Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்து கொள்வோம்

Featured Replies

கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தரின் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள்

மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என “நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்து கொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்கையர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைத்து பெரும் சத்தத்துடன் பிரித் பாராயணங்களை ஒலிபரப்புவதும், கந்தரோடை கிராமத்தின் பெயரை கந்துருகொட என மாற்றியமைத்தும் முற்று முழுதாக தேசப்பற்று என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சிங்கள மக்களை குஷிப்படுத்தி அரசாங்கத்தின் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவே தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்காது இனவாதத்தை தூண்டுகிறது.

வடக்கில் அனைத்து காணிகளிலும் தமிழ் மக்களை மட்டுமே குடியேற்ற வேண்டு மென்பதல்ல. சிங்கள, முஸ்லிம் மக்களும் குடியேற்றப்பட வேண்டும். ஆனால், இனவாத குடியேற்றங்களாக இல்லாது நியாயமான விதத்தில் அமைய வேண்டு மென்பதே எமது நிலைப்பாடாகும்.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னிக்கின்றதா என்ற கேள்வியும் எழுகிறது.

வடக்கில் குடியேற்றங்கள் தொடர்பாக எதிர்க்கும் கூட்டமைப்பு அரசாங்கம் வட, கிழக்கில் பெரும் நிலப்பரப்புக்களை வகை, தொகையின்றி இந்தியாவிற்கு விற்பனை செய்வதை பார்த்துக் கொண்டு கூட்டமைப்பு மௌனமாக இருக்கின்றது.

கூட்டமைப்பின் இரட்டை வேடமானது அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவை வழங்குகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இலங்கையர் அமைப்பினரதும் புலம் பெயர்ந்த நாடுகளில் தீவிரமாக உள்ள அரசியல் ஆர்வலர்களதும் கவனத்துக்கு எனது தாழ்மையான சில் கருத்துகளை கொண்டுவர விரும்புகிறேன். இது பகமை விவாதமல்ல நட்பார்ந்த உரையாடல் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..

சந்தேகப் நோய்பிடித்த கணவனைப்போல எல்லாரையும் போட்டுத் தள்ளிவிட்டு தனிமைப் பட்டு அழிகிற பாதையை சிபார்சு செய்ய வேண்டாம். மீண்டும் நம்மை தனிமைப் படுத்தி அழிக்க எஞ்சி இருக்கும் பேனாக்களையும் தூக்காதீர்கள். எஞ்சி இருக்கும் தமிழ் மக்கள் எஞ்சி இருக்கும் வாய்ப்புகளுக்கூடாக முதலில் சரணாகதியை தவிர்த்து தம் வாழ் வை மீழ ஸ்தாபிக்கவேண்டும். இதனூடாகத்தான் எம் விடுதலைக்கான மார்க்கங்களைக் கண்டு கொள்ள முடியும்..

இப்படி எல்லாப் பக்கத்தையும் தாக்கி வீரம்பேச நம் மக்கள் எல்லோரும் எங்களைப்போல வெளிநாடுகளில் பதுங்கி இருக்கும் பாக்கியம் பெற்றவர்கள் அல்ல. நம் இராசதந்திரத் தவறுகள் அவர்கள் அழிவுக்கே வழி கோலும்..

மீண்டும் இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்துவதும் மேற்க்கு நாடுகளின் அனுதாபத்தையும் ஆதரவையும் வென்றெடுப்பதும் அவசியம் அவசியம் அவசியம் என்கிறீர்கள். மேற்கு நாடுகலை வென்றெடுப்பது அவர்கள் மிரழும் அரசியலை தொடர்வதல்ல. இந்தியாவுடன் வேலை செய்வது என்பது கீழ்மட்டத்தில் பகை வளர்த்துக்கொண்டு டெல்கிக்கு இரண்டு பிரமுகர்க அனுப்பிப் பேசுவதல்ல. இவற்றை புரிந்துகொள்வதுதான் எதிர்கால விடுதலைக்கான அடிப்படை ராஜதந்திரமாகும். துர் அதிஸ்ட்டவசமாக இதனை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ளவில்லை.

மேற்க்கு நாடுகள் .நமது ஊர்வலங்கள் பலவற்றின் அரசியலை மிரட்டலாகவே பார்க்கின்றன. இலங்கை மேற்க்கு நாடுகளிடம் ”உங்களால் போர்க்ற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பு இலங்கைக்கு எதிராகச் செயல்ப்பட்மாறு உங்களை balac mail பண்ணுகிறது என்று கூறியே அழுத்தம் தருகிறார்கள். அவர்கலைப் பொறூத்து அதுவே சரியான இராசதந்திர அணுகுமுறை. அதை உருவாக்க வல்ல மனித வலங்களங்களை அவர்கள் நகர்த்தி இருக்கிறார்கள்.

.ஐரோப்பாவில் வழக்குகள் முடுக்கிவிடப் பட்டதையும் அவுஸ்திரேலியாவில் நம் இராசதந்திரத்தோல்வியையும் இந்த பின்னணியிலும் புரிந்து கொள்ள வேணும். மேற்க்கு நாடுகளால் தடைசெய்யப்பட்ட போர்க் குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பு போர்குற்ற விசாரணையில் எதிரி முடங்கும் வரைக்குமாவது அடக்கி வாசிப்பது அவசியம் என்பதை உணரவேண்டும். ஏனேனில் இலங்கை மேற்க்கு நாடுகளிடம் ஓரவஞ்சகமாக நடக்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்ட நாம் இடம் தரக்கூடாது.

அவுஸ்திரேலிய கொமன் வெல்த் மாநாட்டில் இலங்கை பெற்ற வெற்றிக்கு எங்கள் இராசதந்திர பிழைகளை இலங்கை புத்திசாலித் தனமாக கையாண்டதே காரணமாகும். தென் ஆபிரிக்காவைக்கூட நாங்கள் வெறுப்பேறி இருக்கிறோமென்றால் நாம் மிகவும் நெருக்கடியான சூழலை எதிர் நோக்குகிறோம் என்பதை காலம் தாழ்த்தாது புரிந்து கொள்ள வேணும்.

மேற்க்கு நாடுகளில் தொடரும் எங்கள் ஆர்பாட்டங்கள் அது முன்னிலைப்படுத்தும் அரசியல் அடையாளங்கள் காரணமாக . மிரட்டல் என புரிந்துகொள்ளப் படுகிறது. அது தமிழரின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல மேற்படி அரசியல் செய்யும் அமைப்புகளையும் ஆபத்துக்குள்ளாக்கும். நம்மீது மேற்க்கு நாடுகளின் சட்டத்தின் பிடியை இறுக வைக்கும். மேற்க்கு நாடுகளிலும் தென்னாபிரிக்காவிலும் இருந்த அனுதாபத்தை நாம் எப்படி இழந்துபோனோம் என்பதை புரிந்துகொண்டு காலம் தாழ்த்தாமல் நமது அரசியல் இராசதந்திரங்களை மீழாய்வு செய்யவேண்டும். மேற்க்கு நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் நிகழ்ந்த நமது ஆர்ப்பாட்டங்கள் மக்களின் ஆர்பாடங்களாக முன்னிலைப் பட்டிருந்தால் நாம் பெருவெற்றிகளை ஈட்டி இருப்ப்போம்.நாம் சாண் ஏறி முழம் சறுக்கிற பிழையான இராசதந்திர நச்சு வட்டத்தில் இருந்து எப்படியாவது விடுபட வேண்டும்.

எங்கள் பழைய போக்குகளைத் அப்படியே தொடர முனைவது ஆபத்தானதாகும். அத்தகைய போக்கைத் தொடரும் பிழையான இராசதந்திரம் மேற்க்கு நாடுகளில் ஏற்க்கனவே தோற்றுப் போய்விட்டது. துருக்கிய கேடிஸ் விடுதலை முன்னணி PKK யின் ஊர்வலங்கள் மேற்குலக மக்களை வெல்வதற்க்குப் பதிலாக ஆத்திரப் படுத்துவதாகவே உள்லது என்பதை இந்தத் தருணத்தில் உணர்ந்து கொள்வது அவசியம். இராஜதந்திரத் தவறுகளால் நாம் அரசியல் இராஜதந்திர முள்ளிவாய்க்காலை நோக்கி நகர்ந்துவிடக் கூடாது.நாம் ஒன்றுகூடி நெஞ்சை நிமிர்த்துவதல்ல நம் மக்களின் வெற்றிக்காக உழைப்பது மட்டுமே நம் முன் உள்ள ஒரேவரலாற்றுக் கடமையாக உள்ளது.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் கவிஞர்.எதிர்காலத்தில் எமது போராட்டங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு சில ஆலோசனைகள் தந்தால் போராட்டங்கள் நடாத்துவோர் கவனத்தில் எடுப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.