Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்த கால தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள்-த.தே.நி.அகவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

/>கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி எதிர்வரும் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வுகள் வழமைபோல் எக்சல் மண்டபத்தில் (EXCEL) நடைபெறவுள்ளது.-தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்

கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட கசப்பான பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகளைத் திருத்தி வெளிப்படைத் தன்மையுடன் இவ்வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச் செயற்குழுவின் ஊடாக ஆரம்பக்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்டத்தினை நோக்கி உறுதியாக நகர்கின்றோம். இச் சூழலில் சில குழப்பகரமான செய்திகள் சில விசமிகளாலும், சுயநலன் விரும்பிகளாலும் மின்னஞல்கள் ஊடாகவும், கைத்தொலைபேசி ஊடான குஞ்செய்திகள் வாயிலாகவும் பரப்பப்பட்டும் வருகிறது. அத்தோடு இதற்கு பக்கபலமாக அண்மைக்காலமாக குழப்பகரமான பல செய்திகளை வெளியிட்டு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவிக்கும் செயலில் இறங்கியுள்ள சில ஊடகங்களிலும் இவ்வாறான விசமிகளின் செய்திகள் முகபுச்செய்தியாகவும் பிரசுரிக்கப்படுகிறது.

அத்தோடு எமது நிறுவனத்தின் பெயரான “தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்” எனும் பெயரில் போலியான விளம்பரங்களையும், செய்திகளையும் மக்களைக் குளப்பும் நோக்கோடு வெளியிட்டும் வருகின்றனர். மக்களாகிய நீங்கள் போலியானதும், குளப்பகரமானதுமான இவ்வாறான செய்திகளை புறம்தள்ளி எவ்வித குழப்பங்களும் இன்றி இவ்வருடமும் வழமைபோல் EXCEL மண்டபத்தில் நடைபெறவுள்ள தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

எமது தாயகத்திற்காக தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த நன்நாளில் அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை குனிந்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் கல்லறைகளிலும், திருவுருவப் படங்களிலும் மலர்களை தூவி வணங்குவதே அம் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.

எமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண்போகாது இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

தற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழுவானது வெளிப்படையானது. இக்குழு யாரையும் ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தமிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.

இதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும்.

எம்மால் செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில்http://www.tnrf.co.uk/ சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம் என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாவீரர்களை நினைவுகொள்ளும் நிகழ்வான தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எமது இணையத்தளத்திலும் www.tnrf.co.uk சென்று பார்வையிடலாம்.

மேலும் தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடர்பான விபரங்கள் அறிய 02087338203 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ அல்லது எனும் மின்னஞல் முகவரி ஊடாகவோ தொடர்புகொண்டு தெளிவுபெற்றுக்கொள்ளலாம்.

u1_TNN27NEWS2011Advert2-S.jpg

http://www.tamilthai.com/?p=27504

இந்த EXCEL இணையத்தளத்தில் இப்படி உள்ளது. எது உண்மை எது பொய் என்றுதெரியாமல் குளப்பமாக உள்ளது.

http://www.excel-london.co.uk/whatson/2011/11/

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளை குழப்பமில்லாது எல்லோரும் ஒற்றுமையாக நினைவு கூர்வோம்.

Edited by புலவர்

... தமிழ் தேசிய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல்முறையாக .... சிறிலங்கா/இந்திய புலனாய்வுத்துறையினர் .... லண்டன் EXCEL மண்டபத்தில் மாவீரர்நாள் அனுட்டிக்கிறார்கள்!!!!!!!!?????????

... மீண்டும் எதிரியினால் மிக திட்டமிட்டு தோண்டப்பட்ட புதைகுழியில் ....?????????????

... தமிழ் தேசிய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல்முறையாக .... சிறிலங்கா/இந்திய புலனாய்வுத்துறையினர் .... லண்டன் EXCEL மண்டபத்தில் மாவீரர்நாள் அனுட்டிக்கிறார்கள்!!!!!!!!?????????

... மீண்டும் எதிரியினால் மிக திட்டமிட்டு தோண்டப்பட்ட புதைகுழியில் ....?????????????

உண்மை,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை குனிந்து அகவணக்கம் செலுத்தி வருவதையும் குழப்ப ஸ்ரீலங்கா அரசும் இந்தியாவின் றோ அமைப்பும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டது அவை பயன் அழிக்கவில்லை ஆனால் இப்போது அது சுலபமான முறையில் செய்ய எம்மவர் சிலர் துணைபோக நினைப்பது மிகவும் வருந்துதற்கு உரியதாகும் இந்தநிலையில் மக்கள் மிகவும் தெளிவாக இருந்தாலும் அவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை யாரை நம்புவது இதற்க்கான விடையை தேடி குழப்பத்தில் உள்ள மக்கள் நினைவெழுச்சி மண்டபத்துக்கு செல்வதை தவிர்த்து வீட்டிலேயே அகவணக்கம் செய்ய தூண்டுவதாக அமையப்போகின்றது என்பதே எனது கவலை. இப்படி செய்தால் அது ஸ்ரீலங்கா அரசும் றோ வும் எதை செய்வதற்கு முயற்சித்தார்களோ அதை நாமே நிறைவேற்றியதாக அமையப்போகின்றது

மக்களிற்கு தெளிவை ஏற்படுத்துவது ஏற்பாட்டாளர்களின் மிகப்பெரிய சவாலாகும் சவாலை முரியடிப்பார்களா என்பதே எஞ்சியுள்ள கேள்வியாகும்.

Edited by தமிழ் அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.