Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொமன்வெல்த் மாநாட்டில் கனடாவும், சிறிலங்காவும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை

Featured Replies

சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகள் தொடர்பாக கனடிய அரசு பகிரங்கமாக விமர்சித்துள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பேர்த்திலில் நடைபெறவுள்ள அனைத்துலக மாநாடு இருதரப்பு இராஜதந்திர மோதலுக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக றொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், போர்க்குற்றங்கள் தொடர்பான தீவிரமான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக் கூறுவதற்கும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற கனடாவின் கவலையை தான் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் நேற்றையதினம் கூறியுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற பொதுச்சபையில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இதன்காரணமாக பிரித்தானியாவின் கொலனியாக இருந்த 54 நாடுகளின் கூட்டமைப்பான கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடாவும், சிறிலங்காவும் இராஜதந்திர ரீதியாக நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக றொய்ட்டர் செய்தி கூறுகிறது.

உலகம் முழுவதிலும், குறிப்பாக சிறிலங்காவின் மனிதஉரிமைகளுக்காக கனடா தொடர்ந்து உரக்கக் குரல் எழுப்பும் என்றும் கனேடிய நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரிஜியானிஸ், அனைத்துலக நீதிமன்றங்களில் நீதி நிலைநாட்டப்படும் வரை சிறிலங்காவை கொமன்வெல்த் அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்று கனேடியப் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், 2013 இல் சிறிலங்காவில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் கூறியிருந்தார் என்றும் றொய்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=50437&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மோதலில் இலங்கை வெல்லும் என நான் சொல்கிறேன்

இந்த மோதலில் இலங்கை வெல்லும் என நான் சொல்கிறேன்

போரை முடிக்க இலங்கை மிகவும் பிழையான இராச தந்திரத்தை கையாண்டது. எதிரிகளைச் சேர்த்து உதவி வாங்கி யுத்தம் செய்தது. அரசாங்க அளவில் நாடுகள் ஒன்றிற்கு ஒன்று உதவி செய்வது பலனை எதிர்பார்த்து மட்டுமே. இனி இலங்கை அவர்களில் ஒருவரை திருப்தி படுத்துவதாயின் மற்றவர்களுடன் நேரடியாக பகைக்க வேண்டும். இந்தியா ஒன்றை தவிர, இலங்கைகு உதவிய நாடுகள் எல்லாம், இலங்கை திரும்ப கூடிய திசைகளையெல்லாவற்றையும் ஆராந்துதான் உதவியிருப்பார்கள். இலங்கை எந்த பக்கம் போகுதோ அதற்கேற்ற மாற்று நடவடிக்கைகளை எடுப்பார்கள். இலங்கை மேலே பிராந்து பறக்கிறதை அறியாமல், பற்றைக்குள் பதுங்கிற பூனையிடம் தப்ப வெளியான இடத்திற்கு ஓடி அவலப்பட போகுது. சீனா, இலங்கை கூறுமாப்போல், ராசதந்திர நெருக்கடிகைகளைப் பாவிப்பதில்லை என்பது எதோ ஓரளவு உண்மைதான். ஆனால் ஆபத்தில் உயிர்கொடுக்கும் நண்பனாகவும் இருந்ததில்லை.

நாம் எந்தச் சோலிக்கும் போகாத நாடுகள் எம்மை பயங்கரவாதிகள் என்று பட்டம் கட்டி அழித்திருப்பது, மகிந்தா நினைப்பதுபோல் அவரை துட்டகைமுணு என்று சிகளவருக்கு நிரூபிப்பதற்காகவல்ல. அவர்கள் எதிர்பார்த்தவற்றை இலங்கை சமர்ப்பிக்க தவறியதாலேயே நாடுகள் எதிராகத் திரும்பத் தொடங்கியிருக்கின்றன. வெற்றி கிடைத்தவுடன் அதில் பங்குபோட்டுகொள்ள துடித்த எதிர்க்கட்சிகள் இப்போது போர்க்குற்ற வசனத்தை உச்சரிக்கத் தொடங்கியிருகின்றன. தாங்கள் செய்த கைங்கரியத்தால்த்தான் உலகம் இலங்கையை போர்குற்றம் சம்பந்தமாக விசாரிக்க முடியாது என்ற U.N.P இப்போ எங்கோவோ வந்திருகின்றது. இலங்கையரசு மெல்ல மெல்ல நெகிழும் வரை உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் இடிகள் தொடர்ந்து விழும்.

கனடா மனித உரிமைகள் பேணுவதில் உலகத்தில் மதிப்புப் பெற்ற நாடு. தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து அளிப்பதில் முனனனி வகிக்கிறது. இலங்கைக்கு வெளியே ஈழத்தமிழர் அதிகம் வாழும் நாடாக மாறியிருக்கிறது. இலங்கையில் நடப்பவற்றையெல்லாம் மற்றைய நாடுகள் அறிந்திருந்தமாதிரியே தானும் அறிந்து வைத்திருந்தது. ஆனால் உலகம் முழுவதும் சேர்ந்து தமிழரை எதிர்த்த போது, தான் மட்டும் தனித்து உலகத்தை எதிர்த்து அரசியல் தற்கொலை செய்யாமல் தவிர்த்துக் கொண்டது. கனடாவின் இந்த போக்கு "ஓடு மீன் ஓடி உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்கும் கொக் கு" ஆகத்தான் படுகிறதே ஒழிய காலத்திற்கு ஒருமுகம் காட்டும் அரசாக தென்படவில்லை. பருவபெயர்ச்சி காற்று தெற்கிலிருந்து மாறி வடக்கிலிருந்து வீசத்தொடங்கியபோது காஞ்சு போன பயிர்களுக்கராதரவான வார்த்களைப் பேசிக்கொண்டுதான் வீசத்தொடங்கியது. இலங்கை அரசால் "தருஸ்மன் அறிக்கை" என்று இகழப்பட்ட ஆவணத்திற்கு அதிகார மவுசு கொடுத்து ஐ.நாவின் அறிக்கை என்று முதல் பேசிய சர்வதேச மனிதன் காப்பார் மட்டுமே. இன்றுவரை கனடா, இலங்கையை அந்த அறிக்கை மதித்து, அதில் கூறப்பட்டவற்றை நிறைவேற்றுமாறுதான் கேட்கிறது. சிலர் கனடா, எதிர்பார்த்தமாதிரி, ஐ.நா வில் மனுவைகொண்டுவராததால் ஏமாற்றிவிட்டதாக கவலையடைகிறார்கள். இவர்களுக்கு சொல்லத்தக்க பதில் "காலம்தான் பதில் சொல்லும்". கனடா ஒன்றைச் செய்ய வரும்பொது , சீனா, ருசியா போன்ற நாடுகளும் மதிப்பளிக்கும். எனவே நாமெல்லோரும் நமது ஏகோபித்த ஆதரவை கனடாவுக்கு வழங்கி கனடாவை முன்னின்று செய்ய வைப்போம். கனடா தோல்வியடையாது என்று நம்புவோம்.

வாழ்க கனடா! வெல்க தமிழீழம்.!

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.