Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கரி - மஹிந்த சந்திப்பு! : உண்ணாவிரதத்தினை நிறுத்த தீர்மானம்

Featured Replies

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி இன்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச்சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின் போது யாழ். குடாவில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள மர்ம மனிதா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சங்கரி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை கிறிஸ் பூதத்திற்கு எதிராக நடைபெறவுள்ள உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தவே இந்த திடீர் சந்திப்பு என நம்பப்படுகின்றது..

யாழ். குடாவில் தற்போது ஏற்பட்டுள்ள மர்ம மனிதர்கள் விவகாரத்தைக் கண்டித்து எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள கோயில் ஒன்றின் முன்றலில் தமிழ்க் கட்சிகளின் (ஈ.பி.டி.பி. தவிர்ந்த) பிரதிநிதிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் தீர்மானித்துள்ளளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

இதேவேளை, இந்த விடயம் குறித்து டெலோ இயக்க அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, சனிக்கிழமை உண்ணாவிரதம் நடத்தப்படுவது தொடர்பில் இன்று மாலைக்குள் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார். பெரும்பாலும் உண்ணாவிரதம் நடைபெறும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.

மூலம்

சங்கரி, அன்னா ஹசாரே இல்லை என்றும் மகிந்த, மன்மோகன் இல்லை என்றும் தெரியும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தரப்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு – உறுதிமொழிகளை அள்ளி வழங்கினார் ஜனாதிபதி:-

08 செப்டம்பர் 2011

யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் பின் தள்ளப்பட்டது

தமிழ்த் தரப்புக்;கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றுமாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ்த் தரப்பில் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் பொலீஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வடக்கிலும் கிழக்கிலும் கிறிஸ் மனிதரால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்தும், தற்போது முழுமையாக வடக்கிலே இடம்பெறுகின்ற கிறீஸ் மனிதர் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் தமிழ்த் தரப்பினர் விரிவாக எடுத்துக் கூறினர். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவர்கள், தனக்கும் இதுபற்றி தெரிந்திருப்பதாகவும், இதற்காகவே தான் அமைச்சர் சுசில் பிறேம்ஜயந்தவை வடக்கிற்கு அனுப்பிவைத்து விசேட கூட்டமொன்றை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்த் தரப்பு, கிறீஸ் மனிதர் விடயமாக ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்களை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியபோது, கைதுசெய்யப்பட்ட தமிழ்ப் பொதுமக்களுக்கு உடனடியாக பிணை வழங்குமாறும், பின்பு ஒரு சமாதான நடவடிக்கை எடுத்து அவர்களுடைய வழக்குகளை முடிந்தளவுக்கு இல்லாமற் செய்வதற்கான முயற்சிகளை எடுக்கும்படியும் பொலீஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் இது தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பூரணமாக விசாரணை நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

மகிந்தா 'தெரிவித்தார்' 'உத்தரவிட்டார்' 'உறுதியளித்தார்' - இதை இந்தக்கட்சிகள் நம்பாமல் நடக்கவேண்டும். இல்லையேல் எமது மக்களால் தூக்கி எறியப்படுவார்கள்.

சொறியன் சங்கரி அயல் நாட்டு பயங்கரவாதிகளை மீண்டும் சந்தித்த பின்னர் மீண்டும் குப்பை கொட்ட ஆரம்பித்துள்ளான்.

யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் பின் தள்ளப்பட்டது

அத்துடன் இது தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பூரணமாக விசாரணை நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார். ஜனாதிபதியால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் அடிப்படையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தமிழ்த் தரப்பால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

http://www.globaltam...IN/article.aspx

இது 14ம் திகதி ஐ.நா அறிக்கை மனித உரிமைகள் சபைக்கு செல்லாமல் தடுக்க செய்த தந்திரம். அதன் பின்னர் சம்பிக்க ரணவக்காவின் பேயாட்டம் ஆரம்பமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.