Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாப் பேச்சு மேசைக்கு வெலிக்கந்தை விவகாரத்தை கொண்டுவர போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முடிவு

தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விடயத்தை ஜெனீவாப் பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டுவரவுள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்றூப் ஹொக்லண்ட் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானுவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்றூப் ஹொக்லண்ட் நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு, அவர்களை கரடியனாறு தேனகத்தில் சந்தித்தக் கலந்துரையாடினார்.

இச்ந்திப்பில் மாவட்டத் தளபதி நாகேஸ், மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட திட்டமிடல் மேம்பாட்டுச் செயலகப் பொறுப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுப்படைகள் எந்தெந்த இடங்களில் செயற்படுகின்றன என்ற தகவல்களை விடுதலைப்புலிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

இச்சந்திப்பு தொடர்பாக மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்துத் தெரிவிக்கையில்:-

இன்றைய சந்திப்பில் ஒட்டுப்படைகளின் நடவடிக்கைகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் ஜெனீவாப் பேச்சு வார்த்தையில் ஒட்டுப்படை விவகாரம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயம் என்பவற்றை பேச்சு மேசைக்கு கொண்டுவரவுள்ளதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் எம்மிடம் தெரிவித்துள்ளார் என்றார் தயாமோகன்.

தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் அரசு கூறப் போகும் பதில் என்ன?

கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்களை விடுவிக்கின்ற நடவடிக்கை எதனையும் இதுவரை சிறிலங்கா அரசு மேற்கொள்ளாது இருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றது.

கடத்தல் விவகாரம் நடைபெற்றுப் பதினைந்து நாட்களாகின்றன. இன்னும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவோ, கடத்தியவர்கள் தொடர்பாகவோ எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காது அரசு பாராமுகமாகவுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இன, மத, பேதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் உலக நாடுகள் பலவற்றில் கிளைகளை நிறுவி மனிதாபிமான ரீதியாகச் செயற்படுகின்றது.

இது எந்த வகையிலும் குறுகிய அரசியல் அல்லாமலோ அல்லது குறுகிய ஒரு இனம் சார்ந்த அமைப்பல்ல எனினும் போரினால் மிகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளில் அது முன்னுரிமைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த சுனாமிப் பேரழிவு ஏற்பட்டு தமிழர் தாயகத்தில் மக்கள் பெரும் அவதிக்குள்ளானபோது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனிதாபிமானப் பணியானது முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது.

இதன் பின்னர் சிறிலங்கா படைப் புலனாய்வுப் பிரிவும், ஒட்டுக்குழுக்களும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளை முடக்கும் வகையில் அதன் அலுவலகம் மீதான தாக்குதலை மேற்கொண்டதன் விளைவு ஒரு பணியாளர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேவேளை, பேரினவாத ஊடகங்களும், பேரினவாத சக்திகளும் கூடத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மீது அவதூறான பிரச்சாரங்களைப் பரப்பி அதனைச் சர்வதேச ரீதியாக முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குச் சர்வதேச நாடுகளில் இருந்து கிடைக்கின்ற உதவி வேறு வழி முறைகளுக்குப் பயன்படுத்துவதாக இருந்த சக்திகள் குற்றம் சுமர்த்தின.

எனினும் இந்தப் பேரினவாத சக்திகளால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை முடக்கிவிட முடியாத நிலையில் இப்போது வெலிக்கந்தைக் கடத்தல் விவகாரம் இடம் பெற்றுள்ளது.

வெலிக்கந்தையில் சிறிலங்கா படையினரின் அதியுயர் பாதுகாப்புப் பகுதிக்குள் வைத்து இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் விடுவிக்கப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துக்களின்படி ஒட்டுக் குழுக்கள்தான் என்பது முழுமையான உண்மை. எனினும் சிறிலங்கா அரசோ அல்லது படைத் தரப்போ கடத்தல்காரர்களைக் கண்டு பிடித்து அந்தப் பணியாளர்களை மீட்க வேண்டியது ஜனநாயகத்தை பேணும் அரசாங்கத்தின் கடமை.

ஆனால் பதினைந்து நாட்கள் கடந்த போதும் இன்னும் பதிலில்லாத சூழலே காணப்படுகின்றது.

கடத்தியவர்கள் விடுவிக்கப்படவேண்டுமென உள்நாட்டிலிருந்தும், சர்வதேச ரீதியாகவும் பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. பல அகிம்சை வழிப் போராட்டங்கள் என்பன நடைபெற்றன. எனினும் இன்னும் இதற்குச் சாதகமான பதிலளிக்க அரசு தவறி விட்டது.

வெலிக்கந்தையில் கடத்தல்காரர்களைத்தேடி பொலிசார் தேடுதல் நடத்துவதாக அரசு கூறுகின்றது. ஆனால் தீவுச்சேனையில் முகாமிட்டுள்ள ஒட்டுக் குழுக்களைக் கண்டு பிடிப்பதில் அரசு தவறு இழைத்து நிற்கின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் எச்சரிக்கைப்பட்டுள்ளனர். உங்களுக்கும் வெலிக்கந்தையில் ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என இவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதேபோன்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு அலுவலகத்துக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அச்சுறுத்தல், மிரட்டல் அதிகரித்துச் செல்வதானது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பணிகளைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு முடியாத பாதமான சூழலையே ஏற்படுத்தும்.

எனவே இக்கடத்தல் விவகாரத்துக்கு ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் அரச குழு என்ன பதில் கூறப் போகின்றது பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-

ஆசிரியர் தலையங்கம்(14/02/06)

காணாமல் போன தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளரை தேடும் பொலிஸாரின் நடவடிக்கை பலனளிக்கவில்லை

வெலிக்கந்தைப் பகுதியில் ஒட்டுக் குழுக்களால் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன தமிழர் புனர்வாழ்வுக் கழக ஊழியர்களை கண்டு பிடிப்பதற்காக கடந்த வாரப் பிற்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கந்தை இராணுவ சோதனை நிலையத்திற்கு அருகில் வைத்து கடந்த மாதப் பிற்பகுதியில் கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஏழு பேர் விடுவிக்கப்படவில்லை.

இவர்களுக்கு என்ன நடந்ததெனவும் தெரியவரவில்லை.

இந்த நிலையிலேயே வெலிக்கந்தைப் பகுதியில் இவர்களைத் தேடி பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் கடந்த வாரப் பிற்பகுதியில் தேடுதலை மேற்கொண்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒட்டுப் படைகளால் கடத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட ஐவரையும் இணைத்துக் கொண்டே காடுகளினுள் இந்தத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

எனினும் இந்தத் தேடுதலின் போது எவரும் கண்டுபிடிக்கப்படவில்லையெனவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழக்களால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளரை விடுவிப்பதர்க்கு டென்மார்க் அரசாங்கத்திடம் உதவிகோரி தமிழ்வொயஸ் இணையத்தளத்தால் டென்மார்க் பிரதமருக்கு எழுதப்பட்ட திறந்தமடலின் தமிழாக்கம்.

அனாஸ் போ ராஸ்முசன்

பிரதமர்

பிரதமர்அலுவலகம்

கடந்த 29 , 30 திகதிகளில் 10 தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கருணாகுழு என அழைக்கப்படும் அரசபடையின் ஓட்டுக்குழுவொன்றால் கடத்தப்பட்டுள்ளனர். இந்தக்குழுவுக்கு அரசபடையுடன் நெருங்கிய தொடர்பிருப்பதை போhநிறுத்த கண்காணிப்புக் குழவின் பேச்சாளரும் கடந்த 15 ந் திகதி சண்டேலீடர் என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மனிதநேயதொண்டர்கள் கடத்தப்பட்ட வெலிகந்த பிரதேசத்தில் கருணாகுழு என்ற அரசஒட்டுப்படையினர் சிறுவர்களுக்கு கட்டாயப்படுத்தி பயிர்ச்சியளிக்கும் ஒரு முகாமை வைத்திருப்பதாக முன்னாள் அவர்களின் 15 வயது உறுப்பினரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது 3 பணியாளர்கள் விடுவிக்கப்ட்டநிலையில் தொடர்ந்தும் 7 பணியாளர்கள் அவர்களால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது தொடவிருந்த பேசிசுவார்த்தையை குழப்புமென அமெரிக்க கொங்கிராஸ் அங்கத்தவரும் கவலை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் தமிழ்மக்களின் இயல்பு வாழ்கை சீரடையாவிடில் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள வேண்டாம் என உலகளாவிய ரீதியில் தமிழ்மக்களும் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கத்தெடங்கியுள்ளனர்.

கருணாகுழு உட்பட பல அரச ஒட்டுப்படைகளின் உத்தியோகபுூர்வ இணையத்தளங்கள் இங்கு டென்மார்க்கில் இருந்து இயங்குவது, ஒட்டுப்படைகளுக்காக சிலர் இங்கு செயப்படுவது என்பன போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.