Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் விரல் நுனியில் இலங்கை: கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் திருப்பங்களுக்கு வழி வகுக்குமா…………..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் விரல் நுனியில் இலங்கை: கூட்டமைப்பின் அமெரிக்க பயணம் திருப்பங்களுக்கு வழி வகுக்குமா…………..?

2008-04-30-l-20080423183638_Obama_2008_INDC104.jpg

“……………………………………..தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் தான் அவர்களை அமெரிக்க அரசு வரைக்கும் கொண்டு சென்று பேசும் அங்கீகார உரிமையை வழங்கியுள்ளது. தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக இருந்து எத்தனையோ பேச்சுக்களை நடத்திய புலிகளுக்குக் கூட சர்வதேசம் இப்படியொரு வாய்ப்பை கொடுக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதால் தான், கூட்டமைப்பின் வலிமை சர்வதேச சமூகத்தினால் உணரப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் தெளிவான நிலைப்பாட்டை வலுயுறுத்துவதன் மூலமே, இன்னமும் பேச்சுக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியும். இல்லையேல் அரசின் ஏமாற்றும் உத்திகளுக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலியாக நேரிடும்.அது கூட்டமைப்புக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் அரசதரப்புக்கு மட்டும் சவாலானதாக அமையவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட சவாலானதே. ஏனென்றால் அதன் மீது இப்போது பொறுப்புகள் அதிகம் சுமத்தப்பட்டுள்ளன. அரசதரப்புடனான பேச்சுக்களை தப்பித் தவறி பொறிக்குள் விழுந்து விடாமல் நடத்த வேண்டியதுடன், அமெரிக்காவுடனான பேச்சுக்களில் முக்கியமான விவகாரங்களில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமற்ற தன்மையை வெளிப்படுத்துவதும் அவர்களின் கடமையாக உள்ளது. தமிழர் தரப்பின் நியாயங்களை அமெரிக்காவிடம் எடுத்துக் கூறுவதற்கு நல்லதொரு வாய்ப்பை இந்தப் பயணம் கொடுத்துள்ளது. கூட்டமைப்பு கூறப்போகும் விடயங்கள் அமெரிக்காவுக்கு தெரியாதவையாக இருக்காது போனாலும், கூட்டமைப்பு அதனை வலியுறுத்தும் போது, அதற்கான பெறுமதி அதிகரிக்கும்…………………………….”.

இனி,

கூட்டமைப்பின் அமெரிக்க பயணம்திருப்பங்களுக்கு வழி வகுக்குமா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை இந்தியாவில் இருந்து மட்டுமே அழைப்புகள் வந்ததுண்டு.அதேவேளை, இந்தியப் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், அல்லது இராஜதந்திரிகளை சந்திப்பதற்கு இந்திய அரசின் அனுமதிக்காக கூட்டமைப்புத் தலைவர்கள் புதுடெல்லியில் நாட்கணக்கில்- வாரக்கணக்கில் காத்திருந்ததும் உண்டு. அப்படிக் காத்திருந்து விட்டு, சந்திக்க நேரம் ஒதுக்கப்படாமல், திரும்பி வந்த வரலாறும் உள்ளது.அப்படியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இப்போது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் மற்றும் இராஜதந்திரிகள் பலரையும் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவில் மாவை.சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சுமந்திரன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு கனடா, பிரித்தானியா வழியாக அவர்கள் நாடு திரும்பவுள்ளனர். அமெரிக்கா, கனடா, பிரித்தானியா இந்த மூன்று நாடுகளும் இலங்கை விவகாரத்தில் தற்போது அதிக அக்கறை கொண்டு செயற்படுகின்றது வெளிப்படை. இந்தநிலையில் இந்த நாடுகளுக்கு கூட்டமைப்பின் தலைவர்கள் பயணம் மேற்கொள்வதை சாதாரணமானதொன்றாக எடுத்துக் கொள்ள முடியாது. அதுவும் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் அங்கு செல்வது மிக முக்கியமான விடயம். போருக்குப் பிந்திய- அரசியல்தீர்வு, பிரச்சினைகள், சவால்கள் தான் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பயணத்தின் பின்னால் உள்ள நிகழ்ச்சி நிரல்களாக இருக்கும்.

போர் முடிவுக் கட்டத்தை அடைந்த போதே, அடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசியல்தீர்வை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இப்போது அதன் கவனம் தீவிரமடைந்துள்ளது.

அரசியல்தீர்வு ஒன்று காணப்படும் வரை இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பேச்சுக்களை விரைவுபடுத்த அரசியல்தீர்வு தொடர்பாக தாம் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலைத் தரவேண்டும் என்று கூட்டமைப்பு காலக்கெடு முன்வைத்து பேச்சுக்களை இடைநிறுத்திய போது, அதனை மீளத் தொடங்குமாறு வலியுறுத்தியது அமெரிக்காவே. ஆனால் அதற்குப் பின்னர் நடத்தப்பட்ட பேச்சுக்களிலும் பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.அதைவிடப் பெரிய பிரச்சினைகள் தான் முளை கொள்ளத் தொடங்கி விட்டன.

முல்லைத்தீவுடன் வெலிஓயாவை இணைத்து இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி, வடக்கில் காணிகளை மீள்பதிவு செய்யும் நடவடிக்கைகள், மன்னாருக்கு சிங்கள அரசஅதிபர் ஒருவரை நியமிக்கும் முயற்சி என்று தொடர்ச்சியாக புதிய நெருக்கடிகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. இந்தநிலையில் இந்த மூன்று விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படுவதன் மூலமே இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு பற்றிய பேச்சுக்களை தொடரமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்தவாரம் கூறியுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை காரணம் காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்களை ஒத்தி வைத்த அரசாங்கம், வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்தியவுடனும், அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளப் போகிறது என்றவுடனும் அவசரமாக அழைத்துப் பேசியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பீரிசும், சஜின் வாஸ் குணவர்த்தனவும் மட்டுமே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். தமக்குத் தேவைப்படும் போதெல்லாம் கூட்டமைப்பை அழைத்துப் பேசுவதும் தேவையற்ற நேரங்களில் ஒதுக்கி விடுவதுமே அரசின் வழக்கமாக உள்ளது. இவையெல்லாம் அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நிச்சயமாக சுட்டிக்காட்டப்படும் நிலை உள்ளது.

போர்க்குற்றங்களை வைத்து அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்து வரும் நிலையில், இலங்கை அரசினால் கொடுக்கப்படும் புதிய நெருக்கடிகள் அமெரிக்காவின் கவனத்தை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும். இது அரசாங்கத்தினால் உணரப்படாமல் போக வாய்ப்பில்லை. கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் அரசதரப்புக்கு மட்டும் சவாலானதாக அமையவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட சவாலானதே. ஏனென்றால் அதன் மீது இப்போது பொறுப்புகள் அதிகம் சுமத்தப்பட்டுள்ளன. அரசதரப்புடனான பேச்சுக்களை தப்பித் தவறி பொறிக்குள் விழுந்து விடாமல் நடத்த வேண்டியதுடன், அமெரிக்காவுடனான பேச்சுக்களில் முக்கியமான விவகாரங்களில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமற்ற தன்மையை வெளிப்படுத்துவதும் அவர்களின் கடமையாக உள்ளது. தமிழர் தரப்பின் நியாயங்களை அமெரிக்காவிடம் எடுத்துக் கூறுவதற்கு நல்லதொரு வாய்ப்பை இந்தப் பயணம் கொடுத்துள்ளது. கூட்டமைப்பு கூறப்போகும் விடயங்கள் அமெரிக்காவுக்கு தெரியாதவையாக இருக்காது போனாலும், கூட்டமைப்பு அதனை வலியுறுத்தும் போது, அதற்கான பெறுமதி அதிகரிக்கும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவருவதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் வரையே உள்ளன. இந்தநிலையில் கூட்டமைப்பின் அமெரிக்கப் பயணம் புதிய திருப்பங்களுக்கும் வழிவிடலாம். சிலவேளைகளில் புதிய சிக்கல்களையும் ஏற்படுத்தலாம். போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் இலங்கை அரசுடன் இப்போது அமெரிக்கா முரண்பட்டு வருகிறது. ஆனால் இந்தநிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்- நிலைத்து நிற்கும் என்று தெரியாது. சிலவேளைகளில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பின்னர் இலங்கை அரசுடன் சமரசம் செய்து கொள்ளவும் அமெரிக்கா முன்வரலாம். இதற்கு கூட்டமைப்பு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்ற குரல்கள் ஏற்கனவே எழும்பத் தொடங்கி விட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரம் தான் அவர்களை அமெரிக்க அரசு வரைக்கும் கொண்டு சென்று பேசும் அங்கீகார உரிமையை வழங்கியுள்ளது.

தமிழர் தரப்பின் பிரதிநிதிகளாக இருந்து எத்தனையோ பேச்சுக்களை நடத்திய புலிகளுக்குக் கூட சர்வதேசம் இப்படியொரு வாய்ப்பை கொடுக்கவில்லை.ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ளது. புலிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதால் தான், கூட்டமைப்பின் வலிமை சர்வதேச சமூகத்தினால் உணரப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பு சர்வதேச அரங்கில் தெளிவான நிலைப்பாட்டை வலுயுறுத்துவதன் மூலமே, இன்னமும் பேச்சுக்களின் மீது அக்கறை கொள்ளாத அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வரமுடியும். இல்லையேல் அரசின் ஏமாற்றும் உத்திகளுக்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலியாக நேரிடும்.அது கூட்டமைப்புக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கை அரசு சீனாவுடன் சேர்ந்து கொண்டு ஆடுகின்ற நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுடன் கைகோர்ப்பதை விட இன்றைய நிலையில் தமிழர் தரப்புக்கு வழி ஏதுமில்லை. அதேவேளை அமெரிக்கா தனது நலன்களுக்கு தமிழர் நலனை பலியிட்டு விடும் என்று ஒரு தரப்பினர் எச்சரிக்கின்றனர். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனாலும், முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கைவிட்டு வேடிக்கை பார்த்த சர்வதேசம் இன்று, அவர்களை அரவணைக்கின்ற நிலை வந்துள்ளது. இப்படியொரு வாய்ப்பு தானாகவே வந்து சேரும் போது – அதை உதாசீனப்படுத்தி விடுவது புத்திசாலித்தனமான காரியமாக இருக்க முடியாது.

கட்டுரையாளர் கபிலன்

http://mykathiravan....a-news/?p=17956

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.