகுவர்த்தி பிடித்துக் கொண்டு போராடினால் போதுமா? சட்டத்தை இயற்றுவது நாடாளுமன் றம். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சிவில் சொசைட்டி வேண்டும் என்கிறார் அன்னா ஹசாரே. சிவில் சொசைட்டி என்றால் இவர் மட்டும்தான் பிரதிநிதியா? இவர் கருத்தை மட்டும்தான் கேட்க வேண்டுமா? ஏன் முன்னாள் நீதிபதிகள், அரசுத்துறை அதிகாரிகளின் கருத்தைக் கேட்கக் கூடாதா?

அன்னா ஹசாரேவை நான் எதிர்க்கிறேன். ஆங்கில தொலைக்காட்சிகள் தங்களது டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்காக இவரைப் பெரிதுபடுத்துகிறார்கள். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பா.ஜ.கூட ‘ஜன் லோக்பால்’ கொண்டு வருவதை எதிர்க்கிறார்கள். சென்னையில் அன்னாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்திய ஐநூறு பேர் உள்ளாட்சித் தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற்று ஜனநாயகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தட்டும். ஆனால் இவர்கள் வர மாட்டார்கள். அன்னா ஹசாரே, லோக் பரித்ரன் கட்சியைச் சேர்ந் தவர்கள் நடத்தும் போராட்டம் எல்லாம் ‘ரங்தே பசந்தி’ படம் பார்ப்பது போலத்தான்.

அன்னா ஹசாரே போராட்டத்தால் மக்கள் எழுச்சியெல்லாம் ஒன்றுமில்லை. விடுதலைப் புலிகளை எதிர்த்தால் தமிழனுக்கு எதிரி என்கிறார்கள். அன்னா ஹசாரேவை எதிர்த்தால் ஊழலுக்கு துணை போகிறவன் என்கிறார்கள். இது தவறான வாதம். புலிகளை எதிர்த்தும் தமிழர்களுக்கு என்னால் நல்லது பண்ண முடியும். ஹசாரேவை எதிர்த்தும் ஊழலுக்கு எதிராக என்னால் நல்லது பண்ண முடியும்.’’

சரி...ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கும் தொடர்புள்ளது என்கிறாரே சுப்ரமணியன் சுவாமி?

“சுப்ரமணியன் சுவாமி குற்றச்சாட்டு சொல்லாத நபர்கள் யார்? தேர்தலில் நின்றால் ஒரு கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்காத லெட்டர்பேடு கட்சியை நடத்தி வருபவர்தான் இந்த சுவாமி’’.

தொடர்ந்து நடக்கும் ஊழல்களால் பிரதமர் மன்மோகன்சிங்கின் ‘மிஸ்டர் க்ளீன்’ இமேஜ் உடைந்துவிட்டதே? பிரதமர் மாற்றம் இருக்கும் என்கிறார்களே?

“இதைப்பற்றி நான் என்ன பதில் சொல்ல முடியும்?’’

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கிறாரே இளைஞர் காங்கிரஸ் கட்சித் தலைவர் யுவராஜ்?

“அவர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்டுச் சொல்கிறாரா, கேட்காமல் சொல்கிறாரா? என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை பிரணாப் முகர்ஜி ‘தி.மு.கவோடு காங்கிரஸ் கூட்டணி தொடரும்’ என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.’’

சரி... தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

“இது மிகவும் சிக்கலான கேள்வி. இதற்குப் பதில் சொல்வது கடினம். மாற்றம் தேவை. அந்த மாற்றம் கட்சியின் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம்’’ என்றார் கார்த்தி ப.சிதம்பரம்.

Thanks to kumudam reporter.

To see the picture of this news.....

http://www.thedipaar...ws.php?id=32830

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்களின் கட்சி காங்கிரசுக்காரர் தீர்ப்பை வரவேர்க்கின்றார்களே.

காங்கிரஸ்கட்சித் தலைமை விரும்புவதுதானே தீர்ப்பாக எழுதப்படும்

National Fascist Party தலைவி சோனியா முசோலினியிக்கு யுரம் கடுமையாக அடிக்கிறது போலிருக்கு. அந்த யுரத்தில் கார்திக் சிதம்பரத்திற்கு கை கால்கள் நடுங்குகின்றன. தன்வினை தன்னை சூளும். காங்கிரஸ் தோல்வி காணும்.

கனிமொழியை சட்டம் உள்ளெ வைத்திருக்ககூடாது.

“என்னைப் பொறுத்தவரை ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரையில் ஜாமீன் இல்லாமல் சிறையில் இருப்பது தவறு. நீதிமன்றத்தில் வழக்குப் போடும்போது முதல் கட்ட புலனாய்வுக்குப் பிறகு யாராக இருந்தாலும், அவர் அரசியல் கைதியாக இருந்தாலும் ஜாமீன் வழங்கியே தீர வேண்டும். ஜாமீன் பெறுவது என்பது உரிமை. அவர் அமைச்சராக வேண்டுமா? வேண்டாமா? என்பது கூட்டணிக் கட்சிகள் எடுக்க வேண்டிய முடிவு.’’

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை சட்டம் தூக்கு போடவேண்டும்.

“மரண தண்டனை தீர்ப்பை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை. நீதிமன்றம்தான் இறுதி வரையறை செய்தது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். சட்டப்படி தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அதைச் செயல்படுத்துவதுதான் சரியானது.

பிரித்தானிய அரசு காந்தியின் கருத்துகளுக்கு நிச்சயம் மதிப்பு கொடுத்திருக்க கூடாது என்கிறார்.

சட்டத்தை இயற்றுவது நாடாளுமன் றம். அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சிவில் சொசைட்டி வேண்டும் என்கிறார் அன்னா ஹசாரே. சிவில் சொசைட்டி என்றால் இவர் மட்டும்தான் பிரதிநிதியா? இவர் கருத்தை மட்டும்தான் கேட்க வேண்டுமா? ஏன் முன்னாள் நீதிபதிகள், அரசுத்துறை அதிகாரிகளின் கருத்தைக் கேட்கக் கூடாதா?.

இந்த தன் பக்கம் நியாயமானது என்று முடிவெடுக்கும் சர்வாதிகாரி சிதம்பரத்தின் பிள்ளையா அல்லது சோனியா முசோலினியின் பிள்ளையா?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.