Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதல் திருடர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள்

சொரிவது எனவிழி நீர்வழிய

மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும்

எழுமெழில் முகமதில் தீ பரவ

தழுவிடு எனையென பருவமும் அவனிடம்

கொலை கொலையென மனம்தான் அழிக்க

எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும்

எழிலுறும் வகையென இவளிருந்தாள்

சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு

சிலையெனும் வடிவெடு ஆரணங்கே

கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில்

குறுநடை பழகிட வருமெனவே

பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும்

பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க

குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென

குடமிரு வளை யயல் கோபமிட்டான்

அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்

அதிசய மலையுது நீரின்றியே

மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்

மகிழ்வென நீந்திடும் மதிகுலைய

உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு

உளதுயர் தெளிவெடு மீனசைய

விலையில திவளெழில் சிதைவது கொடிதென

விளைவது ஏதென இவன் வினவ

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென

திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்

அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி

ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்

ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர

உளதொரு பெரியவர் உமையடைந்தேன்

வழியறி அறிவது வரவில்லை எதுவரை

வாழ்வென மீளவும் வழியுரையும்

எவனுன துடைமையை இருவிழி நீருற

எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்

அவனது தருவனோ அதைவிட அவனது

எடுபொருள் கவரென இவனுரைத்தான்

நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென

இவளெழில் வதனமும் பூமலர

அவனிலை இவனென எடுஉன திதயமும்

எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்

பொருள்:

அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும்

அதிசய மலையுது நீரின்றியே

மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில்

மகிழ்வென நீந்திடும் மதிகுலைய

உலையிடு உயிரென ஊறிடும் நீர்விழு

உளதுயர் தெளிவெடு மீனசைய

விலையில திவளெழில் சிதைவது கொடிதென

விளைவது ஏதென இவன் வினவ

அலைகடல் அதிசயிக்கத் தக்க வகையில் பெரியது. அதைவிட இந்த அதிசயம் பெரியது.

அதாவது நீரில்லாமலேயே அவளுடலில் அலையை க்காணும் அதிசயமென கூறி

(அலைபோலும் மேனி. அலைபோல வளைந்த மேனி, அலைந்து திரியும் மேனி ,

அலைபோல உணர்வுகள் கொள்ளும்மேனி, எப்படியாவது எடுத்துக்கொள்ளுங்கள்)

அந்த அதிசயித்தில் மனம் கவர வானில் முகிலிடையே நிலவு நீந்துவது போலும் ,

தாங்களும் தண்ணீரில் நீந்தவேண்டுமே என்ற எண்ணத்தைவிட்டு உலைகொதி நீரிலிட்ட

உயிரினம் துடிப்பதுபோல அசைந்தமீன்கள் போன்ற கண்களில் நீர்வழிய அழகு கெடுகிறதே

என்று அதன் காரணத்தை வினவினான்

இழிவெரு துடனெடு எறிகயிறுளனென

திருபொருள் `திருவுடன்` அதிலொருகால்

அழி`வு`செய் இனமிவன் எதுஎன துயிர்துடி

ஒலியிடும் பொருள்கொள விழி பொழிந்தேன்

ஒழிவில தொருமுறை உயரிய பதில்தர

உளதொரு பெரியவர் உமையடைந்தேன்

வழியறி அறிவது வரவில்லை எதுவரை

வாழ்வென மீளவும் வழியுரையும்

இழிவு! எருதுடன் எடு கயிறு உளன் (உடையவன்)( எமன்போல )

எனதிரு (என்னிடமுள்ள) பொருளினை `திருவுடன்` என்பதில்

`வு`அழித்து வரும் (திருடன்) இனத்தவன் எனது உயிர்துடிப்பான

ஒலியிடும் பொருளை (இதயத்தை) திருடிவிட்டதால் அழுதேன். அதற்கு என்ன செய்யலாம் எனக்கேட்க

எவனுன துடைமையை இருவிழி நீருற

எதிரியென் றில்லமும் கன்னமிட்டோன்

அவனது தருவனோ அதைவிட அவனது

எடுபொருள் கவரென இவனுரைத்தான்

நவமணி பொலிந்திடு ஒளியுடை சிலையென

இவளெழில் வதனமும் பூமலர

அவனிலை இவனென எடுஉன திதயமும்

எங்குள தெனஇதழ் களவுசெய்தாள்

கன்னமிட்டோன் - களவு செய்தவன்

முடிவில்.. அவன் அல்ல! அது இவன் நீதான் எனக்கூறி எடு உன் இதயத்தை என்று

அவள் இதழ்களை அவன் கன்னத்தில் பதித்து முத்தமிட்டாள்.

(களவுசெய்தாள் - கன்னமிட்டாள்)

நன்றி - கிரிகாசன்

www.thamilworld.com

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.