Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பாலியல் முறைகேடு விசயத்தை' இமெல்டா சுகுமார் இரகசியமாகக் கையாண்டிருக்க வேண்டுமாம்: பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் ஆதங்கம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-10-11 22:23:54]

M_iGknosiyas150.jpg

பாலியல் முறை கேடுகளில் பலாலி ஆசிரியகலாசாலை யாழ் மாவட்டத்தில் முன்னனியில் திகழ்வதாக மறைமுகமாகக் குறிப்பிட்ட யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரை திட்டித் தீர்த்துள்ளார் பலாலி ஆசிரியர் கலாசலை அதிபர். பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்த கருத்து வேதனையளிக்கிறது என பலாலி ஆசிரியர் கலாசாலையின் பீடாதிபதி எம். இக்னேஷியஸ் தெரிவித்துள்ளார்.

பலாலி ஆசிரியர் கலாசாலையில் பாலியல் முறைகேடுகள் இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பில் தாம் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தமிழ்மிரர் இணையத்தளத்திக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே பீடாதிபதி எம். இக்னேஷியஸ் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

"அரசாங்க அதிபர் தான் ஒரு அரச அதிபர் என்ற சிந்தனை அற்ற தன்மையில் பொறுப்புணர்ச்சி வகையில் இவ்வாறான அபாண்டமான குற்றச்சாட்டினை தெரிவித்திருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொருவருக்கு எந்தளவிற்கு கேவலப்படுத்த முடியுமோ? எந்தளவிற்கு மரணதண்டனைக்கு நிகரான அவமானத்தினை ஏற்படுத்த முடியுமோ, அந்தளவிற்கு அரச அதிபர் நடந்து கொண்டிருக்கின்றார். யாரோ தனக்கு பிடித்த ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர் தகவல் வெளியிட்டிருக்கின்றார். அவரால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மையா?, பொய்யா? என்பது குறித்து எங்களிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதன் பின்னரே அது குறித்து ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக இந்த விடயம் கல்வியுடன் தொடர்புபட்டிருப்பதால் இந்த விடயத்தினை இரகசியமாகக் கையாண்டிருக்க வேண்டும். அறிவற்ற ரீதியில் யாழ். அரச அதிபர் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியது, கவலைக்குரியது கண்டனத்துக்குரியது.

இந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதற்கும் அப்பால் இந்த விடயம் தொடர்பில் அவர் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அரச அதிபரால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய்களாகும். எமது கல்விச்சாலையில் இருக்கக் கூடிய அனைவரும் நல்லவர்கள். எமது கலாசாலையினை நாங்கள் ஒரு ஆலயமாகவே பார்க்கின்றோம். உலகிலேயே ஆசிரியர்கள் கடவுளர்களுக்கு சமமானவர்களாகவே பார்க்கப்படுகின்றார்கள். அரச அதிபரின் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையால் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது கலாசாலையில் கல்வி பயில்கின்ற ஆசிரிய மாணவிகள் கண்ணீர்விட்டு அழுகின்றனர்.

குடும்பமான பெண் ஆசிரியர்கள் தமக்கு இதனால் குடும்பங்களில் நெருக்கடி நிலை ஏற்படுவதாகவும், திருமணமாகாத பெண் ஆசிரிய மாணவிகள் எதிர்காலத்தில் தமது திருமண வாழ்வு பாதிக்கப்படும் அபாய நிலை ஏற்படும் என்றும் எந்த முகத்துடன் பாடசாலைகளுக்குச் செல்வது? என்றெல்லாம் கேள்வி கேட்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அரச அதிபர் பதில் சொல்லும்வரையில் தாம் போராடவுள்ளோம்" என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=50715&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

விசாரனை நடைபெறுகின்ற போது இவரையும் தீவிர விசாரனை செய்யவேண்டும்.............

விசாரனை நடைபெறுகின்ற போது இவரையும் தீவிர விசாரனை செய்யவேண்டும்.............

இவர் போர்க்குற்றம் நடைபெறவில்லை என்று நிரூபிக்க போர்க்குற்ற விசாரணை நடைபெறுவதை தடுக்க முயலும் ராச பக்சாவிடம் பாடம் படித்த வாத்தி. இவர் அப்பா குதிருக்குள் இல்லை என்பதைத்தான் கூறுகிறார்.

ஆனால் இமெல்டா இந்த பக்கம் திரும்பியதே தான், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அளித்த சாட்சியங்கள் உண்மை என நிரூபிக்க என்பதையும் நாம் மறக்க கூடாது. இல்லையாயின் இமெல்டா ஆமியென்ற பேரில் பேயாய் அலையும் பூதங்களையும், ரவுடி கூட்ட ஒட்டு குழுக்களயும் சேர்த்து விசாரிப்பாவா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இவ ஒண்ணாம் நம்பர் ... போல தெரியுது.... வயித்து கஸ்டமாக இருக்கும் விடுங்கப்பா.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு நடைபெறுகின்ற கூத்துகளுக்கு இவர் தான் முக்கிய காரணம் போல...ஏன் அவசர பட வேண்டும்?

நெஞ்சில் உரம் இருந்தால்...நேர்மை திறன் இருந்தால்.....எந்தவகையான விசாரனையும் எதிர்கொள்ள தயார் என்றல்லவா அறிக்கை விட்டிருக்க வேண்டும்?

இன்று யாழ்பாணத்தில் பல கல்லுரிகளிலும் இது நடைபெறுவதாக அங்கிருக்கின்ற ஆசிரிய நண்பண் ஒருவன் சொன்னான்......... இவர்களை நேம் அன்ட ஷேம் மாதிரி இவர்களுடைய பெயர்களை பததிரிகைகளில்போட்டு அடையாளம் காட்ட வேண்டும்..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் அரச அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

October 12th, 2011 1:06 PM0 Comments

protest-140x140.jpg

பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்கள் யாழ் அரச அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

பலாலி ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களைப் பற்றி அவதூறான கருத்துக்களை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு வெளியிட்டு வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இதில் யாழ். பலாலி ஆசிரியர் கலாசாலையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரிய மாணவர்களும் நிர்வாகத்தினரும் ஈடுபட்டனர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உண்மைக்குப் புறம்பான வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கூறினர்.

http://www.vanakkamnet.com/palali-teaching-school-teachers/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.