Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவி காளமேகம் - சிலேடை பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பாடல் இருவேறு விதமான 
பொருள் தரும்படி அமைத்துப் பாடுவது 
சிலேடை அணி எனப்படுகிறது
இந்த சிலேடை அணியில் 
அமைந்த பாடல்களை 
சிலேடைப் பாடல்கள் என்கின்றனர்
காளமேகப் புலவர் 
பல சிலேடைப் பாடல்களை 
இயற்றி இருக்கிறார்

கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால் 
எட்டின்பன் னாடை யிழுத்தலால் முட்டப்போய் ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும் 
வேசையென லாமேவி ரைந்து 

கொள்ளுகையா னரிற் 
குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் தெள்ளுபுகழ்ச்செற்றலரை 
வென்ற திருமலைரா யன்வரையில் வெற்றிலையும் வேசையாமே

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த 
ஒரு தமிழ்ப் புலவர் ஆவார் வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் 
ஆசை கொண்டார் இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த 
சைவ சமயத்துக்கு மாறினார் 
இவர் சைவப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது ஆனாலும் இவர் 
பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார் 
இவர் பாடிய சிலேடைப் பாடல்களும், 
நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன 
சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார் இவர் ஒரு ஆசு கவி ஆவார்

திருவானைக்கா உலா, 
சரஸ்வதி மாலை, 
பரப்பிரம்ம விளக்கம், 
சித்திர மடல் முதலியவை இவர் 
இயற்றிய நூல்களாகும்


திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் 
(சமையல் செய்பவர்) இருந்தார் திருவானைக்காவில் சிவத் தொண்டு 
செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார்
அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் 
அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் 
தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார் அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள் 
கோவிலும் திருக்காப்பிடப்பட்டது
அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் 
ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான் சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் 
(காளமேகத்தின் இயற்பெயர்) 
வாயில் உமிழ்ந்துச் சென்றாள்
வரதனும் தன் அன்புக் காதலி தான் 
அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான் அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே 
கவி மழை பொழியத்தொடங்கினான்  அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.
 

 

  • Replies 53
  • Views 82.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவி ராஜா காளமேகம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருபொருள் தரும் சொற்றொடர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவி காளமேகப்புலவர்-1-

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவிகாளமேகம்-2-

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளமேகப்புலவர் பாடல்களில் சிவபரத்துவம் Part 1

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளமேகப்புலவர் பாடல்களில் சிவபரத்துவம் Part 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளமேகப்புலவர் பாடல்களில் சிவபரத்துவம் Part 3

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காளமேகத்தின் கணக்கு

சிலேடையில் புலியான காளமேகப்புலவர் கணக்கிலும் புலி எனக்காட்டும் ஒரு வெண்பா.

 

2 hours ago, உடையார் said:

காளமேகத்தின் கணக்கு

சிலேடையில் புலியான காளமேகப்புலவர் கணக்கிலும் புலி எனக்காட்டும் ஒரு வெண்பா.

 

அற்புதமான பதிவு. தமிழில் சிலேடை எப்பவுமே ஒரு தனி அழகு... பகிர்வுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலேடைப் பாடல் - காளமேகப் புலவர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வசைப்பா 1 - சிலேடைப் பாடல் - கவி காளமேகம் - Scolding Song 1

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கவிஞர்களில் காளமேகப்புலவர் தவிர்க்க முடியாதவர் ஆவார் புராணங்களையும் காப்பியங்களையும் அவர் செய்யவில்லை என்றாலும் தனிப்பாடல்களில் ஒரு மாபெரும் புரட்சி செய்த மகா கவிஞன் ஆகும் 

தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளவிற்கு அதிகமான அறநூல்களும் கவிதைகளும் புராண இதிகாச விளக்கங்களும் பெற்று இருப்பதாலேயே நமது மொழியின் அருமை பெருமைகளை தெரியாமலே போய்விட்டோம் 

இன்றைய நாட்களில் கணிப்பொறிகளில் பயன்படுத்தக்கூடிய பைனரி மொழி தமிழை அடிப்படையாகக் கொண்டது என்றால் உங்களுக்கு ஆச்சரியமான ஒன்றுதான் ஆனால் உண்மை அதுதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பைனரி கண்டுபிடித்த தமிழ் மொழியை என்னவென்று சொல்வது 

தமிழ் இலக்கியத்தை பேசுபவர்கள் திறனுடன் பேசும்பொழுது நேரம் போவதே தெரியாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் 

புலமையின் ஆழத்தையும் பொருள் செறிவின் விரிவையும் கவனித்தாள் பிரமித்துப் போய் விடுவோம் நம்மை வளர்க்கும் தமிழுக்கு என்னாலான ஒரு சிறிய முயற்சி இந்த காணொளி

 குறைகளைப் பொறுத்து நிறைகளை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் 

உங்கள் திண்டுக்கல் சின்னராஜ்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் ஒரு போர்த் தந்திரம் (காளமேகப் புலவர் )

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் மாஸ் காட்டிய காளமேகம் 
காளமேகபுலவர் 
கவி காளமேகம் 

------------------------------------

குடத்திலே கங்கை அடங்கும்னு சொன்னா 
கங்கை கரைக்கு போனேன் குடத்தில 
தண்ணி எடுத்துட்டு வந்தேன்னு 
பாடறது இல்ல 

குடத்துகுள்ள கங்கை அடங்கும்னு 
அவர் பாடின அதுல Logic இருக்கணும் 

இந்த பாட்ட படிச்சு பாக்கறவங்களுக்கு 
இந்த பாடல் படி குடத்தில கங்கை அடங்கும்னு அவர் சொல்றது சரிதான்னு சொல்லணும் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏரானைக் காவிலுறை என்னானைக் கன்றளித்த
போரானைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத
புத்திவரும் பத்திவரும் புத்திரவுற் பத்திவரும்
சத்திவருஞ் சித்திவருந் தான்.

https://ta.wikisource.org/wiki/காளமேகப்_புலவர்_பாடல்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நா இனிப்பதேன் நாய் ஓடுவதேன்
திங்கள் வருவதேன் மாலையில் இருள் சூழ்வதேன் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - புலவர்களின் சிலேடை விளையாட்டு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - அரசஞ் சண்முகனாரின் புலமை ஆற்றல்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - படுபயலே - பாடுபயலே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - மழை தந்த புலவர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - அரசஞ் சண்முகனார் & வள்ளல் பாண்டித்துரைத் தேவர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

 

படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படித்தத்தைப் பகிர்தல் - மாம்பழக் கவிச்சிங்க நாவலர்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.