Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லைக் கந்தனின் துணையுடன் ஆபத்தான கடற்பயணம் மேற்கொள்ளும் தீவுப்பகுதி மக்கள்

Featured Replies

"நாம் கடவுள் நம்பிக்கையோடு உயிரைப் பணயம் வைத்து பயணிக்கிறோம். எண்டைக்காவது பேராபத்தை எதிர்நோக்குவோம் என்ற பயம் எங்கட மனசில நிலைகொண்டிருக்கிறதை மறுக்கிறதுக்கில்லை.

ஒவ்வொரு முறையும் அலை எழும்பும்போது "முருகா முருகா' என நல்லைக் கந்தனை துணைக்கு அழைத்துக்கொள்ளுவம்" - நெடுந்தீவுக்கு படகில் செல்லும் சின்னத்துரை என்ற பயணியின் உள்ளக் குமுறல்கள் இவை.

யாழ்ப்பாணத்திலிருந்து தீவுப் பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் கடல்வழிப் பயணம் மேற் கொள்கின்றனர். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்தை சென்றடையும் வரை பெரும் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். காரணம் நயினாதீவு, நெடுந்தீவு ஆகிய தீவுகளுக்கு சேவையில் ஈடுபடும் படகுகள் போதியளவு பாதுகாப்பானவையாக இல்லாமையாகும்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=33660

வீரகேசரி இணையம் 9/5/2011 11:48:56 AM

01.jpg

பயணம் ஆரம்பிக்கும் யாழ்ப்பாணம் குறிகட்டுவானிலும் தீவுப் பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்புக்கென கவச ஆடை வழங்கப்படுகிறது. அவை போதியளவு பாதுகாப்பினை தரக்கூடியன எனச் சொல்வதற்கில்லை.

என்ன செய்வது தங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய உயிரைப் பணயம் வைத்து தெய்வத்தின் ஆசீர்வாதத்துடன் செல்ல வேண்டிய கட்டாயம் இப்பகுதி வாழ்மக்கள் தலையில் எழுதப்பட்ட விதியாயிற்றே. கடற் பயணத்தின் போது கவச ஆடைவழங்கப்படுகிறது தான். அது பூரண பாதுகாப்பானதல்ல என்பது மக்களின் எண்ணம். கவச ஆடையை பயணிகள் பலர் அணிந்துகொள்வதில்லை என்பது பாதுகாப்புத் தரப்பினரின் குற்றச்சாட்டு.

படகுப் பயணத்தின்போது மக்கள் எதிர்நோக்கும் ஆபத்தினை அறிந்து கொள்வதற்காக நெடுந்தீவு நோக்கிய எமது பயணம் ஆரம்பமானது.

குறிகட்டுவானிலிருந்து காலை 8 மணிக்கு படகுச்சேவை தொடங்கியது. வழமையாக இயங்கும் படகு இயந்திரக்கோளாறு காரணமாக சேவையில் ஈடுபடவில்லை. அதனால் வேறொரு படகுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆங்காங்கே உடைந்து பழுதடைந்த நிலையில் படகின் மேற் பகுதி காணப்பட்டது. 'நாராயணி' என்ற அந்தப் படகில் 6 சிறுவர்கள் உட்பட 48 பேர் நெடுந்தீவுக்குப் பயணமாகத் தயாரானார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்புக் கவசம் வழங்கப்படவில்லை.

ஒருவாறு ஆடி அசைந்து படகு செல்லத் தயாரானது. சிறிது தூரம் சென்றதும் படகின் வேகம் அதிகரிக்க அதன் அசைவு வேகமும் அதிகரித் தது. படகு மேலும் கீழுமாக அசையத் தொடங்கியதால் அச்சத்தில் சிறுவர்கள் அலறத் தொடங்கினார்கள். சிலர் வாந்தி எடுக்கத் தொடங்கினார்கள்.

02.jpg

பேரலைகள் திரண்டு வந்து படகுடன் மோதுகையில் சுமார் 7,8 அடி உயரத்துக்கு மேலும் கீழுமாக படகு அசையத் தொடங்கியது. அக்கணத்தில் மரணம் நிச்சயம் என்ற அச்சம் எமக்கு மேலிட்டது.

படகில் நடமாடுவதற்குக் கூட முடியாத நிலையில் ஒருவாறு முனைப் பகுதிக்குச் சென்று படகு செலுத்திக் கொண்டிருந்தவரிடம் உரையாடினோம்.

"இது நீர்கொழும்பிலுள்ள ஒருவருக்குச் சொந்தமான படகு. அண்மையில் தான் இங்கு கொண்டு வந்தார்கள். படகில் கொஞ்சம் பிரச்சினை (சமாளிக்கும் விதமாக) இருக்கத்தான் செய்கிறது. நம்பிக்கை தானே வாழ்க்கை தம்பி. இந்தப் படகில் அதிகபட்சமாக 80பேர் வரை பயணம் செய்யலாம். சில சந்தர்ப்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணிப்பதும் உண்டு.

இன்று காற்று அதிகமாதலால் அலைகளின் வேகம் அதிகமாக உள்ளது. அதற்கேற்ப படகினை சற்றுத் திசை திருப்பிப் பயணிக்க வேண்டும்"

03.jpg

இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே பாரிய அலை அடிக்க படகு முழுவதும் நீரில் நனைந்தது. நீர் வழிந்தோடுவதற்கு சரியான வழி செய்யப்படாததால் உள்ளே இருந்த பயணிகளும் நனைந்தனர். படகினுள் நீர் செல்லாமல் இருக்க படகு செலுத் துநரும் உதவியாளரும் அதிக சிரத்தையுடன் சிரமப்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. முடிவில் ஒரு மணிநேர பயணத்தை 2 மணித்தியாலங்களில் சென்று முடித்தோம்.

நெடுந்தீவிலிருந்து வரும்போது வடதாரகை 2 என்ற படகில் அச்சமோ சிரமமோ இன்றி பயணிக்கக் கூடியதாக இருந்தது. பயணிகளுக்கான உரிய பாதுகாப்பு அந்தப் படகில் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தென்னிலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நெடுந்தீவுக்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு பாதுகாப்பற்ற கடற்பயணங்கள் தவிர்க்கப்படவேண்டும்.

வெள்ளம் வந்த பின் அணைக்கட்ட முயற்சிப்பதை விட பாதுகாப்பான கடற்பயணம் உறுதிசெய்யப்படுவதற்கு அரச தரப்பினர் முன்வரவேண்டும்.

-இராமானுஜம் நிர்ஷன்

படங்கள்: சுஜீவ குமார் _

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.