Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆரம்பத்திலிருந்தே இலங்கையை காக்கத்தான் துடிக்கிறது இந்தியா- டாக்டர் ராமதாஸ் வேதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலிருந்தே இலங்கையை காக்கத்தான் துடிக்கிறது இந்தியா- டாக்டர் ராமதாஸ் வேதனை

ramathas.jpg

இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசோ தொடக்கத்திலிருந்தே இலங்கையை காப்பாற்றுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில், அங்கு 2013-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றுத் தந்திருக்கிறது.

2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தும், உலக நாடுகளின் வேண்டுகோள்களை செவி மடுக்காமலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ராஜபக்சேவின் படைகள் கொன்று குவித்தன.

இலங்கை போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. வல்லுநர் குழுவும் இதை உறுதி செய்துள்ளது. இத்தகைய குற்றத்திற்காக இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்தே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த போது இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான். அதன் பின்னர் 2013-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி முடிவெடுப்பதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில், போர்க் குற்றத்தை இழைத்த ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தி கனடா பிரதமர் கூட்டத்தில் இருந்தே வெளி நடப்புச் செய்திருக்கிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில்தான் நடத்த வேண்டும் என்று இந்தியா அறிவிக்க வைத்துள்ளது.

அது மட்டுமின்றி இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவும், இனி வரும் காலத்தில் இது போன்ற குற்றங்கள் நடப்பதை தடுக்கவும் காமன்வெல்த் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் முன் வைத்த கோரிக்கையும் இந்தியாவின் முயற்சியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசோ தொடக்கத்திலிருந்தே இலங்கையை காப்பாற்றுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது.

இலங்கை தொடர்பான அணுகுமுறையை மத்திய அரசு இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடுவதுடன், அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் ராமதாஸ்.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக இதே காங்கிரசு அரசுக்கு எதிராக முன்பு மருத்துவர் இராமதாஸ் கருத்துக்கள் சொல்வதில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றால் போல் மாறுபவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்காக இதே காங்கிரசு அரசுக்கு எதிராக முன்பு மருத்துவர் இராமதாஸ் கருத்துக்கள் சொல்வதில்லை

மற்றும் மருத்துவரின் சம்பந்தியும் காங்கிரசு கட்சியில் இருப்பதால் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்.

மற்றும் வருங்காலத்தில் தேர்தல் கூட்டு வைக்கவும் உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.