Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி போகும் தூக்குத் தண்டனைக் கைதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02.jpg 16.10.11 ஹாட் டாபிக்

ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் மரண தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் பொதுமக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். தூக்கை தற்காலிகமாக நிறுத்த உதவிய இந்த மக்கள் ஆதரவு தான், இப்போது மூவருக்கும் சிக்கலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரி த்தது முதலே தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிப் பாகுபாடு இன்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில், மூவருக்குமான மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தின. முதல்வருக்கு வேண்டுகோள் வைத்தன.

google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

தமிழகத்தில் நடந்த இந்தப் போராட்டங்களின் விளைவாகவே, தமிழக சட்டமன்றத்தில் மூவரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மரண தண்டனை எதிர்ப்புப் போராட்டங்களின் போதும், சட்டமன்றத் தீர்மானத்தின் போதும், காங்கிரஸ் கட்சி மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. விஜயதரணி வெளிநடப்புச் செய்தார். பிறகு, ஈ.வி.கே.எஸ். இள ங்கோவன் தலைமையில், ராஜிவ் படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது. ராஜிவ் படுகொலையில் த ண்டிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்று இந்த உண்னாவிரதத்தில் முன்வைக்கப்பட்டது.

முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளாக கருணை மனு தாமதம் செய்யப்பட்ட காரணத்தால் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் அவர்கள் குறிப்பிட்டனர். வழக்கு விசாரணைக்கு வந்த போது, அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகப்பன் மற்றும் சத்யநாராயணன் ஆகியோர், எட்டு வார காலத்துக்குள் மத்திய அரசும் மாநில அரசும் பதில் கூற வேண்டும் என்றும், அதுவரை மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் உத்தரவிட்டனர்.

மூவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த அன்று, தமிழ் உணர்வாளர்களும், மரண தண்டனை எதிர்ப்பாளர்களும் ஆயிரக்கணக்கில் கூடி, ‘மரண தண்டனையை ரத்து செய்’ என்று கோஷங்கள் எழுப்பினர். பழ.நெடுமாறன், வைகோ போன்ற தலைவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்குக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்த அன்று கூடிய கூட்டமே, இன்று இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜி.கே.மூப்பனார் பேரவை’ என்ற அமைப்பின் தலைவர் எல்.கே.வெங்கட் என்பவர் செப்டம்பர் இரண்டாவது வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘‘ராஜிவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்கள் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த போது, மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது என்று ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தின் உள்ளேயே கோஷங்கள் எழுப்பினர். நீதிமன்ற வளாகத்துக்குள் கூடி கோஷங்கள் எழுப்பியதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்டுள்ளனர். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நியாயமாக நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் உடனடியாக இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்’’ என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 15 அன்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் எச்.எல்.தத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளனுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

இதை பெற்றுக்கொண்ட முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்துக்கு எழுதியுள்ள பதிலில் தாங்கள் நேரில் வந்து ஆஜராவதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம், இவர்கள் இருவரும் நேரில் ஆஜராவது குறித்து முடிவெடுக்கும். பேரறிவாளன் தனியாக ஒரு வழக்கறிஞர் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிகிறது.

இந்த வழக்கு குறித்து, நளினியின் வழக்கறிஞரான புகழேந்தியிடம் கேட்டபோது, “மனுதாரர் குறிப்பிடுவது போல, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்த போது, நீதிமன்றத்தின் உள்ளே யாரும் முழக்கங்கள் எழுப்பவில்லை. இது உண்மைக்கு மாறானது. ஒருவேளை வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக இ ருந்தால், மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பை இந்த மூவரும் இழக்க நேரிடும். தன்னிச்சையாக இரு நீதிபதிகள் எடுக்கும் ஒரு முடிவுக்கு களங்கம் கற்பிப்பது போன்றதுதான் இந்த மனு’’ என்றார்.

முருகன் மற்றும் சாந்தன் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் கேட்ட போது “பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கட்சிக்காரர்களே நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகியுள்ளனர். உதாரணத்திற்கு 2ஜி வழக்கில், மனுதாரராகிய சுப்பிரமணியன் சுவாமிதான், சி.பி.ஐ. நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், நேரில் ஆஜராகி வருகிறார். மேலும், நீதிமன்றங்கள் அனுப்பும் நோட்டீஸ்களிலேயே ‘நீங்கள் நேரிலோ, அல் லது உங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி உங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கலாம்’ என்றுதான் இருக்கும்.

அப்படி இருக்கும் போது, முருகனும், சாந்தனும் நேரில் ஆஜராகிறோம் என்று முடிவெடுத்தால், அதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அரசின் கடமை. அந்த உரிமையை, பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, நீதிமன்றங்களும் மறுக்க முடியாது’’ என்றார்.

முருகனுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வைகையிடம் பேசிய போது, “ஒரு குற்றவாளி நானே நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்று சொல்வது அவரது உரிமை. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான எனது தந்தை பி.ராமமூர்த்தி, அவருக்கு எதிரான பல வழக்குகளில் நீதிமன் றங்களில் நேரில் ஆஜராகியிருக்கிறார்’’ என்றார்.

‘ஜி.கே.மூப்பனார் பேரவை’ சார்பில் மூவர் மரண தண்டனை தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்ற வழக்கு ஒரு திருப்பம் என்றால், முருகனும், சாந்தனும், ‘நாங்கள் நேரில் ஆஜராகிறோம்’ என்று எடுத்திருக்கும் முடிவு, மற்றொரு திருப்பமாக இருக்கிறது. இவர்கள் இருவரும், நேரில் ஆஜராகிறோம் என்று எடுத்திருக்கும் முடிவின் மீது, உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை, அடுத்த விசாரணையில்தான் பார்க்க முடியும். கூடவே, இவர்கள் இரு வரோடும் பேரறிவாளன் இணையாதது பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.

அருணாச்சலம்

-குமுதம் ரிப்போட்டர்

ஈழ விடுதலை உணர்வுகளை அடக்க புதுடெல்லி இந்த மூவர் மீதான கருணை மனுவை நிராகரித்தது. ஆரம்பத்தில் அதில் வெற்றிகண்ட டெல்லி, மக்களின் தன் மீதான வெறுப்பை கண்டுள்ளது.

அதிலிருந்து தப்பிக்க வழக்கை டெல்லி நகர்த்துகின்றது.

தமிழ் மக்களை ஏமாற்றுவதிலேயே குறியாக உள்ளது டெல்லி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.