Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஜனநாயக புரட்சி முதலில் இடம்பெற வேண்டும் என்றார் லியோன் ரொக்சி –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Vickramabahu Karunaratne3_CI.jpg

விக்கிரமபாகு:-

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் புரட்சி பற்றி லியோன் ரொக்சி தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஜனநாயக புரட்சி முதலில் இடம்பெற வேண்டும் என்பது லியோன் ரொக்சியின் கருதாகும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் முதலாளித்துவ தலைவர்களால் முழுமையான ஜனநாயக செயற்பாட்டை நிலை நிறுத்த முடியாது என்பதால் அதைத் தொழிலாளர்களே நிறைவேற்ற வேண்டும் என லியோன் ரொக்சி குறிப்பிட்டுள்ளார். இந்த நாடுகளின் முதலாளித்துவ தலைவர்கள் சமூகத்தை மேல் நோக்கி கொண்டு செல்லாமல் பின் நோக்கியே கொண்டு செல்வார்கள் என்பதால் முழுமையான ஜனநாயக தேவைப்பாடுகளை ஒரு போதும் இவர்களால் நிறைவேற்ற முடியாது என லியோன் ரொக்சி கூறியிருந்தார்.

இலங்கை வரலாற்றை பார்க்கின்றபோது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறவேண்டும் என்பது அக்காலத்தில் ஜனநாயகத்தின் முதல் தேவையாக இருந்தது. ஆனால் இலங்கையில் முதலாளித்துவ பிரிவினர் மிகவும் பலவீனநிலையில் அன்று காணப்பட்டனர். இந்தியாவில் இந்திய முதலாளித்துவ சக்திகள் இந்திய தேசிய காங்கிரசின் கீழ் பலமான நிலையில் இருந்தனர். எனவே அந்த ஜனநாயக இலக்கை நோக்கி அவர்களால் பயணிக்க முடிந்தது. எனவே இலங்கையில் அந்த பணியை சம சமாஜ கட்சியினரே முன்னெடுத்தனர். இக்காலத்தில் சூரியமலர் இயக்கம் தோற்றமும், பிரித்தானியா ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டமும், சம சமாஜக் கட்சியினரால் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் முதலாளித்துவ பிரிவினர் இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்புகளை கொண்டிருக்கவில்லை.ஆனால் லங்கா சம சமாஜக் கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன் இணைந்த பல போராட்ட நடவடிக்கைகளையும் அக்காலத்தில் மேற்கொண்டிருந்தனர்.

எனவே இலங்கையில் மிகப்பெரிய ஜனநாயக சக்தியாக லங்கா சமசமாஜக் கட்சி பலம் பெற்றிருந்தது. 1947ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆட்சியை அமைக்க கூடிய அளவில் அதன்வலிமை காணப்பட்டது. ஏகாதிபத்திய விரோத போராட்ட நடவடிக்கைகளே சம சமாஜக் கட்சிக்கு அந்த வலிமையை வழங்கியது. ஆனால் சுதந்திரம் கிடைத்த பின்னர் ஆட்சிக்கு வந்த இலங்கையின் முதலாளித்துவ பிரிவினர் முதலாளித்துவ இலக்கை பூர்த்தி செய்யவில்லை. இந்தியாவில் இந்திய முதலாளித்துவம் அதைச் செய்திருந்தது. மாறாக இலங்கையில் இலங்கை முதலாளித்துவ பிரிவினர் இனவாதத்தை தமது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கருவியாக பயன்படுத்த தொடங்கினர். இதற்கு தமிழ் தலமைகளும் ஆதரவை வழங்கி இருந்தன. இந்த போக்கு ஏற்பட முக்கிய காரணம், இலங்கையில் இடதுசாரி சக்திகள் பலமாக இருப்பதால் ஆட்சி அவர்களிடம் போய்விடும் என்ற அச்சம் காரணமாக. முதலாளித்துவ பிரிவினர் அதில் இருந்து தம்மை காத்துக் கொள்ள இனவாதத்தை ஆயுதமாக பாவிக்கத்தொடங்கினர்.

இவற்றின் காரணமாக தமிழ் தேசியப் பிரச்சினை மிக உச்ச நிலைக்கு வந்தது. தமிழ் அரசுக் கட்சியின் தோற்றமும் இடம்பெற்றது. தமிழ் தேசிய பிரச்சினையின் தாக்கத்தை, வலிமையை இந்த நாட்டின் பாரம்பரிய இடதுசாரிகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை. அதன் தாக்கத்தை புரிந்து கொண்டு அதனை உள்வாங்கி தமது சமூக விடுதலை பயணத்தை தொடர்வதற்கு இடதுசாரிகள் திராணியற்றவர்களாக காணப்பட்டனர்.தமிழ் தேசியப் பிரச்சினைக்கு வெறுமனே சமத்துவம் என்ற வாய்ப்பாட்டையே அவர்கள் தீர்வாக கொண்டிருந்தனர். மேலும் பண்டா செல்வா உடன்பாடு ஏற்பட்டபோது கூட மிகப் பலமான நிலையில் இருந்த சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த உடன்பாட்டுக்கு எதிராக பேரினவாத சக்திகள் கலவரத்தை உருவாக்கிய போது பண்டா செல்வா உடன்பாட்டை பாதுகாப்பதற்கு எதனையும் செய்யாதவர்களாக இந்த இடதுசாரிகள் செயற்பட்டனர். இதேநேரம் இவர்கள் பின்னைய நாட்களில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை முற்போக்கு தன்மை கொண்டது எனவும் எண்ணவும் தொடங்கினர். சிங்கள பௌத்த பேரினவாதம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதால் அது முற்போக்கு தன்மை கொண்டது என இவர்கள் எண்ணத்தலைப்பட்டனர். மேலும் சிங்கள பௌத்த பேரினவாதம் விவசாய சீர்திருத்தங்களை கருத்தியலாக கொண்டுள்ளது என்றும் கூறத்தொடங்கினர். இந்த உறவுகளால் இன்றுஇலங்கையில் சிங்கள பௌத்தபேரினவாதமும் பாரம்பரிய இடதுசாரி கட்சிகளும் ஒன்றாகிப் போன நிலமை காணப்படுகிறது. இதன் விளைவாக உலகமேஅச்சம் கொள்ளும் அளவிற்கு கொடிய சிங்கள பௌத்த பேரினவாதம் மிக உறுதியாக ஆட்சித்தளத்தில் உள்ளது.

மகிந்த ராஜபக்ஸ கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது பலஸ்தீனத்தின் விடுதலை விரைந்து வழங்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து உள்ளார். பலஸ்தீன நாட்டின் சுதந்திரத்திற்காக தான் எதையும் செய்ய தயாராக இருப்பதுபோல் அவரது உரை அமைந்திருந்தது. பலஸ்தீன மக்கள் மீதும் அந்த நாட்டின் சுதந்திரத்திற்காகவும் இவளவுதூரம் குரல் கொடுக்கும் மகிந்த ராஜபக்ஷ இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை எப்படி பார்க்கின்றார் என்பதையே இங்கு நாம் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொடிய முறையில் ஒடுக்கி அழித்த தலைவராக வரலாற்றில் மகிந்த ராஜபக்ஷ காணப்படுகின்றார். மகிந்த ராஜபக்ஷ பலஸ்தீன மக்களுக்கு சுதந்திரத்தை வழங்காது எந்த நாடு பலஸ்தீன மக்கள் மீது இவளவு கொடுமைகளை புரிகின்றபோது, அந்த நாடான இஸ்ரேலிடம் இருந்து உதவிகளைப் பெற்று தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கினார்.தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுடுகாடாக்கியும் உள்ளார். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்றொழித்து, பல லட்சம் மக்களை நாட்டைவிட்டு வெளியேற்றி வைத்துவிட்டு இன்று ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக மகிந்த ராஜபக்ஷ குரல் கொடுக்கின்றார். யுத்த அழிவுகளால் நொந்து போய் இருக்கும் தமிழ் மக்களுக்கு தினம், தினம் ஏதோவிதத்தில் தொல்லை கொடுப்பதை வழமையாக்கியுள்ள மகிந்த ராஜபக்ஷ பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருப்பது விந்தையாக உள்ளது.

உண்மையாக இந்த நாட்டின் பாரம்பரிய இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் உண்மை நிலையை உணர்ந்து அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும், உள்வாங்கி அவர்களின் தலமையையும் தமது சோசலிச விடுதலைப் போராட்டத்துக்குள் உள்வாங்கி இருக்கவேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. அவர்களுக்கு பேரினவாதம் முற்போக்காக தெரிந்திருக்கிறது. ஆனால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பிற்போக்கானதாக காணப்பட்டுள்ளது. உண்மையில் தமிழ் தேசிய பிரச்சினையை இந்த நாட்டின் இடது சாரிகள் சரியாக புரிந்திருந்தால் இந்த நாடு இவளவு அழிவுக்குள் சென்றிருக்காது. தமிழ் மக்களும் இவளவு வேதனையுடன் சிதறிப்போய் வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இவர்கள் விட்ட தவறை நாம் ஒரு போதும் விடமாட்டோம். எமது அரசியல் பயணம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே தொடங்கியதாகும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குசுயநிர்ணய உரிமை உண்டு என துணிந்து வெளிப்படுத்தியவர்கள் நாமே. தென்பகுதியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் முற்போக்கு தன்மை கொண்டவராக காணப்படுகின்றார். ஏனைய தமிழ் அமைப்புகளைவிட அவரது அமைப்பில் ஓரளவு தொழிலாளர் வர்க்க தளம் காணப்படுகின்றது. எனவேஇத்தகைய தலைமைகளை உள்வாங்கி இந்த நாட்டின் விடுதலைக்காக நாம் போராடி வருகின்றோம். வரலாற்றில் பாரம்பரிய இடதுசாரி சக்திகள் விட்ட தவறை நாம்விடாமல் தமிழ் தலமைகளை அணிசேர்த்து விடுதலையை நோக்கிப் பயணிக்கின்றோம். இது ஒரு வரலாற்று கடமையாகும்.

இந்த நாட்டில் தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாக தேசிய இனப் பிரச்சினை இருந்து வருகின்றது. லியோன் ரொக்சி குறிப்பிட்டதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஒரு நாட்டின் விடுதலைக்கு அந்த நாட்டில் உள்ள தேசிய இனப்பிரச்சினையை முதன் நிலை கொடுத்து அணுக வேண்டும். அதையே நாம் செய்துள்ளோம். எமது நிலைப்பாட்டுக்கு மக்கள் அங்கீகாரம் நிச்சயம் வழங்குவார்கள். எனவே எதிர்காலம் எமக்கு சாதகமாகவே அமையும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68046/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களை நாமும்(தமிழ் பெருபான்மை) அரவணைக்கமாட்டோம்...பெரும்பான்மை சிங்களவர்களும் அரவணைக்கமாட்டர்கள்....

இப்படியான தலைவர்கள் இரு சமுகத்திலும் வர வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.