Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச நீதிமன்றில் சரணடைவதற்கு விமானம் கோருகிறார் கடாபியின் மகன்!

Featured Replies

லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் கடாபியின் மகன்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் சரணடைவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தன்னை லிபியாவின் தென் பகுதியிலுள்ள பாலைவனத்திலிருந்து வெளியேற்றுவதற்காக விமானமொன்று வேண்டும் எனவும் கேட்டுள்ளதாக லிபிய இடைக்கால கவுன்ஸிலின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேணல் கடாபி கடந்தவாரம் கொல்லப்பட்ட பின்னர் அவரின் புதல்வர்களில் ஒருவரான சயீவ் அல் இஸ்லாம், லிபிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து தப்பியோடிக்கொண்டிருக்கிறார். கிளர்ச்சியாளர்களின் கைகளில் அகப்படாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் (ஐ.சி.சி.) சரணடைவதற்கு அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், லிபியாவின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் செனூஸி சகிதம் தான் சரணடையத் தயாரென சயீவ் அல் இஸ்லாம் தெரிவித்திருப்பதாக இடைக்கால கவுன்ஸில் பேச்சாளர் கூறினார்.

அல் இஸ்லாமும் அல் செனூஸியும் கைது செய்யப்பட வேண்டுமென சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்கத்கது. கடந்த பெப்ரவரி மாதம் கிளர்ச்சியின்பொது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் புரிந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரிலுள்ள சர்வதேச நீதிமன்றுக்கு தன்னை கொண்டு செல்வதில் மூன்றாம் நாடொன்றின் (பெரும்பாலும் அல்ஜீரியா அல்லது டியூனிஷியா) பங்களிப்பு வேண்டுமென சயீவ் அல் இஸ்லாம் விரும்புவதாக லிபிய இடைக்கால கவுன்ஸில் வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. தனக்கு ஒரு விமானம் வேண்டும் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் விரும்புகிறார் என அவ்வட்டாரம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும் கடாபியின் குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச சட்டத்தரணியொருவர் இடைக்கால கவுன்ஸிலின் தகவலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை சயீவ் அல் இஸ்லாம் சரணடைய முன்வந்தாக தெரிவிக்கப்படும் செய்திகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும் அவர் மறுத்துள்ளார் எனவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சயீல் அல் இஸ்லாமின் இருப்பிடங்கள், முயற்சிகள் என்பன செய்மதி தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்காணிக்கப்படுவதாக அவ்வட்டாரம் கூறியுள்ளது.

http://www.pathivu.com/news/18979/57/.aspx

கடாபி குடும்பம் நேட்டோவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்று போகிறது

நேட்டோ விமானங்கள் லிபியாவில் நடாத்திய தாக்குதல்கள் சர்வதேச போர்க்குற்றங்களுக்கு இணையானவை என்று கடாபி குடும்பம் தெரிவித்துள்ளது. கடாபியின் மரணம் நேட்டோவின் தவறான இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றின் முன் வைக்க இருப்பதாக கடாபி குடும்பத்தின் சார்பில் வாதாடும் வக்கீல் தெரிவித்துள்ளார்.

மேலும் கடாபி கொல்லப்பட்ட முறை ஒளிநாடாவாக வெளி வந்துள்ளது. இவரை கொல்லும்படி கட்டளையிட்டவர் யார்..? சுடாதே சுடாதே என்று அவர் மண்டாட சுட்டுக் கொல்ல வேண்டிய தேவை என்ன வந்தது..? ஒருவர் போரில் சரணடைந்தால் அவர் இப்படியா கொல்லப்படுவது என்பவை சர்வதேச அரங்கில் இன்றுள்ள முக்கிய கேள்விகளாகும். கடாபி கொல்லப்பட்ட முறையும், சிறீலங்காவில் சரணடைந்த கேணல் ரமேஸ் கொல்லப்பட்ட முறையும் ஏறத்தாழ ஒரே மாதிரியே இருப்பதாக சென்றவார மனித உரிமைகள் அமைப்பு செய்திகள் தெரிவித்திருந்தன.

இது இவ்விதமிருக்க கடாபியின் மகன் இப்போது நைஜீரியா நாட்டைக் கடந்து மாலி நாடு நோக்கி செல்வதாக போராளிகள் தரப்பு அறிவித்துள்ளது. கடாபியின் மகன் அல் இஸ்லாமும் உளவுப்பிரிவு தலைவரும் மாலிக்குள் நுழைந்துள்ளதாக கூறும் அவர்கள் இருவரும் தம்மிடம் சரணடைந்தால் கொல்லப்பட மாட்டார்கள் என்றும், சர்வதேச போர்க்குற்ற நீதி மன்றில் ஒப்படைக்கப்படுவர் தெரிவித்துள்ளனர்.

http://www.alaikal.com/news/?p=86312

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.