Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செப்டம்பர் மாதம் தொடங்கும் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் - சிறிலங்காவிற்கு சிக்கலாகுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ செவ்வாய்க்கிழமை, 23 ஓகஸ்ட் 2011, 07:43 GMT ] [ நித்தியபாரதி ]

UNHRC.jpgசிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளாதவிடத்து அனைத்துலக விசாரணைக்கான ஆதரவு என்பது மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என அவதானிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறு IPS இணையத்தளத்தில் Amantha Perera எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

2009 இல் சிறிலங்கா இராணுவத்தால் தமிழ்ப் பிரிவினைவாதிகள் தோற்கடிக்கப்பட்ட போது இடம்பெற்ற பல்வேறு யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை ஒன்றிற்கு சிறிலங்கா அரசாங்கம் முகங்கொடுக்க வேண்டும் என அழுத்தங்கொடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு சிறிலங்கா அரசாங்கம் செவிசாய்க்காத போதிலும் வரும் செப்ரெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது இதற்குப் பதில் கூறவேண்டி ஏற்படலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் [united Nations Human Rights Council - UNHRC] பதிலளிப்பதற்கு முன்னர் சிறிலங்காவில் அமைக்கப்பட்டுள்ள 'கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின்' மூலம் உள்ளக விசாரணை ஒன்றை மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி ஐ.நா கோரியிருந்த போதிலும் சிறிலங்கா அரசாங்கம் அதனை மறுத்திருந்தது.

UNHRC யில் சிறிலங்காவின் உள்விவகாரங்களைக் கலந்துரையாடுவதென்பது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்று என இந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற கருத்தமர்வின் போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

"அனைத்தலக விதிமுறைகளுக்கு ஏற்ப சிறிலங்கர்கள் தாமாகவே யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்வார்கள் என நாம் எதிர்பார்த்திருந்தோம். நாம் இவ்வாறானதொரு விசாரணையை மிகத் துரிதமாக மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்திருந்தோம்" என ஆகஸ்ட் 09 அன்று வோசிங்ரனில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரொரியா நுலாண்ட் அறிவித்திருந்தார்.

"சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் யுத்தக் குற்ற விசாரணையை மறுத்துவருவதால் சிறிலங்கா விரும்பாத அல்லது அதனால் மறுக்கப்படுகின்ற அனைத்துலக நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட வேண்டும் என அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என நுலாண்ட் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச, UNHRC யில் இக்கட்டானதொரு சூழலை எதிர்நோக்குவதென்பது இது முதற்தடவையல்ல. மே 2009 ல் யுத்தம் நிறைவுக்கு வந்தபோது, ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அனைத்துலக விசாரணை ஒன்றிற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு அதனை தள்ளியிருக்க முடியும். ஆனால் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பிற பிராந்திய நாடுகள் சிறிலங்காவிற்கு ஆதரவாக இருந்தன.

அதிலிருந்து பூகோள மற்றும் பிராந்தியப் போக்குகள் மாறத் தொடங்கின. இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இராணுவப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்த விதிமுறைகளுக்கு அப்பாலான தாக்குதல்களில் பல பத்தாயிரங்களுக்கும் மேல் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இந்த அறிக்கையானது போலியானது, ஆதாரமற்றது எனக் கூறி அதனை ஏற்க மறுத்தது.

அமெரிக்காவால் அண்மையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடர்ந்து அதிபர் ராஜபக்ச ஓகஸ்ட் இரண்டாம் வாரத்தில் சீனாவிற்குப் பயணம் செய்திருந்தார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள UNHRC சந்திப்பின் போது சிறிலங்காவிற்கான சீனாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் சீன அதிபர் கூ ஜின்ராவோ மற்றும் சீனப் பிரதமா வென் ஜியாபாவோ ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிக் கொள்வதற்காகவே ராஜபக்ச, சீனா சென்றிருந்தார்.

சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அயல்நாடான இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதென்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தியாவானது தனது முழு ஆதரவையும் சிறிலங்காவிற்கு வழங்கியிருந்தது. ஆனால் தற்போது அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை விடுகின்ற சாராருடன் இந்தியாவும் இணைந்துகொண்டுள்ளது.

பிரிட்டனின் சனல் 04 தொலைக்காட்சிச் சேவையால் வெளியிடப்பட்ட 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற ஆவணப்படமானது கடந்த யூனில் வெளியிடப்பட்ட பின்னர், அதில் காண்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படும் காட்சிகளும், மற்றும் இது போன்று சிறிலங்கா இராணுவ வீரர்களால் மேற்கொள்ளப்படும் பல்வேறு சித்திரவதைகள் அடங்கிய காட்சிகளைப் பார்த்த பின்னரே சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அழுத்தம் மேலும் அதிகரித்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தன் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ளாதவிடத்து அனைத்துலக விசாரணைக்கான ஆதரவு என்பது மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும் என அவதானிப்பாளர்கள் கருதுகிறார்கள்.

"இந்தப் பிரச்சினையானது இவ்வாறு வளர்ந்து செல்லும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை" என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் தேசிய சமாதானப் பேரவையைச் சேர்ந்த ஜெகன் பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் தட்டிக்கழிக்குமாயின், அனைத்துலுக விசாரணைக்கான அழுத்தமும் அதிகரித்துச் செல்லும் என்கிறார் பெரேரா.

அண்மையில், சிறிலங்கா அரசாங்கமானது தன் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்தும் முகமாக அறிக்கை மற்றும் ஆவணப்படம் என்பவற்றை வெளியிட்டிருந்தது. சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களின் இழப்புக்கள் இல்லாது யுத்தத்தை மேற்கொள்தல் என்பது சாத்தியப்பாடற்ற ஒன்று என குறிப்பிடப்பட்டிருந்தது.

"தற்போது சிறிலங்கா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையானது அனைத்துலக விமர்சனங்களுக்கான பதில் என்றோ அல்லது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான இறுதிப் பதிலாக இது அமைந்துள்ளது என்றோ சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிடவில்லை" என கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் மாற்றுக் கொள்கை மையத்தின் நிறைவேற்று இயக்குனரான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அரசாங்கமும் தனது சொந்த நாட்டில் அரசியல் ரீதியான ஆதரவைத் தொலைத்த நிலையில் இவ்வாறானதொரு விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது உண்மைக்கு மாறானதாகும் என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

"உண்மையில் சிறிலங்கா அரசாங்கம் மிகவும் இக்கட்டான ஒரு நிலையில் உள்ளது. தன் தொடர்பான எதையும் இனி வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பில்லை. இது தொடர்பான மேலும் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கான அழுத்தங்கள் வழங்கப்படவேண்டும்" என சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பைச் சேர்ந்த றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை அதிகம் கொண்டுள்ள இந்தியாவானது சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்குப் போதியளவு அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என அழுத்தம் கொடுத்துவருகின்றது. காவற்துறை அதிகாரங்கள் போன்ற குறைந்தளவிலான சில அதிகாரங்களாவது முதலில் வழங்கப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

"சிறிலங்கா அரசாங்கமானது அதிகாரப் பகிர்வ போன்ற சில விடயங்களை மேற்கொண்டால் அனைத்துலக விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். அதிகாரப் பகிர்வு என்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழிவகுக்கும். இது வழங்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எந்தவொரு விமர்சனங்களும் எழ வாய்ப்பில்லை" என தேசிய சமாதானப் பேரவையைச் சேர்ந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110823104534

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைய நடப்புகளையும் பார்க்கும் போது சிக்கலாகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.