Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்காலில் சனங்களின் கால்களில் மிதிபட்டு வந்த காலிழந்த பெண்ணின் கண்ணீர் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2009மார்ச்மாதம் 16ம் திகதி இருகால்களையும் சமர்க்களத்தில் இழந்தவள் இவள். முள்ளிவாய்க்காலிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளத்தில் மிதிபட்டு முட்களும் மனிதக்கால்களும் காயப்படுத்தி உயிரோடு வவுனியாவை அடைந்தவள்.

முகாமில் பட்ட துயரைச் சொல்லியழும் கதைகள் கண்களை ஈரமாக்கிவிடுகிற துயர்களவை. மலங்களிக்கக்கூட வசதியற்ற முகாமில் 3அல்லது 4நாளுக்கு ஒருமுறை இருளும் வரை காத்திருந்தே இயற்கை உபாதையையும் கழித்திருக்கிறாள்.

ஊனமுற்றவள் ஊருக்குப் போவதில்லை உறவுகளுக்குத் தொல்லை கொடுப்பதில்லையென்ற முடிவோடு இருந்தவள் முகாமிலிருந்து ஊர்போக வேண்டிய இக்கட்டில் தள்ளியது. பிறந்து 6மாதத்தில் தாயை இழந்தவள் எல்லாமுமாய் அவளுக்கிருந்த எழைத்தந்தையிடம் தான் 2010 இல் தஞ்சமடைந்தாள். அவளது ஒற்றை நம்பிக்கையான தந்தையும் 2011இவ்வுலகைவிட்டுப் போய்விட இப்போதைய ஆறுதல் தனிமையும் கண்ணீரும் தான்.

இன்று இவளுக்கு உதவியுமில்லை உறவுகளுமில்லை. தனது இயற்கைக்கடன்களைக் கழிக்கவோ அல்லது தண்ணீர் எடுக்கவோ எல்லாவற்றுக்கும் ஒரு துணை தேவைப்படுகிறது. ஆனாலும் ஊர்ந்து திரிந்து தனது கடன்களை முடிக்கிறாள்.

உதவிகள் செய்கிறோமென ஊடகங்களில் இவளது குரலை ஒலிக்க விட்ட ஊடகச் செம்மல்களும் இதோ உதவுகிறோமென படம்பிடித்தவர்களும் , தொலைபேசியில் பேசியவர்களும் தங்கள் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் முடித்துவிட்டு இவளை மறந்துவிட்டார்கள்.

ஊனமுற்றவளை முன்னாள் போராளியாக இருந்தாள் என்பதற்காக அவளது அயலும் உறவும் சொல்கிற பழிகளையெல்லாம் கண்ணீரோடு தாங்கிக்கொள்கிற தைரியத்தை மட்டும் தனக்குள் வளர்த்திருக்கிற இந்த ஏழைப்பெண்ணைத் துரத்துகிறவர்கள் முன் தானொரு விளம்பரப்பொருளாய் ஆகிவிட்டதாய் அழுகிறாள். உதவிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் மீண்டும் தனது குரலை எங்களிடம் தந்திருக்கிறாள்.

என்னதான் இவள் எங்களிடம் கேட்கிறாள் என எண்ணுகிறீர்களல்லவா உறவுகளே….? வேறென்ன உதவிதான் கேட்கிறாள். இதோ கேளுங்கள் இவளது துயரங்களை….இதயமுள்ளவர்களை நோக்கிய இவளது வேண்டுகை இது உங்களுக்காக….

இந்த 26வயதுப் பெண்ணின் குரலை அனைவரும் கேளுங்கள். தனது துயரங்களை உங்களைநம்பி கொட்டியழுதிருக்கிறாள். குரலைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்திக் கேளுங்கள்.

http://tamilnews24.com/joomla/tamilnews24/parthipan/nesakkaram/nesakkaram/audios/bavaa.asx

பிற்குறிப்பு :- இவளது குரலை நிகழ்ச்சியாக்கியவர்களையோ இவளைப்படம்பிடித்து செய்தி எழுதியவர்களையோ குற்றம் சொல்வதற்காக இல்லை. ஒரு இயலாத உதவிகளற்ற பெண்பிள்ளையை தேவைக்குப் பயன்படுத்திவிட்டு அவளை மறந்துவிட்டவர்களே…! உதவாவிடினும் பறவாயில்லை வெறும் நம்பிக்கைகளையாவது கொடுக்காமல் விட்டிருந்தால் அவள் நொந்துபோயிருக்கமாட்டாள். அல்லது உதவக்கூடியவர்களிடமாவது இவளைச் சேர்த்திருந்தால் ஒன்றரை வருடங்கள் எவ்வித ஆதரவுமற்றுத் தவித்திருக்கமாட்டாள். சுடச்சுடச்செய்திகள் மட்டுமே முன்னாள் போராளிகளையும் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் பாதுகாக்குமா ? (ஊடக ஜாம்பவன்களுக்கு மட்டும் இக்குறிப்பு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உறவுக்கு இதுவரை ஒருவித உதவியும் கிடைக்கப்பெறவில்லை. உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். உறவுகளின் ஆதரவும் இல்லாது தவிக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.