Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீர்ப்புக்கு காத்திருந்த வினாடிகள் - உணர்ச்சிப் பிழம்பான நீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 08.09.11 ஹாட் டாபிக் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தூக்கில் போடக் கூடாது என தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், தீக்குளிப்புப் போராட்டம் என அனல் பறக்கிறது.

அதிலும், காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம்பெண் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தீக்குளித்து இறந்த சம்பவம் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆவேசத்தைக் கிளப்பியிருக்கிறது.

போராட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சட்டரீதியான வழிகளைக் கையாண்டனர் பழ.நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்டவர்கள். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு டெல்லியில் பிரபல சட்ட வல்லுனரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானியைச் சந்தித்தார் வைகோ. எந்த அரசியல் க ட்சித் தலைவரையும் தன் வீட்டில் அழைத்துப் பேசும் நடைமுறையை ஜெத்மலானி இதுவரை கடைபிடித்ததில்லை. முதன்முறையாக வைகோவை வீட்டிற்கு அழைத்துப் பேச்சு நடத்தினார். அவரும் மூவரின் தூக்கு தண்டனையை எதிர்த்து வழக்காடப் போவதாக அறிவிக்க, மனித உரிமை ஆர்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

ராம்ஜெத் மலானி சென்னையில் தங்கும் ஏற்பாடுகள் முழுவதையும் வைகோவே முன்னின்று செய்தார். 29-ம் தேதி உயர்நீதிமன்றத்02a.jpgதில் மனுத்தாக்கல் வேலைகள் முடிந்தது. 30-ம் தேதி தமிழ்நாடே எதிர்பார்க்கும் வழக்கு உயர்நீதிமன்றத்தின் நான்காவது பெஞ்சில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னதாக, நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் வழியாக சீமான் வந்து சேர்ந்தார்.

இதன் பின்பு பழ.நெடுமாறன், இயக்குனர் மணிவண்ணன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பெரும் திரளாகக் குவிந்தனர். அடுத்து, நீதிமன்றத்தின் முகப்பு வாசல் வழியாக வைகோவின் கார் நுழைய கூட்டம் ஆர்ப்பரித்தது. காரின் முன்பக்கத்தில் ஜெத்மலானி அமர்ந்து கொள்ள, வழக்கறிஞர் உடையோடு பின்சீட்டில் அமர்ந்திருந்தார் வைகோ.

‘‘பதினொரு ஆண்டுகளாக மூவரின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்துள்ளது. இதைவிடக் குறைவான கால அளவில் இருந்த கருணை மனுக்களின் அடிப்படையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதுதான் தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்களுக்கு மருந்தாக அமையும்’’ என ராம்ஜெத்மலானி சொல்ல, விசில் பறந்தது.

தமிழ் உணர்வாளர்கள் புடைசூழ நீதிமன்றத்திற்குள் நுழைந்தார் ஜெத்மலானி. எங்கு பார்த்தாலும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உருவம் பதித்த பனியன்களில் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கானவர்கள் கோஷம் எழுப்பினர். கோர்ட்டுக்கு வெளியில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாள், அக்கா அன்புமணி, தங்கை அறிவுச் செல்வி ஆகியோர் சோகத்தோடு அமர்ந்திருந்தனர்.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

நீதிபதிகள் உள்ளே நுழைந்ததும், சரியாக 10.32 மணிக்கு வாதம் தொடங்கியது. ஜெத்மலானி பேசும்போது, உச்சநீதிமன்றத்தில் கருணை மனு நிலுவையின் போது ஏற்பட்ட காலதாமதத்தைக் காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டோரின் வழக்குகளைப் பட்டியல் போட ஆரம்பிக்க... கூட்டத்தின் சத்தம் அதிகரித்தது. ஒருகட்டத்தில் எரிச்சலான நீதியரசர் சத்யநாராயணா, ‘வாதம் நடந்து கொண்டிருக்கிறது. அமைதியாக இருந்து கேளுங்கள். இல்லாவிட்டால் வெளியில் போங்கள்’ என எச்சரித்தார். இதன்பின்பு சத்தம் குறைந்தது.

நீதியரசர்கள் தீர்ப்பு சொல்வதற்கு சரியாக மூன்று நிமிடங்களுக்கு முன்பு கோர்ட்டுக்கு வெளியில் ‘மனிதநேயம் வென்றது. வாழ்க புரட்சித் தலைவி ஜெயலலிதா’ என்ற கோஷங்கள் விண்ணைக் கிழித்தது. பட்டாசு சத்தம் அதிர்வேட்டைக் கிளப்பியது. தீர்ப்பு வருவதற்குள் என்னவானது? என ஆச்சரியத்தோடு கோர்ட்டில் இருந்தவர்கள் திரும்பிப் பார்க்க, சட்டமன்றத்தில் தூக்கு தண்டனை ரத்து செய்வது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் இயற்றிய செய்தி, தெரிய வந்தது. அடுத்த சில நொடிகளில் நான்காவது பெஞ்ச் ஹால் அதிர்ந்தது.

‘‘இந்த வழக்கில் சட்டப் பிரச்னைகள் இருப்பதாக நீதிமன்றம் கருதுகிறது. ராம்ஜெத்மலானி கூறியதைப் போல 11 வருடங்கள் நான்கு மாதங்கள் கருணை மனு நிலுவையில் இருந்ததை கோர்ட் ஏற்றுக் கொள்கிறது. எனவே, மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். எட்02b.jpgடு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டதுதான் அடுத்த அதிர்வுக்குக் காரணம்.

ஒரேநேரத்தில் உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் எடுத்த முடிவு மரண தண்டனைக்கு எதிரானவர்கள் மத்தியில் பெருத்த ஆரவாரத்தை ஏற்படுத்தி விட்டது. இந்தத் தகவல் லண்டனில் இருக்கும் முருகனின் மகள் ஹரித்ராவுக்குத் தெரிவிக்கப்பட, “மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என் அப்பாவுக்காக போராடியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒரு மகளின் வேதனையைப் போக்கிய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மாவுக்கு நன்றி சொல்லிக்கறேன். என் அப்பா மற்றும் இருவரின் தூக்குக்காக செங்கொடி இறந்ததைக் கேள்விப்பட்டு விடிய விடிய அழுதேன். அனைவரின் போராட்டமும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்’’ என ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இதுபற்றி பேசிய இயக்குனர் மணிவண்ணன், “முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மூவரின் தூக்கு த ண்டனையை ரத்து செய்யப் போராடியவர்களின் போராட்டத்திற்குத் தீர்வு கிடைத்திருக்கிறது. மூவரின் தண்டனை பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டி ருக்கிறது. ஒன்பது வோல்ட் பேட்டரியை கடையில் வாங்கியதற்காக பேரறிவாளனுக்குத் தூக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்கள். இப்போது கேமராவுக்கு பேட்டரி வாங்கப் போ என்று சொன்னால்கூட என் மகன் கடைக்குப் போக பயப்படுகிறான். நான்தான் செல்ல வேண்டியிருக்கிறது’’ எனச் சொன்னார்.

தீர்ப்பு வெளியானதும் பேரறிவாளனின் அக்கா, தங்கை இருவரும் அழுதபடியே, உயர்நீதிமன்றத்தின் கோபுரத்தை நோக்கி கை கூப்பி வணங்கினர். அற்புதம்மாளுக்கு சிறிதாக மயக்கம் வர உள்ளே அழைத்துச் சென்றனர். இந்த இரு பெரு வெற்றிகளும் உண்ணாவிரத மேடையில் இருந்த மூன்று வழக்கறிஞர்களுக்குத் தெரிவிக்கப்பட அவர்களின் உண்ணாவிரதமும் முடிவுக்கு வந்தது.

நியாயமான போராட்டங்கள் வெற்றிபெறும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

படங்கள்: ம.செந்தில்நாதன்

ஆ.விஜயானந்த்

-குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கந்தப்பு இணைப்பிற்கு, அங்கு மட்டுமல்ல எல்லா உலக தமிழ் உள்ளங்களிலும்

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான போராட்டங்கள் வெற்றிபெறும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இணைப்பிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.