Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை பார்த்து அதிர்ந்துபோன பான் கி மூன் : விக்கிலிக்ஸ்

Featured Replies

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நடந்த கொடுமைகள் மற்றும் அந்த சூழலைப்பார்த்து பான் கி மூன் அதிர்ந்து போயிருந்தார்.யுத்தம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் முன்பு யுத்தசூனிய பகுதியாக காணப்பட்ட பிரதேசத்தின் ஊடக விமானத்தில் செல்லும் போது தான் முழு அழிவினையும் பார்த்ததாக ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், தான் பார்த்தவற்றுள் மெனிக்பாம் அகதிகள் முகாம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாக பான் கி மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததார்.

2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இரவு பான் கி மூன் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவென கொழும்பு விமான நிலையத்துக்கு சென்ற போது இலங்கைக்கான நிவாரண தூதுக்குழுவின் இணைத் தலைவரான இராஜதந்திரியிடம் இவ்வாறு கருத்துகளை பரிமாறிகொண்டுள்ளார்.

.அதன்பின்னர் நோர்வே தூதுவர் மெனிக்பாம் விஜயம் குறித்து கேட்டபோது அதுவொரு துன்பகரமான விஜயம் என பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான 200,000 பொதுமக்கள் மெனிக்பாம் முகாமில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

.அத்தோடு, மெனிக்பாம் அகதிகள் முகாமின் நிலை சூடானின் டாபர் மற்றும் கோமாவில் உள்ள முகாம்களிலும் பார்க்க அதிமோசமானது என இராஜாங்க அதிகாரிகளிடம் பான் கி மூன் விமர்சித்துள்ளார்.

இதேவேளை மெனிக்காமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

.யுத்தத்தின் பின் பான் கி மூன் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட உயர்மட்ட அரச தரப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

.இந்த தகவல் அமெரிக்க தூதரக பொறுப்பதிகாரி ஜேம்ஸ் ஆர் மூவரால் வெளியிடப்பட்டுள்ளது.

.அகதி முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட மக்கள் போதுமான தங்குமிடம் இல்லாமலும் நிழலுக்கு கூட மரங்கள் இல்லாத நிலையிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் இணையத்தை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

மனச்சாட்சியை அடகு வைத்துவிட்ட மனிதனும்,

பிணக்காட்டில் எரியும் பிணமும் ஒன்று தான்!

பான் கி மூன், ஒரு முள்ளந்தண்டு அற்ற உயிரினம்!

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் பின்னரான அழிவுகளை பான் கீ மூன் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவித்துள்ளார்: விக்கிலீக்ஸ் தகவல் _

9/7/2011 11:43:17 PM

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, யுத்தம் நிறைவடைந்த நிலையில் விமானம் மூலம் சென்று அப்பகுதியை பார்வையிட்டதுடன் அங்குள்ள முழுமையான அழிவுகளை இணைத்தலைமை நாடுகளுக்கு பான் கீ மூன் அறிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்போது அங்கு அமைக்கப் பட்டிருந்த மெனிக்பாம் அகதி முகாமின் பரிதாப நிலைப் பற்றி கூறியுள்ளதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயத்தில் ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதை செய்மதிப் படங்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 24 மணித்தியாலங்கள் இலங்கையில் இருந்து பாதிக்கப்பட்ட பலபகுதிகளை பார்வையிட்டதுடன் இது தொடர்பாக இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தூதுக் குழுவுக்கு விளக்கத்தை 2009 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இரவு விமான நிலையத்தில் வைத்துக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை விஜயம் தொடர்பில் நோர்வே நாட்டுத் தூதுவரான டோர் ஹெற்றெம்; கேட்டபோதே, யுத்தம் இடம்பெற்ற பகுதியில் அமைதியற்ற துன்பகரமான நிலைமையே காணப்பட்டதாக பான்கீமூன் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

போரின் காரணமாக 2 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் அடைப்பட்ட நிலையில் ஊட்டச் சத்து இன்றி இருக்கின்றதாகவும் கூறியுள்ளார். ஏனைய முகாம்களைப் பார்க்கும்போது இம்முகாம் மிகவும் மோசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33706

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.