Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு

Featured Replies

புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு!

* போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம்

நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார்.

புதிய அரசு பதவியேற்றவுடனேயே வடக்கு - கிழக்கில் மோசமான சூழ்நிலை உருவானது. பெரும்போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விட சண்டை மூலம் தீர்வொன்றை எட்டிவிடலாமென நினைப்போரே ஜனாதிபதி மகிந்தவைச் சூழ இருக்கின்றனர்.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், யுத்தம் மூலமான தீர்வுக்கு இந்த அரசுக்கு பெரும் தடையாக இருப்பதால் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தும் அதேநேரம், தீர்வொன்றை நோக்கி முன்நகர்வதற்கு முன்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற்று புலிகளுக்கு கடும் அழுத்தங்களைக் கொடுத்து அரைகுறைத் தீர்வை திணித்து விடலாமெனவும் புதிய அரசு கருதுகிறது.

முன்னாள் வெளிவிகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் போன்றே தற்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் செயற்பட முனைகின்றார். சர்வதேச ரீதியில் புலிகளைத் தடை செய்வதன் மூலம் அவர்களது கருத்துக்களை வெளியுலகுக்குக் கேட்கச் செய்யாது, இந்தத் தடை மூலம் சர்வதேச ரீதியில் கிடைக்கும் ஆதரவுகளைப் பெற்று ஈழவிடுதலைப் போராட்டத்தை அடக்கி விடலாமெனவும் இந்த அரசு கருதுகிறது.

ஆனாலும், புலிகளின் பலம் குறித்த அச்சம், மக்கள் மத்தியில் அவர்களுக்குள்ள மிகப்பெரும் செல்வாக்கு சர்வதேச ரீதியில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு கிடைத்துவரும் அங்கீகாரங்களெல்லாம், சாணேற அரசுக்கும் முழம் சறுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.

ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் கிழக்கில் தொடங்கிய நிழல் யுத்தம் இன்று வடக்கு வரை வந்துவிட்டது. இது பெரும் போர்ச் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையை தணிக்கக் கிடைத்த இறுதிச் சந்தர்ப்பமே, போர்நிறுத்த உடன்பாட்டை அமுலாக்குவது தொடர்பாக ஜெனிவாவில் அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள பேச்சுக்களாகும்.

இந்தப் பேச்சுக்கான இடத் தெரிவிலும் இந்த அரசு ஒரு அரசியலை நடத்த முயன்றது. இலங்கையில் அல்லது, ஆசியாவில் எங்காவது ஒரு நாட்டிலேயே பேசுவோமென உறுதிபடக் கூறியது. ஒஸ்லோவில் பேசலாமென்ற புலிகளின் கோரிக்கையையும் நிராகரித்து வந்தது.

புலிகள் மீது கடந்த வருடம் பிற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் பயணத்தடை விதித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மூலம் புலிகளுக்கு தடை விதித்துவிட வேண்டுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், சர்வதேச மயப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையை ஆசிய மயப்படுத்துவதற்கு புலிகள் மீதான ஐரோப்பியத் தடையும் இலங்கை அரசுக்கு அவசியம் தேவை. இதனாலேயே புலிகளுடனான பேச்சுக்களை ஐரோப்பிய நாடொன்றில் நடத்தாது ஆசியாவில் எங்காவது ஓரிடத்தில் நடத்திவிடவேண்டுமென இலங்கை அரசு பெரும் முனைப்புக் காட்டி வந்தது.

ஐரோப்பிய நாடுகளில் அல்லது ஸ்கண்டிநேவிய நாடுகளில் பேச்சுக்களை நடத்தும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தால் புலிகளைத் தடைசெய்ய முடியாததொரு நிலை ஏற்படலாம். அத்துடன், ஐரோப்பிய நாடுகளில் பேச்சுக்கள் நடைபெறுவதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் மேலும் சர்வதேச மயப்படுத்தப்படுவதையும் இலங்கை அரசு விரும்பவில்லை.

புலிகள் மீது ஐரோப்பா தடை விதித்துவிட்டால் அங்கு புலிகளின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்படுவதுடன், அவர்களது நிதி சேகரிப்பு மற்று பிரசார நடவடிக்கைகளையும் முழுமையாக முடக்கிவிடவும் இலங்கை அரசு திட்டமிட்ட அதேநேரம், சர்வதேசமயப்படுத்தப்பட்டிரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.