Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளன் வேடத்தில் அதர்வா!

Featured Replies

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில்... பேரறிவாளன் வாழ்க்கை, 'பேரறிவாளன்’ என்ற தலைப்பிலேயே திரைப்படமாகத் தயாராகிறது. விளம்பரப் படங் களின் இயக்குநரான ரவி இன்பா வின் முதல் படமான இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வருமாம்!

மூவரின் கருணை மனு நிராகரிக் கப்பட்ட சூழலில், ''இப்படிப் படம் எடுப்பது, அந்தப் பரபரப்பை வணிகமாக பயன்படுத்திக் கொள் வதுபோல் ஆகாதா?'' என்ற கேள்வி யுடன் ரவி இன்பாவை சந்தித்தோம்.

''முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது இப்போதுதான். ஆனால், எட்டு மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனுடன் பேசி கதையை முடிவு செய்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பே முழு திரைக்கதையையும் எழுதி விட்டேன். அப்போதே நடிகர் அதர்வாவுடன் பேச... அவரும் ஒப்புக்கொண்டார். படத்தின் வசனத்தை 'ரெட்டைச்சுழி’ இயக்குநர் தாமிரா எழுதுகிறார். அதனால், இது பரபரப்புக்காக எடுக்கப்படும் படம் அல்ல.

ஏற்கெனவே, 'தம்பை யனின் காடு’, 'ஆசை’ என மலைவாழ் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைக் குறும்படங் களாக எடுத்துள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு பேரறிவாளனைப்பற்றிப் படித்தேன். அப்போதே அவர் மீது ஈடுபாடு ஏற்பட்டது.

சீமானுடன் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் சிறைக்குச் சென்று பேரறிவாளனை சந்தித்தேன். அவரது பேச்சு, எழுத்துகள், தமிழ் உணர்வு, ஒழுக்கம் போன்றவை என்னை உலுக்கிவிட்டன. எனவே, ஓர் ஆண்டுக்கு முன்பே அவரது கதையைத் திரைப் படமாக்க அவரிடம் சிரமப்பட்டு அனுமதி பெற்றேன். இதற்காக மாதம் இரு முறையாவது சிறைக்குச் சென்று அவரோடு விவாதித்தேன்.

திரைப்படம் என்றால் காதல் இல்லாமலா? அதுபற்றி அவரிடம் சொன்னபோது, அவர் கண்கள் துளிர்த்தன. அதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை, நானே உணர்ந்து கொண்டேன். 19 வயதில் சிறைக்கு வந்து இன்று 40 வயது வரை கம்பிகளுக்குள்ளே தனது இளமையை இழந்தவர் அவர். ஆனாலும், அவர் எனக்காக காம்ப்ரமைஸ் ஆனார். 'படத்துக்குத் தேவையா னால் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்...’ என்றார். அவருக்கேற்ற காதலைத் தயார் செய்து வருகிறோம்.

கதை பெரிய ரகசியம் அல்ல... பேரறிவாளனின் வாழ்க்கைதான். ஆனால், க்ளைமாக்ஸ் கல் மனங் களையும் கரைத்துவிடும். ஜோலார் பேட்டையில் குயில்தாசன் - அற்புதம் அம்மாள் தம்பதியின் மகனாக எளிமை யான வாழ்க்கையை வாழ்ந்தவர் பேரறிவாளன். திராவிடப் பாரம்பரியம் கொண்ட குடும்பம். பெரியார் சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட குடும்பம்.

ஒரு முறை பேரறிவாளனிடம் கேட்டேன்... 'அண்ணே, நீங்கள் உண்மையிலே தப்பு செஞ்சீங்களா, இல்லையா?’ என்று. மனம் உவந்து, 'நான் தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கொள்கை கொண்டவன். பிரபாகரனை நேசிக்கிறேன். உண்மையான தமிழ் உணர்வு எனக்கு இருக்கிறது. பெரியாரின் கொள்கை பிடிக்கும். எலெக்ட்ரானிக் மெக்கானிக் படித்துள்ளேன். இந்தச் சூழலில், அவர்கள் கேட்டு நான் பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்றார்கள். அந்த 9 வோல்டேஜ் பேட்டரி சாதாரண பெட்டிக் கடையிலும் கிடைக்கிறது. இதை எல்லாம் முடிச்சுப்போட்டு என் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள். சத்தியமாக ராஜீவ் கொலைக்கும் எனக்கும் இதைத் தாண்டி எந்தத் தொடர்பும் இல்லை..!’ என்றார்.

பேட்டரிக்கு எல்லாம் கடையில் பில் தரமாட்டார்கள். ஆனால், சி.பி.ஐ. போலி பில் தயார் செய்து உள்ளது. பக்குவப்படாத 19 வயதில் அவரை அதிகாரிகள் பல நாட்கள் தூங்கவிடாமல் சித்ரவதை செய்து, மனநிலை தப்பச் செய்து, பொய்யான வாக்குமூலத்தை வாங்கி இருக்கிறார்கள். இதை எல்லாம் எனது படத்தில் கொண்டுவருகிறேன். அப்படியே பேரறிவாளன் தவறு செய்தவராகவே கருதினாலும், ஆயுள் தண்டனையான 14 ஆண்டுகளைக் கடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைத்து, அவரது இளமையைப் பொசுக்கிய பின்பு இப்போது எதற்குத் தர வேண்டும் மரண தண்டனை? இதை நான் மட்டுமா சொல்கிறேன்... காந்தியவாதியான முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர்கூட இதைத்தானே வலியுறுத்துகிறார்.

படத்தை இயக்கத் திட்டமிட்டபோது, 'அருமையான கமர்ஷியல் கதைகளுக்கே தயாரிப்பாளர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது... இதுபோன்ற சிக்கலான ஒரு கதைக்கு எந்த தயாரிப்பாளர் முன் வருவார்?’ என்று நினைத்தேன். ஆனால், பணம் மட்டும் அல்ல... என்னிடம் நல்ல மனமும், தமிழ் உணர்வும் அதைத் தாண்டிய மனித நேயமும் இருக்கிறது என்று ஒருவர் முன்வந்து இருக்கிறார். அவர் தனது பெயரை இப்போது வெளியிட வேண்டாமே என்கிறார். ஆனால், படப்பிடிப்பு துவங்கும்போது கண்டிப்பாகச் சொல்கிறேன்...'' என்கிறார் ரவி இன்பா!

Thanks to Junior Vikatan.

To see the pictures of this news, please go to......

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=8735

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் - ந்ல்ல ஒரு ஆவணமாக எல்லா நாட்டு மக்களும் இப் படத்தை வெளி கொணர்ந்த நல்லது, நன்றி easyjob இணைப்பிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.