Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கா தலைமையில்: ஜெனிவாவில் வைக்கப்படும் பொறி : பொறியில் சிக்கவைக்க மேற்குலகம்! ” கலக்கத்தில் சிறீ லங்கா”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • பிரசுரித்தவர்: admin September 7, 2011

“…………………………………தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது. இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார். அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மானித்துள்ளது. மகிந்த சமரசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ஜி.எல் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரைக் கொண்ட பலமான அணியொன்று களமிறக்கப்படவுள்ளது. இது சர்வதேசத்தின் எத்தகைய நகர்வையும் எதிர்கொள்வதற்காக வியூகம் என்றும், எதற்கும் தாம் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க. மொத்தத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரை அரசாங்கம் கலக்கத்துடன் தான் எதிர்கொள்ளப் போகிறது. எப்படியாவது இந்தக் கூட்டத்தொடரை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை அரசுக்கு இருந்தாலும் அடுத்த கூட்டத்தொடர் மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக இலங்கை அரசு இந்தமுறை நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை…………………..”

ஜெனிவாவில் வைக்கப்படும் பொறி தப்பிக் கொள்ளுமா இலங்கை அரசு?

ஜெனிவாவில் எதிர்வரும் 12ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 18வது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானங்கள் ஏதும் கொண்டு வரப்படலாம் என்ற முன்னேற்பாட்டுடன் காய்களை நகர்த்தி வருகிறது அரசாங்கம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கப் போகிறது என்றாலே இலங்கை அரசுக்கு ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்கிறது.2009இல் இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகள் துணை நின்றதால் அப்போது இலங்கை அரசு சுலபமாகத் தப்பிக் கொண்டது.இப்போது நிலைமை அப்படியில்லை. கடந்த சில கூட்டத்தொடர்களில் இலங்கை அரசு பெரும் பிரயத்தனங்களைச் செய்தே தப்பி வந்துள்ளது.

கடந்த முறையும், அதற்கு முந்திய முறையும் அரசாங்கம் பெரும் நெருக்கடிளுக்கு மத்தியில் தான் ஜெனிவா கூட்டத்தொடரை சமாளித்தது. அதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடு நாடாகப் பறந்து பிரசாரம் செய்தார்.கூட்டத்தொடர் ஆரம்பமாக முன்னரே ஜெனிவாவில் போய் இறங்கிய அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு, பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியது.

எல்லாவிதமான பிரசாரங்களின் முடிவிலும் கூட அரசாங்கம் ஒரு வாக்குறுதியைக் கொடுத்துத் தான் சமாளிக்க முடிந்தது.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வரும் வரை பொறுத்திருங்கள். அதன் பின்னர் தவறுகள் இருந்தால் பேசலாம் என்று கூறியே அரசாங்கம் தப்பித்துக் கொண்டது.

போனால் போகட்டும் சில மாதங்களில் அந்த அறிக்கை வந்து விடும் என்ற நம்பிக்கையில், பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுக்காமல் விட்டுப் பிடிக்க முடிவு செய்தன.நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை எப்படியாவது நவம்பர் 15ம் திகதிக்குள் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.ஏற்கனவே அது மேலதிக காலஅவகாசங்களைப் பெற்று விட்டது என்பதால், இன்னொரு கால அவகாசம் கோருவதற்கு வாய்ப்பில்லை. அப்படி வாய்ப்புக் கோரப்பட்டாலும் அதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இதற்கிடையில் நவம்பர் 15ம் திகதி வெளியாக வேண்டிய அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்தக் கூட்டத்தொடரில் சமர்ப்பித்து விட்டு, அடுத்த கூட்டத் தொடரில் அது பற்றிய விவாதம் ஒன்றை நடத்தலாம் என்று அமெரிக்கா ஆலோசனை கூறியிருந்தது.

அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்த போதும், அமெரிக்கா அதனை விடுவதாகத் தெரியவில்லை.இந்தக் கட்டத்தில் தான் கடந்தவாரம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் றொபேட் ஓ பிளேக் கொழும்பு வரவிருந்தார். கடந்த மே மாதம் கொழும்பு வந்த அவரை சந்திக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நேரம் ஒதுக்கிக் கொடுக்கவில்லை.

அமெரிக்கா போர்க்குற்ற விசாரணைக்கு கடும் அழுத்தங்கள் கொடுத்து வந்ததற்கு, இராஜதந்திர ரீதியில் பதிலடி கொடுக்க நினைத்திருந்தார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.ஆனால் இந்தமுறை அவர் பிளேக்கிற்கு அலரி மாளிகையில் காலை உணவுடன் சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார். கடைசி நேரத்தில் அமெரிக்காவில் வீசிய ஐரின் புயல் பிளேக்கின் பயணத்தையும் அடித்துப் போய்விட்டது. ஒரு வகையில் இது இலங்கை அரசுக்கு நிம்மதியாக அமைந்தது. ஏனென்றால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிறது. அதற்கிடையில் பிளேக் வந்து அழுத்தம் கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதே அதற்குக் காரணம்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா மேசைக்கு கொண்டு போவது பற்றிப் பேசுவதற்கு பிளேக் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இப்படியான நிலையில் அவரது பயணம் தள்ளிப் போடப்பட்டதால், ஜெனிவா பற்றிய அச்சம் அரசுக்கு கொஞ்சம் குறைந்துள்ளது.

ஆனாலும் பிளேக் எந்த நேரத்திலும் வந்து விடுவாரோ என்ற கலக்கம் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு நீடிக்கவே செய்யும். அதேவேளை, இந்தக் கூட்டத்தொடரில தமக்கெதிரான நடவடிக்கையில் இறங்கமாட்டாது என்று அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை முற்றுமுழுதாக நம்புகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை. தமக்கெதிராக ஏதாவதொரு பிரேரணையைக் கொண்டு வர மேற்குலகம் திட்டமிடலாம் என்ற அச்சம் அதற்கு இருந்து கொண்டே இருக்கிறது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்து ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை ஜெனிவா மேசைக்குக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்ட பின்னர், இலங்கை அரசு உசாரடைந்துள்ளது. * எப்படியாவது தம்மைப் பொறியில் சிக்கவைக்க மேற்குலகம் முனைகிறது என்பது அரசுக்கு வெளிச்சமாகி விட்டது.

* சிறிலங்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் 69 பக்க அறிக்கை – அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டது

இந்தநிலையில் தான், சீனா, ரஸ்யாவின் துணையுடன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வளைத்துப் போடும் காரியத்தில் இறங்கியுள்ளது.

ஆறு நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இன்னொரு பக்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா- நான்கு தென் அமெரிக்க நாடுகளுக்குப் பறக்கிறார்.

அதுமட்டுமன்றி வழக்கத்தை விட வலுவானதொரு அணியை ஜெனிவாவுக்கு இந்த முறை அனுப்பப் போகிறது அரசாங்கம். இதற்கு முன்னர் அதிகாரிகளை நம்பிக் களமிறங்கிய அரசாங்கம், இந்த முறை அமைச்சர்களையே முற்றுமுழுதாக களமிறக்கத் தீர்மானித்துள்ளது.

மகிந்த சமரசிங்க தலைமையிலான இந்தக் குழுவில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, ஜி.எல் பீரிஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரைக் கொண்ட பலமான அணியொன்று களமிறக்கப்படவுள்ளது.

இது சர்வதேசத்தின் எத்தகைய நகர்வையும் எதிர்கொள்வதற்காக வியூகம் என்றும், எதற்கும் தாம் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

* மொத்தத்தில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள கூட்டத்தொடரை அரசாங்கம் கலக்கத்துடன் தான் எதிர்கொள்ளப் போகிறது.

*மருத்துமனை மீதான தாக்குதலில் தொடர்புபட்டது 53வது டிவிசனே – உளறிக் கொட்டினார் சவீந்திர சில்வா

*பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார் பசில் – விக்கிலீக்ஸ்

எப்படியாவது இந்தக் கூட்டத்தொடரை சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கை அரசுக்கு இருந்தாலும் அடுத்த கூட்டத்தொடர் மிகப்பெரிய நெருக்கடியாக இருக்கும். ஆனால் எதிர்பாராத விதமாக இலங்கை அரசு இந்தமுறை நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.

கட்டுரையாளர் கபில்

http://mykathiravan....a-news/?p=14388

இங்கே பரகசியமாகத்தான் பொறி வைக்கப்படுகின்றது.

மேற்குலகம் சர்வதேச விசாரணை பொறிமுறையை வைப்பது பற்றி கொழும்பில் பல கட்சிகளை சந்தித்து அவர்களின் அபிப்பிராயத்தை பெறுகின்றது. இதுவே இவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை கூறி நிற்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.