Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாந்தையில் கடை உரிமையாளர் வெட்டிக்கொலை;அருகில் இராணுவ காவலரண்

Featured Replies

Knife%20crime.jpg

மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் நேற்று புதன் கிழமை இரவு 9.30 மணியளவில் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடைக்குள்ளேயே வைத்து இனம் தெரியாத நபர்களினால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் (வயது-42) என விடத்தல் தீவு பொலிஸார் தெரியவித்துள்ளனர்.

ஆண்டான்குளம் வீதி ஆக்காட்டி வெளி கிராமத்தில் வசித்து வரும் குடும்பஸ்தரான கனகரத்தினம் மகேந்திரன் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது கடையில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று இரவு உணவை உண்டு விட்டு மீண்டும் இரவு 9.30 மணியளவில் தனது கடையில் படுப்பதற்காக சென்றுள்ளார். இன்று காலையில் அவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை 5.30 மணியாகியும் வீடு வராததன் காரணத்தினால் அவரது தாயார் அவரைப் பார்ப்பதற்காக கடைக்குச்சென்றிருந்த போது கடைக்குள்ளேயே கனகரத்தினம் மகேந்திரன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு கதறிய சத்தம் அயலில் உள்ளவர்களுக்குக் கேட்டு அவ்விடத்தில் குவிந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து விடத்தல் தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதைத் அடுத்து விடத்தல் தீவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின் மன்னார் பதில் நீதவான் எம்.எம்.சபூர்தின் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார். இதன் போது கொலையாளி கடைக்கு பின்புறமாக வந்து தகரத்தினைப் பிரித்துக்கொண்டு உள்ளே நுளைந்து சென்று கொலை செய்துள்ளமை விசாரணைகளின் போதும் தடயங்களின் மூலமும் தெரிய வந்தது.

கனகரத்தினம் மகேந்திரன் வீட்டில் இருந்து மீண்டும் கடைக்குள்ளே சென்ற போது குறித்த நபர் கடைக்குள்ளேயே பதுங்கியிருந்து அவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கண்மூடித்தனமாக கூரிய ஆயுதங்களால் வெட்டியுள்ளார். அதன்பின் கடைக்குள் இருந்த மிளகாய்த்தூளை கொலை நடைபெற்ற இடத்தில் கொட்டி விட்டு பின்புறமாகத் தப்பிச்சென்றுள்ளார்.

இதன் போது கொலையாளி தப்பிச்சென்ற இரத்தத் தடயங்கள் மற்றும் கொலையாளி அணிந்திருந்ததாகக் கூறப்படும் செருப்பு என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் வவுனியாவில் இருந்து தடயம் அறியும் நிபுணர் குழு வருகை தந்து தடயங்களைப் பெற்றுக்கொண்டனர்.

பின் பதில் நீதவான் எம்.எம்.சபூர்தினின் உத்தரவுக்கமைய சடலம் மன்னார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.மேற்படி சம்பவ இடத்திற்கு வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடக்கலநாதனிடம் குறித்த கிராம மக்கள் மேற்படி சம்பவம் தொடர்பில் தாம் பெரிதும் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இராணுவத்தின் காவலரண் ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.குறித்த வர்த்தகரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உறவினர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.