Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் மனித உரிமைக்காக பேசுபவராக இருந்தால் எந்நேரமும் சுட்டுக் கொல்லப்படலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31.jpg மற்றவை டாக்டர் பிநாயக் சென்.. கௌரவக் கொள்ளை யர்களுக்கு எரிச்சலூட்டும் பெயர். பழங்குடி மக்களின் தோழனாக தோள்கொடுத்து நின்ற காரணத்தால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். உலகம் முழுவதிலிருந்தும் அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எ ழுந்த கடும் எதிர்ப்பின் விளைவாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். வேலூர் சி.எம்.சி.யில் மருத்துவம் படித்தவர். மும்பையில் நடந்த கண்டனக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தவருடன் டீக்கடையில் அமர்ந்து இந்தியில் உரையாடிய போது..

என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்.. டாக்டரான உங்களைக் கண்டு எதற்காக மத்திய மாநில அரசுகள் எரிச்சலடைகின்றன. அப்படி என்னதான் செய்தீர்கள்.. ..?

‘‘அதுதான் எனக்கும் புரியவில்லை. பழங்குடி மக்களுடன் இருப்பது அவ்வளவு பெரிய குற்றமா.. ஒருவேளை மருத்துவமனை கட்டி பணம் சேர்க்கும் மருத்துவனாக இ ருந்திருந்தால் இந்த அரசுகளுக்கு என் மீது கோபம் வந்திருக்காது என்று நினைக்கிறேன்.

சத்தீஸ்கர் இயற்கை வளங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி.31a.jpg அங்கு கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அங்கு வாழும் பழங்குடிகள் அதைத் தங்களின் தெய்வமாகப் பார்க்கிறார்கள். அவர்களிடமிருந்து அந்த வளங்களைப் பறித்து ஜிண்டால், வேதாந்தா போன்ற பெரும் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்க இந்த அரசுகள் துடிக்கின்றன. அதற்கு இடையூறாக இருப்பவர்களை நீக்கத் தயங்குவதில்லை இந்த அரசுகள். அப்படி அரசுகளால் வேட்டையாடப்படும் மக்களுடன் நிற்கும் எங்கள் மீது அரசுகளுக்கு எரிச்சல் வருகிறது. அதற்காக தேசத்துரோக வழக்குகளைப் போட்டு மிரட்டிப்பார்க்கின்றன. இந்தியாவைக் கூறு போட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பவர்கள் தேசத் துரோகிகளா.. இல்லை அதை எதிர்த்து நிற்கும் நாங்களா..?’’

மன்மோகன் அரசின் ”ஆபரேஷன் க்ரீன் கன்ட்” என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி..?

‘‘இந்தியாவை ஆள்வது பெரு முதலாளிகள். அவர்களின் ஆட்களே இந்த அரசுகள். அது பி.ஜே.பி.யாக இருந்தாலும் காங்கிரஸாக இருந்தாலும் அவர்களின் நிலைப்பாடு ஒன்றுதான்.. முதலாளி விசுவாசம். நிலங்களும், இயற்கை வளங்களும் மக்களிடம் இருப்பதை அரசுகள் விரும்புவதில்லை. அதனால் மக்களிடமிருந்து அவற்றைப் பறித்து தனியார்களிடம் ஒப்படைக் கும் பணியைச் செய்கிறார்கள். அதற்குத் தடையாக இருக்கும் பழங்குடிகளை ‘பசுமை வேட்டை’ என்ற பெயரில் உரிமையுடன் கொன்று கு விக்கிறார்கள். இதைச் செய்வதற்கு ‘ஜல்வா ஜுடும்’ போன்ற கூலிப்படையினரையும் ஏவி விடுகின்றன அரசுகள். ஊடகங்கள் பிரச்னைக்குரிய பகுதிக்குச் செல்வதை முற்றிலும் தடை செய்திருக்கிறார்கள். அதனால் அங்கு நடக்கும் கொடூரங்கள் வெளியே தெரிவதில்லை.’’

இரண்டாண்டு சிறையில் இருந்த அனுபவம் குறித்து.. ?

‘‘மறக்க முடியாத அனுபவங் கள் நிறைய. என்னைப் போன்றவர் களுக்காக குரல் கொடுக்க பலர் இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் எதற்காக கைது செய்யப்பட்டி ருக்கிறோம் என்று தெரியாத அப்பாவிகள் பலர் காவல் துறையின ரால் திட்டமிட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.’’

இந்தியாவில் மனித உரிமை செயல்பாடுகளுக்கான சூழல் எப்படி இருக்கிறது..?

‘‘படு மோசம். இந்தியா ஒரு ஆபத்தான நாடாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் மனித உரிமைக்காக பேசுபவராக இருந்தால் எந்நேரமும் சுட்டுக் கொல்லப்படலாம். அதற்குக் காரணமாக சொல்வதற்கு நீங்கள் ’நக்சலைட்’ ’மாவோயிஸ்ட்’ என்ற எளிதான வார்த்தைகள் போதும். அவ்வாறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல்களை பெற்று வெளியுலகுக்குச் சொன்ன பல மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப் பட்டிருக்கிறார் கள் இந்தியா வில். மொத்தத்தில் இந்த அரசுகள், தங்களுக்கு எதிராக எந்தக் குரலும் வெளிவருவதை விரும்புவதில்லை.’’

மாவோயிஸ்டுகள் நடந்தியதாகச் சொல்லப்படும் ரயில் கவிழ்ப்பு உள்ளிட்ட தாக்குதல்களை ஏற்றுக்கொள்கிறீர்களா.. ?

‘‘நீங்களே சொல்லிவிட்டீர்களே.. மாவோயிஸ்டுகள் நடத்தியதாகச் சொல்லப்படும் என்று. ஒரு வேளை அந்தச் சம்பவங்கள் மாவோயிஸ்டுகளால் நடத்தப்பட்டிருக்குமானால் அது கண்டனத்திற்குரியது. பொதுமக்களைக் கொல்லும் எந்தச் செயலையும்.. அதை யார் செய்தாலும் ஆதரிக்க முடியாது.’’

பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டிருப்பது பற்றி..?

‘‘பேரறிவாளன் மட்டுமல்ல.. எந்த ஒரு நபருக்கும் மரண தண்டனை வழங்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஒரு அரசாங்கமே செய்யும் கொலை என் றுதான் சொல்ல வேண்டும். உலகம் முழுக்க மரணதண்டனை ஒழிக்கப்பட்டு வருகிறது. இந்தியா விலும் அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.’’.

- படங்கள்: சத்யன் -குமுதம்

பெரிய காந்தீய நாட்டில், மிகப்பெரிய 'மக்களாட்சி' நடக்கும் நாட்டில் சீனாவை விட மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. விளைவுகள் பயங்கரவாதமானவை.

தமிழ் உறவுகள் பற்றி சென் கூறியுள்ளது மலும் அவர்களை விடுவிக்க பயன்தரும்.

பின்குறிப்பு: இந்திய செய்திகள், குமுத இணைப்புக்கள், 'புறக்கணி சிங்களத்தை' என்றவுடன் உங்கள் பெயரே நினைவுக்கு வரும். வாழ்த்துக்கள் 10000 பதிவுகளுக்கு. நன்றிகள், தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரிய காந்தீய நாட்டில், மிகப்பெரிய 'மக்களாட்சி' நடக்கும் நாட்டில் சீனாவை விட மோசமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. விளைவுகள் பயங்கரவாதமானவை.

தமிழ் உறவுகள் பற்றி சென் கூறியுள்ளது மலும் அவர்களை விடுவிக்க பயன்தரும்.

பின்குறிப்பு: இந்திய செய்திகள், குமுத இணைப்புக்கள், 'புறக்கணி சிங்களத்தை' என்றவுடன் உங்கள் பெயரே நினைவுக்கு வரும். வாழ்த்துக்கள் 10000 பதிவுகளுக்கு. நன்றிகள், தொடருங்கள்.

நன்றிகள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் குமுதம் இணையத்தளத்திற்கு வருடக் கட்டணம் கட்டி குமுதத்தினை வாசித்து வருபவர். அவரின் கடவுட்சீட்டு இலக்கத்தினை எனக்கு தந்த்திருந்தார். இதனால் நான் குமுதத்தினை இலவசமாகப் பார்ப்பதுண்டு. நான் பார்த்த சில அரசியல் செய்திகளை யாழ்கள உறவுகளும் பார்க்கவிரும்புவார்கள் என்பதினால் இங்கு இணைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.