Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசினால் பணம் - சாதனை படைக்கும் ஈழத்தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

28.jpg 28.09.11 மற்றவை

போரினால் பாதிக்கப்பட்டு, வெறுங்கை யோடு நாட்டை விட்டு வெளியேறியவர் ஐரோப்பிய கண்டத்தில் ‘மொபைல்’ சேவைத் துறையில் மிகப் பெரிய ‘பிஸினஸ்’ சாம்ராஜ்ய த்தை உருவாக்க முடியுமா? முடியும்... என நிரூபித்திருக்கிறார் சுபாஸ்கரன் அல்லிராஜா. இலங்கைத் தமிழர். அமெரிக்கா முதல் மத்திய கிழக்கு வரை 17 நாடுகளில் விரிந்து பரந்து கிடக்கிறது அவரது வியாபாரம். இந்தியாவிலும் தனது நிறுவனத்தைத் தடம் பதிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். ஆண்டு வருமானச் சுழற்சி 5000 கோடி ரூபாய் என்பது ஆச்சரியம்.

அகதியாக அடைக்கலம் வந்த நீங்கள் ‘மொபைல்’ சேவைத் துறையை தேர்வு செய்தது எப்படி?

‘‘எனது சொந்த ஊர் இலங்கையின் வடகிழக்குப்பகுதியில் 28a.jpgஉள்ள முல்லைத்தீவு. 1989-ல் இலங்கையில் வாழமுடியாத நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு பதினோரு வயது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை. கையில் பணம் எதுவுமின்றி தாய், தந்தையுடன் பிரான்ஸுக்கு அகதியாக வந்தேன். அங்கே எனது சகோதரர் பாஸ்கரன் இருந்தார். அவருடன் இணைந்து ஹோட்டல், துணி விற்பது என பல தொழில்கள் செய்தேன்.

போதிய வருமானம் இல்லை. அன்றாடம் உணவுக்கே அல்லாடும் சூழல். தொழிலில் நஷ்டம் வேறு. அகதி என்பதால் நிறைய சிரமங்கள். சுதந்திரமாகச் செயல்பட முடியாது. ஒவ்வொன்றுக்கும் அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும். அப்போதுதான் மொபைல் சேவைத் துறை பிரபலமாக ஆரம்பித்தது.

நான் ‘ப்ரீபெய்டு’ முறையில் மொபைல் சேவையைத் தொடங்கினேன். எனது அக்காவின் பெயர் லேகா. அதையே சற்று மாற்றி ‘லைகா மொபைல்’ என்று வைத்துக் கொண்டேன். ஒரு விஷயம் தெரியுமா... எனக்கு மொபைல் தொழில்நுட்பம் பற்றிய எந்த ஞானமும் கிடையாது என்பதுதான்.’’

தொழிலில் போட்டி வந்திருக்குமே. எப்படிச் சமாளித்தீர்கள்?

‘‘ஆமாம். ஆனால், ‘ப்ரீபெய்டு’ சேவையில் ஒரு வசதி உண்டு. அது... பணம் முதலிலேயே வசூலாகிவிடும் என்பதுதான்.

இதில் பிரெஞ்சு அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அது... ப்ரீபெய்டு முறையில் வசூலாகும் பணம், ஈழ விடுதலை அமைப்புகள் எதற்கேனும் அனுப்பி வைக்கப்படுகிறதா என் பதுதான். நான் இலங்கைத் தமிழன் என்பதால் 28b.jpgஅவ்வப்போது கண்காணிக்கவும் செய்தனர். ஆனால் காலப்போக்கில் அப்படி எதுவும் இல்லை என்று தெரிந்ததால், கண் காணிப்பதை விட்டுவிட்டார்கள்.’’

சரி!மீண்டும் தாய்நாட்டுக்குப் போகவேண்டும் என்கிற எண்ணம் இல்லையா?

‘‘பிறந்த மண்ணைப் பார்க்கணும்கற எண்ணம் இருக்கு. ஆனால் தற்போது அங்கு சூழ்நிலைகள் சரியில்லை!’’ என்று சொல்லும் சுபாஸ்கரன் தனது அறக்கட்டளை மூலம் மக்கள் சேவை செய்வதிலும் அக்கறை காட்டி வருகிறார்.

சரி! தமிழகத்துடன் உங்கள் தொடர்பு எப்படி?

‘‘எனது சொந்தங்கள் தமிழ்நாட்டில் இருக்காங்க. மனைவி, இரண்டு மகன்கள். சர்வதேச நாடுகளில் இருக்கும் எனது நிறுவனத்தின் பெரும்பாலான அயல்பணிகளும் (பி.பி.ஓ) சென்னை ராமாபுரத்திலிருந்துதான் செய்யப்படுது!’’ சுபாஸ்கரன் குரலில் உறுதி தெரிகிறது..

படங்கள் : சித்ரம் மத்தியாஸ்

-குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர, நன்றி இணைப்பிற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..! இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விதைத்த விதைகளெல்லாம் இப்போது பயன்தரத் தொடங்கியுள்ளன..! :rolleyes:

ஒவ்வொரு வருடமும் குறைந்தது இருபது 'பெரிய முதலாளிகளை' நாம் புலம்பெயர் தேசங்களில் உருவாக்கவேண்டும்.

சுபாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.