Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கூட்டமைப்பினை தடை செய்ய வேண்டும்- தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

Featured Replies

அரசாங்கத்திற்கும் பாதுகாப்பு தரப்புக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஐ.நா. நிபுணர் குழுவிற்கு இரகசிய தகவல்களை வழங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக தடை செய்து அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் இனி எந்தவொரு பேச்சுவார்த்தையையும் கூட்டமைப்புடன் முன்னெடுக்கக்கூடாது. இனப்பிரச்சினையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளை உடனடியாக ரத்து செய்து விட்டு நாட்டிற்கு எதிரான சக்திகளை தண்டிக்க வேண்டும் என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர கூறுகையில், புலி பயங்கரவாதிகளின் அரசியல் பிரிவுதான் கூட்டமைப்ப்பாகும், இவர்கள் தொடர்ந்தும் இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். தேசிய அரசியலில் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டிற்கு எதிராக அவர்கள் செயல்படுவதை இனி ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவிற்கு, அரசிற்கும் பாதுகாப்பு தரப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வழங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. இது தொடர்பாக அரசாங்கம் கூடுதலான கவனம் செலுத்தி உண்மை நிலையை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு நாட்டிற்கு எதிரான தகவல்களை கூட்டமைப்பு, ஐ.நா.விற்கு வழங்கியிருக்குமாயின் அக்கட்சியை உடனடியாக தடை செய்ய வேண்டும். அது மட்டுமின்றி அனைத்து உறுப்பினர்களையும் விசாரணை செய்து தண்டனை வழங்கவேண்டும்.

ஏனென்றால் நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்களை பதவி தராதரம் பாராமல் தண்டனை வழங்குவதே முறையாகும்.

கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கோ தமிழ் மக்களுக்கோ நன்மை செய்தது கிடையாது. பிரிவினை வாதத்தை தூண்டிவிட்டு அழிவுகளையும் பின்னடைவுகளையுமே தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொடுத்துள்ளது. இவர்கள் உள்நாட்டில் இருந்து கொண்டு சர்வதேசத்தில் இடம்பெறும் நாட்டிற்கு எதிரான சதிகளுக்கு துணை போகின்றனர் என்றார்.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்றால்.....முதலில் இந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தை உடணடியாக இலங்கை அரசு தடைசெய்ய வேண்டும் அப்பொழுதான் தமிழர் தரப்பினருடனான பேச்சுவார்த்தைகள் அர்த்தபூhவமாக இருக்கும்......

இப்படிக்கு

தலைவர்

சுண்டல்

த.ப.தே.க

(தமிழ் பற்றுள்ள தேசிய கழகம்)

  • கருத்துக்கள உறவுகள்

த.ப.தே.க

(தமிழ் பற்றுள்ள தேசிய கழகம்)

சுண்டல் இப்படி இருக்கனும்

த.ப.தே.க: தன்னலம் பார்த்து தேசத்தைவிட்டுடோடியோர் கழகம்

த.ப.தே.க: தண்ணியடி பட்டிகளை (மலையாளம்) தேடும் கழகம்

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் த.ப.தே.க கட்சியினுடைய பிரச்சார செயலாளராக உடையார் அவர்கள் இருப்பார்கள்.......

கட்சியின் உறுப்பினாராக விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம்.......

இது எப்பிடி இருக்கு............

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தை, விமல் வீரவன்சவை எல்லாம் இயக்குவது / பின்புலத்தில் இருப்பது மகிந்தர். அதன் மூலம் சிங்கள மக்களை தனது பக்கம் வைத்திருக்க, அவர்களின் தேசப்பற்றை கிளறிவிட, தன்னை ஒரு மகாவம்ச வீரனாக காட்ட விரும்புவதற்கும்.

பான் கீ மூன்!

பெயர்லதான் மூன்

செயல்ல.....ஓவர் இருட்டு அமாவாசை!

ஐ.நாவிற்கு வயெ தகவல்களை பகிரங்கமாகவே வழங்கியிருக்க வேண்டும் - பா.அரியநேந்திரன் குணதாஸ அமரசேகரவின் கருத்துக்கு பதிலடி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஜனநாயக ரீதியாக வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஓர் கட்சியாகும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினைத் தடைச்செய்யவேண்டும் என கடும் பேரினைவாத சிந்தனையாளர்கள் கதைத்தாலும்கூட இதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வினை வழங்காது விடுவதற்காக இவ்வாறான கருத்துக்களைத் அவ்வப்போது தெரிவிப்பதற்காக அரசினாலேயே இவர்கள் பயன்படுத்தப்படுகின்றார்களோ? என்ற கேள்வியும் எழுவதாக அரியநேந்தின் சந்தேகம் வெளியிட்டார்.

ஐ.நாவிற்கு இரகசிய தகவல்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கியற்காக கூட்டமைப்பு தடைச்செய்யப்படவேண்டும் என்றும், கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்றும், இலங்கை அரசாங்கம் கூட்டமைப்புடன் நடாத்திவரும் பேச்சுவார்த்தைகளை நிறுத்த வேண்டும் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப் பட்டமையினால் தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர்: அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இன்றைய பேச்சுவார்த்தை தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தாலும் கூட அரசாங்கம் உள்நோக்கத்துடனேயே இதனை ஒத்திவைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் குற்றம் சாட்டுகின்றார். இந்த அரசாங்கமானது சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை என்ற வழிமுறையினையும், இலங்கையில் இருக்கின்ற பேரினவாத சிந்தனையாளர்களைத் திருப்திபடுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு என மற்றுமொரு வழியினையும் கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தியதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முறை ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான இன்றைய பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டமை குறித்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டாவறு கூறினார்.

மூலம்: உலகத் தமிழ் செய்திகள்

பிரசுரித்த நாள்: Oct 03, 2011 14:23:43 GMT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.