Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரத்துக்கு கடும் நெருக்கடி

Featured Replies

மத்திய அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களாக உள்ள பிரணாப் முகர்ஜிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல், ப.சிதம்பரத்தின் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடி முற்றியது. .

ப.சிதம்பரத்தின் மதிப்பை குறைக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறி உள்ளன. 2ஜி அலைக்கற்றை முறைகேட்டில் திடீர் திருப்பம் ஏற்பட்டு தற்போது ப.சிதம்பரத்தின் பெயர் பலமாக அடிபடுகிறது. நிதி அமைச்சராக இருந்தபோது அவர் நினைத்திருந்தால் 2ஜி அலைக்கற்றை முறைகேட்டை தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம் அனுப்பிய கடிதம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய ரகசிய அறிக்கையை பிரதமர் அலுவலகம் நினைத்திருந்தால் வெளியாகாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் ப.சிதம்பரத்துக்கு வேண்டாத சக்திகள் அதை வெளிவரச் செய்து அவருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளன.

இந்த அறிக்கை பற்றி நிதி அமைச்சர் பிரணாப்பிடம் கேட்டபோது முதலில் கருத்து தெரிவிக்க மறுத்தார். ஆனால் இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகி உள்ளது என்று குறிப்பிட்டு ப.சிதம்பரம் பற்றிய விவரத்தை ஊர்ஜிதம் செய்தார்.

அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி அவர் பெருமையாக பேசியிருக்கிறார். பிரணாப் முகர்ஜி பதவியேற்ற சிறிது காலத்திலேயே அவருடைய அலுவலகத்தில் ஒட்டு கேட்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய நிதி அமைச்சரும்,

தற்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம்தான் காரணம் என்று பிரணாப் முகர்ஜி கருதினார். அதற்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த ரகசிய அறிக்கையை பிரதமருக்கு அவர் அனுப்பினார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமாக ஆர்ப்பாட்டமாக பேசும் ப.சிதம்பரம், இந்த ரகசிய அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பிறகு பிரதமர் பிராங்பர்ட்டிலிருந்து என்னிடம் பேசினார். நிதி அமைச்சர் வாஷிங்டனிலிருந்து என்னோடு தொடர்பு கொண்டார். பிரதமர் திரும்பும் வரை எந்த அறிக்கையும் நான் வெளியிட மாட்டேன் என்று பிரதமரிடம் உறுதி அளித்திருப்பதாக சிதம்பரம் கூறினார்.

ப.சிதம்பரம் வெளிப்படையாக இப்படி கூறியிருந்தாலும் அவர் தமது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் வந்து எத்தகைய நடவடிக்கையை எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அதுவரை உச்சநீதிமன்றம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்குமா அல்லது ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.maalaisudar.com/newsindex.php?id=37105%20&%20section=1

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா இணைப்பிற்கு, இவன் பெயர் நாறி, வாழ்நாள் பூர கழி திண்ண வேண்டும்

  • தொடங்கியவர்

2ஜி விவகாரம் : பிரதமர் பதில்

2ஜி விவகாரம் தொடர்பாக, தனது அமைச்சர்கள் மீது முழு ஆதரவு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, . இந்த விவகாரத்தில், உண்மை நிலையை ஆராயாமல் அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்வதே எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2ஜி விவகாரதத்தில், அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்து பிரணாப் முகர்ஜியுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://www.dinamalar...l.asp?Id=319459

Edited by akootha

  • தொடங்கியவர்

ப.சிதம்பரத்துடன் தொலைபேசியில் உரையாடினார் பிரணாப் முகர்ஜி!

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொலைபேசி உரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2ஜி ஸ்பெக்ரம் முறைகேட்டினை, ப.சிதம்பரம் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் என பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானதை அடுத்து, ப.சிதம்பரம் 2ஜி முறைகேட்டுக்கு நேரடி பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் அழுத்தமாக கோரிக்கை விடுத்தன.

நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ப.சிதம்பரத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் அப்போது எழுதிய கடிதம் குறித்து சில விளக்கங்கள் அளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரதமர் நாடுதிரும்பியதும், ப.சிதம்பரத்துடன் சென்று, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்திப்பார் எனவும், இவ்விவகாரத்தில் மத்திய அமைச்சரவை ஒன்றிணைந்து ப.சிதம்பரத்தை பாதுகாப்பது குறித்து தீர்மானம் எடுக்க கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.4tamilmed...-pc-say-sources

Edited by akootha

  • தொடங்கியவர்

ராஜினாமா செய்கிறார் ப.சிதம்பரம்?

2ஜி ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், தாம் ராஜினாமா செய்ய விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நினைத்திருந்தால் ஊழல் நடைபெறுவதைத் தடுத்திருக்க முடியும் என்றும், ஆனால் அவர் அதைச் செய்யத் தவறிவிட்டார் என்றும் நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடனேயே இந்த கடிதம் எழுதப்பட்டிருந்த நிலையில், இந்த கடிதம் குறித்த தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வெளியாகி தற்போதைய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்திற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் சிதம்பரம் ராஜினாமா செய்யவேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்த கதையாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா சார்பாக வாதிட்ட அவரது வழக்கறிஞர், இவ்வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் இவ்விவகாரத்தில் சிதம்பரத்திற்கு நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று மாலை சந்தித்த சிதம்பரம்,நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவித்ததோடு, தாம் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு சோனியா, பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பியவுடன் இப்பிரச்சனை குறித்து மேலும் விவாதித்து முடிவெடுக்கலாம்; இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்று கூறியதாகவும் அத்தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இதனிடையே பிரணாப் முகர்ஜியும் சோனியா காந்தியை சந்தித்துப் பேச உள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://tamil.webduni...110926054_1.htm

Edited by akootha

  • தொடங்கியவர்

'எல்லாம் ப.சிதம்பரத்துக்கும் தெரியும்’.. ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரியும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார்.

அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயவில்லை என்றும், அவருக்கும் எல்லாமும் தெரியும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.

இன்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது பேசிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும்.

2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் வழி மொழியப்பட்டது. உண்மை இப்படியிருக்க ராசா மட்டும் எப்படி குற்றவாளியாக்கப்பட்டார்?.

இதனால் பிரிவு 311ன் கீழ் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து விசாரியுங்கள். பிரதமரின் முன்னிலையில் அவர் ராசாவுக்கு அட்வைஸ் தந்தாரா இல்லையா என்பதைத் தெரிவிக்கட்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் பிரதமரையும் அழைத்து விசாரியுங்கள்.

அதே போல டிராய் விதிமுறைகளை ராசா மீறிவிட்டதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. அப்படி அவர் விதிமுறையை மீறியதை நிரூபிக்க எதிர்க் கட்சிகள் ஏதாவது ஆதாரங்களை தாக்கல் செய்யத் தயாரா? என்றார் ராசாவின் வழக்கறிஞர் குமார்.

http://www.alaikal.com/news/?p=83567

  • தொடங்கியவர்

சிதம்பரம் பதவி விலக மாட்டார்: காங்.,

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய மாட்டார் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் பங்கு குறித்து நிதியமைச்சகம் சார்பில் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டது. இந்த கடிதம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சிதம்பரம் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துபேசினார். டில்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை, சிதம்பரமும், பிரணாப் முகர்ஜியும் சந்தித்து பேசினர்.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவிக்க அமைச்சர் மறுத்து விட்டார். இதனிடையே இந்த பிரச்னை விரைவில் தீர்க்கப்பட்டு விடும், சுப்ரீம் கோர்ட் எந்த உத்தரவும் பிறப்பிக்கும் வரையில் இதில் தலையிட வேண்டாம் என காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பிரதமர் மன்மோகன் சிங் டில்லி திரும்பியதும் இந்த பிரச்னையில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தன. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரஷீத் ஆல்வி, 2ஜி விவகாரத்தில் சிதம்பரம் தவறு ஏதும் செய்யவில்லை. அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் என்ற பேச்சுக்கே இடமில்லை என கூறினார். மேலும் பெரியவிஷயமல்லாத கடித விவகாரம் தேவையில்லாமல் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=321472

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.