Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று தசாப்த காலம் எங்கட தமிழ்ச் சனம் ஆமிக்காரனிட்டை வாங்கின அடி இன்னும் குறைவில்லை .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

uthayan_sun.jpg யுத்தத்தில் இருந்து மூன்று தசாப்த காலம் எங்கட தமிழ்ச் சனம் ஆமிக்காரனிட்டை வாங்கின அடி இன்னும் குறைவில்லாமல் தொடர்ந்த வண்ணமே இருக்குது பாருங்கோ.ஆமிக்காரனும் தமிழ் மக்களை அடக்கி ஆளவேண்டும் என்று நினைக்கிறான். அதுவும் முடியாமல் போகத்தான் எங்கட சனத்துக்கு உந்த அடி அடிக்கிறான். இதை யார் கேட்க முடியும்.

தமிழ் மக்களுக்கு ஓர் அரசு இல்லாத போது மாற்றான் அரசான சிங்கள அரசால் என்றைக்குமே தமிழ் மக்களுக்குப் பிரச்சினைதான். அதுதான் இப்பொழுது கிளம்பி இருக்கும் கிறீஸ் பூதம் பாருங்கோ.

வடக்கு, கிழக்கு பரந்து எல்லா இடமும் கிறீஸ் பூத விவகாரம் தொடர்ந்த வண்ணம் இருக்குது கிறீஸ்பூதம் ஆமிப் பூதந்தான் என்று நேரடியாகக் கண்ட சனம் சொல்லுது.அப்படியென்றால் தங்குதடையின்றி தாராளமாக நடக்கும் தானே.

தடக்கி விழுகிற இடமெல்லாம் ஆமிக்காரன் நிக்கேக்க இதை யார் செய்ய முடியும். கிறீஸ் பூதம் நடமாடுது என்று எங்கட சனம் அலேட்டானால் காணும், உடனே அந்தப் பகுதிக்கு குவிந்து வரும் ஆமிக்காரன்கள் கிறீஸ் பூதங்களை சனத்திடம் இருந்து காப்பாற்றவல்லவோ வாறாங்கள்! கிறீஸ் பூதத்தைப் பிடித்தால் அடிக்க வேண்டாம் தங்களிடம் ஒப்படைக்குமாறு சனத்தை ஆமிக்காரன் மிரட்டி வருகிறான்.

கிறீஸ் பூதத்தை சனம் பிடித்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி சனத்திடம் இருந்து கிறீஸ் பூதத்தை ஆமிக்காரன்கள் காப்பாற்றி விடுகிறான்கள் எல்லோ.

பிறகு எப்படி இந்த கிறீஸ் பூத விவகாரத்தை இல்லாமல் செய்ய முடியும். கடந்த வாரம் திங்கட்கிழமை 22 ஆம் திகதி இரவு 11 மணி இருக்கும் நித்திரையில் இருந்தேன்.

எனது போன் அடித்துக் கொண்டிருந்தது. நித்திரையில் இருந்த நான் எழும்ப முடியாமல் அலுப்பில் விழித்துவிட்டு மீண்டும் படுத்துவிட்டேன். எனது கான்போன் நிற்காமல் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. யாரடா இந்த நேரத்தில் எனக்குப் போன் எடுப்பது என்று தெரியாமல் சலிப்போடு ஒருவாறு எழும்பி எனது கான்போன் வைத்திருக்கும் மேசைக்கு அருகில் சென்று போனை எடுத்துப் பார்த்தேன். எனது நண்பன் டொமினிக் . போனினை ஒன் பண்ணினேன். ஹலோ… சண்முகம் நான்தான்டா டொமினிக் என்றான்.

ஓ.. தெரியும் என்ன சொல்லன் என்றேன். கிறீஸ் பூதம் வந்து சனம் துரத்திக் கொண்டு போனதால ஆமிக்காரன் எல்லோருக்கும் அடிக்கிறான்.

என்ன நடந்தது என்று நான் கேட்க சிறிது நேரம் அமைதியானவன் மீண்டும் கதைக்க ஆரம்பித்தான். இரவு 9 மணி இருக்கும் கிறீஸ் மனிதன் அங்குமிங்கும் நடமாட ஆரம்பித்தான்.

இதனைப் பார்த்துக் கொண்டு நிண்ட சனம் கிறீஸ் மனிதன் நிற்கிறான் என்ற செய்தியை எல்லோருக்கும் தெரியப்படுத்தினார்கள். அவ்வளவுதான் சனம் எல்லாம் கிறீஸ் மனிதனை துரத்த ஆரம்பித்ததுகள்.

கிறீஸ் பூதமும் ஓட ஆரம்பித்தது. நாவாந் துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்துக்குள் நுழைந்து விட்டது கிறீஸ் பூதம். பள்ளிக்கூடத்தை வளைத்துக் கொண்டு நின்ற சனம் அங்குமிங்கும் ஓடிஓடி தேடிப்பார்த்துக் கொண்டு நிற்க பாடசாலைக்குள் ஒழிந்திருந்த கிறீஸ் பூதம் மதிலால் ஏறி விழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

சனம் விட்டுக் கலைத்தது. நீல ரீசேட்டும், நீல ரைற் சூட்டும் சப்பாத்தும் போட்டிருந்த ஒருவன் கிறீஸ் பூதமாக ஓடி பக்கத்தில் உள்ள காம்புக்குள்ளே ஒழிந்துவிட்டான். எங்கட சனம் விடுமோ ஆமிக்காரனின் காம்புக்குள்ளேயும் போய் விட்டுதுகள்.

ஆமிக்காரன் அவனை உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு அங்கு துரத்திச் சென்ற ஊர் மக்களை திரும்பிப் போகும்படி மிரட்டினான். சனம் காம்புக்குள்ளே மறைந்திருக்கும் அவனை வெளியே கொண்டு வாருங்கள் என்று கத்தினதுகள்.

ஆமிக்காரனோ மீண்டும் மீண்டும் சனத்தை வெளியே போகும்படி மிரட்டினான். சனம் போகாமல் அங்கேயே நின்றதால் மேல் வெடி வைத்து சனத்தைத் துரத்த வெளிக்கிட்டான்.

சனம் ஆமிக்காரனின் மேல் வெடிக்கும் பயப்படாமல் அங்கேயே நின்றது. அந்தக் காம்பில் பதுங்கி இருந்தவனை ஆமிக்காரன்கள் காப்பாற்றி ஒரு இராணுவ வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

அந்த வாகனத்தை துரத்திய போதும் அந்த வாகனத்தில் இருந்து ஹயஸ் வாகனத்துக்கு மாற்றி அவனை ஏற்றிச் சென்றுவிட்டனர். அதன் பின் இங்கே நின்ற சனம் அல் லோல கல்லோலப்பட்டது.

ஆமிக்காரன்கள் றக்கிலும் பொலிஸ்காரன்கள் ஜீப்பிலும் வந்து இறங்கினாங்கள் அவ்வளவுதாண்டா. அங்கு நின்ற சனத்துக்கு விழுந்தது மரண அடி.

சனம் எல்லாம் தலை தெறிக்க சிதறி அடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. ஓடித் தங்களுடைய வீடுகளுக்குப் போய் கதவைச் சாத்திக் கொண்டதுகள்.

நானும் வீட்டுக்கு ஓடி வந்திட்டன். ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் ஆமி போறது சனத்தின்ர குழறல் சத்தத்தில் தெரிகிறது. என்னடா என்ன நடக்குது உங்கே என்றேன்.

ஆமிக்காரன்கள் பொம்பிளைகளையும் அடிக்கிறான்றா என்றவன் ஆமிக்காரன் பக்கத்து வீட்டுக்கதவை உடைக்கிறான் என்று சொன்ன ஒரு செக்கனில் அவனது போன் திடீரெனக் கட் ஆகிறது.

மீண்டும் அவனுக்குப் போன் எடுத்தேன். தொடர்பு கொள்ள முடியவில்லை. மீண்டும் படுக்கை அறைக்குப் போனேன். இரவு 12 மணி இருக்கும். ஆனால் நித்திரை வரவில்லை.

விடியும் மட்டும் விழித்துக் கொண்டு இருந்தேன். காலை 6மணிக்கு மீண்டும் எனது போன் அடிக்கிறது. அவன்தான். உடனே ஒன் பண்ணிக் கதைக்க ஆரம்பித்தேன்.

எங்கட வீட்டிலேயும் ஆமிக்காரன் வந்திட்டான்ரா. பக்கத்து வீட்டிலே கதவு உடைக்கிற சத்தம் கேட்டு எங்களுடைய வீட்டுக்குப் பின் பக்கமாக 4,5 வீடு தள்ளிப்போய் ஒழிந்து இருந்து விட்டு இப்பதான் வந்தனான்.

எனது வீட்டுக் கதவு, அலுமாரி எல்லாம் உடைத்துப் போட்டிருக்குதடா. பிறகு எடுக்கிறன் என்று சொல்லி விட்டுப் போனை கட் பண்ணிவிட்டான். அவனது போன் கோல் மீண்டும் முற்பகல் 10 மணிக்கு வருகிறது. டேய் சனங்களை ஆமிக்காரன் ஆண், பெண் என்று பாராமல் அடித்துள்ளான். கனபேரை அடித்து இழுத்துக் கொண்டு போய்விட்டான்.

எல்லோரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டுத்தான் உன்னுடன் கதைக்கிறன் என்றவன் கை, கால் எழாமல் நடக்க முடியாத ஒருவருக்கும், இரண்டு கண்ணும் தெரியாத ஒருவனுக்கும் அடித்திருக்கிறான்களடா. வந்து பாரடா.

அதுமட்டுமல்ல பலபேரை நிர்வாணப்படுத்தி விட்டும் அடித்திருக்கிறான். முள்ளிவாய்க்கால் தான் நினைவுக்கு வருகிறது.

பல பெண்களுக்கு என்ன நடந்தது என்று வெளியே சொல்ல வெக்கப்படுகிறார்கள். நாசமாய்ப் போவார் அக்கா, தங்கச்சியுடன் பிறக்கவில்லை போலும் என்று சொன்ன வன் பிறகு எடுக்கிறன் என்று சொல்லிவிட்டுப் போனைத் துண்டித்துவிட்டான்.

- யாழ் உதயன்

http://www.tamilthai.com/?p=26015

மூன்று தசாப்த காலம் எங்கட தமிழ்ச் சனம் ஆமிக்காரனிட்டை வாங்கின அடி இன்னும் குறைவில்லை .

திருப்பி அடிக்க இப்போது புலிகள் இல்லையே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.