Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளாட்சித்தேர்தல் - கேப்டனின் செல்வாக்கு சரிந்ததா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வரிந்து கட்டிக் கொண்டு பிரசார பீரங்கியாக தேர்தல் களத்தில் முழங்கியும் கதைக்கு ஆகவில்லை. அவரின் செல்வாக்கு என்ன ஆனது? இந்தத் தேர்தல் ரிசல்ட் சொல்லும் செய்தி என்ன? கட்சி சாயம் இல்லாமல் மூன்று பேரிடம் கருத்தைக் கேட்டோம்.

“என்னைப் பொறுத்த அளவில் விஜயகாந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது இலாபகரமான காரியமில்லை. அவர் சமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். கடந்த ஐந்தாண்டுகளில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக உருவெடுத்திருந்த தி.மு.க.வை வீழ்த்த அவர் மேற்கொண்ட சரியான காரியமாகவே பலருக்கும் அது மனதில் பட்டது. மக்களும் எதிர்க்கட்சி என்ற மிகப்பெரிய அங்கீகாரத்தை அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார்கள். ஆனால், அவரை அந்தப் பதவியில் அமர்த் திய பிறகு வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் செயல்படவேயில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை.

‘காமராஜரின் கருத்தைப் பின் பற்றி, ஆறு மாதக் காலம் நானும் ஜெயலலிதாவின் இந்தப் புதிய ஆட்சியை விமர்சிக்க மாட்டேன்’ என்று அறிவித்தார். அது ஒரு அரசியல் பிழை.

1967-ல் தி.மு.க. முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது எந்தக் கோப்பு எங்கே இருக்கிறது என்றுகூட அறிய முடியாதவர்களுக்காக ஆறு மாதம் அவகாசம் கொடுப்பதுதான் ஜனநாயகப் பண்பு என்று முடிவெடுத்தார் காமராஜர். அந்த அளவுகோல் முன்றாவது முறையாக முதல்வராக வந்திருக்கும் ஜெயலலிதாவுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. அப்படி அவர் பேசியதற்குக் காரணம், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணியமைத்து குறைந்தது 20 விழுக்காடு இடத் தையாவது பேரம்பேசி வாங்கிவிட வேண்டும் என்கிற ஒரே முனைப்புக்காகத்தான். இந்த ஆசையினால் முறையான எதிர்க்கட்சித் தலைவராக சட்ட மன்றத்தில் இயங்க வேண்டிய பொறுப்பிலிருந்து விஜயகாந்த் விலகி நின்றார். ஆட்சியின் ஒவ்வொரு அசைவையும் விவாதங்களின் மூலம் விமர்சிக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பெரும்பாலான நாட்கள் சட்டமன்றத்தின் பக்கம் திரும்பவேயில்லை. முக்கிய எதிர்க்கட்சியாக அவர் செய்யத் தவறியதை தமிழக மக்கள் உணர்ந்தனர். அதன் பதிலடியாகவே இன்றையத் தேர்தல் முடிவு அவருக்கு கிடைத்திருக்கின்றது. ஆனாலும், அவரின் கட்சி சரிந்துபோய் விடவில்லை.’’ என்று தனது கருத்தினை அளந்து வைத்தார் தமிழருவி மணியன்.

இவரின் கருத்திற்கும் பத்திரிகையாளர் ஞாநியின் கருத்திற்கும் பல மைல் வித்தியாசம் தெரிந்தது.36d.jpg அவரோ தே.மு.தி.க. இந்தத் தேர்தலில் பின்னடைந்துவிட்டது என்ற கரு த்தையே மறுக்கிறார்.

“தமிழ்நாட்டு வாக்காளர்களில் 25 சதவீதம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு இருக்கிறது என்றால் தி.மு.க.வுக்கும் 25 சதவீதம் ஆதரவு இருக்கிறது. இதில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது தவறு செய்தால் எதிர்க்கட்சியின் செல்வாக்கு 30 சதவீதமாக உயரும்போது ஆளும் கட்சியின் வாக்கு 20 சதவீதமாக குறைகிறது. ஆக, இந்த இரண்டு க ட்சிகளும் மாறி மாறி சம பங்கில் இருப்பதை இந்தப் புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுகின்றன. இதில் விஜயகாந்தின் கட்சி இந்த இரண்டு திராவிட கட்சிகளில் ஏதோ ஒன்றுடன் சேரும்போது விஜயகாந்திற்கு இருக்கும் 10 சதவீத வாக்குகள் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகப் போய் அந்தக் கூட்டணி வலுப்பெற்று வெற்றி அடைகிறது. இ துதான் இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியில் நடந்தது. ஆனால், தே.மு.தி.க. இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் தன் பலத்தை இழந்துவிட்டதாக பலரும் தவறாக கணக்கு போடுகிறார்கள். எப்படி தே.மு.தி.க. போன தேர்தல்களில் தனியாக நின்றபோது 10 சதவீதம் வாக்கு வங்கியை தக்க வைத்தி ருக்கிறதோ அதே 10 சதவீத வாக்கு வங்கியை இந்த உள்ளாட்சியிலும் தக்க வைத்திருக்கிறது. இங்கே சரிவுக்கு எந்த ஆதாரமுமில்லை.

என்னைப் பொறுத்த அளவில் விஜயகாந்துக்கு இந்தத் தேர்தல் பின்னடைவே இல்லை. அவர் தலித் கட்சிகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் வேறு சில அரசியல் சக்திகளையும் ஒன்று சேர்த்துக் கொண்டு ஒரு புதிய அணியை ஃபார்ம் பண்ணினால் இப்போதும் பெரிய அளவில் வளர்ச்சியடைய முடியும்’’ என்கிறார்.

மூத்த அரசியல்வாதியும் தமிழர் நலன் விரும்பியுமான புலமைப்பித்தன் என்ன சொல்கிறார்?

“கருணாநிதியின் மேலுள்ள எதிர்ப்பால் விஜயகாந்த் கொஞ்சம் வளர்ந்தார். ஆனால், அந்த எதிர்ப்பின் பலன் இப்போது முழுக்க முழுக்க ஜெயலலிதாவுக்குப் போய்விட்டது. இது பெரியார் பிறந்த மண். அவரின் கொள்கைகளுக்கு மாறாக யார் பேசினாலும் வளர்ச்சி அடைய முடியாது. விஜயகாந்த் இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் முதிர்ச்சியில்லாமல் பேசுகிறார். தெரியாத விஷயங்களை விஷயம் புரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். அவர் தன்னை பெரிய தலைவராக முன் னிருத்திக் கொள்ளாமல் செயல்பட வேண்டும். அப்படி செய்வாரா என்பதற்கு ஒரு சான்றும் கிடைக்கவில்லை’’ என்றார்..

36a.jpg

சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்துள்ள வாக்குகள் 31 லட்சமாகும். கடந்த 2009 லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் கிடைத்த வாக்குகளின் எண் ணிக்கை 27.65 லட்சமாகும். லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க.வுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் 8.33 சதவீதமாகும். கடைசி சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்து ள்ள வாக்கு சதவீதம் 10 சதவீதம்.

36b.jpg

1,மக்களுக்கான புதிய திட்டங்களை கண்டறிவது. 2,கட்சித் தொண்டர்களை கொள்கை36e.jpg அளவில் தயார்ப்படுத்துவது. 3,குறை சொல்வதை மட்டுமே கொள்கையாக கொள்ளமல் இருப்பது. 4,தன் மீதுள்ள மக்களின் நம்பிக்கையை சரிவர பயன்படுத்துவது. 5,எந்தப் பிரச்னையிலும் முதல் ஆளாய் குரல் கொடுப்பது. போராடுவது. 6,எளிதில் அணுக முடிகின்ற இடத்தில் தன்னை வைத்துக்கொள்வது. 7,வழக்கமான அரசியல் கட்சியை போல் இல்லாமல் சில அதிரடி யுக்திகளை கையாள்வது 8, சகோதர கட் சிகளை ஒன்றிணைத்து தேர்தலுக்காக இல்லாமல் நிரந்தரமான புதிய அணியை உருவாக்குவது. 9, சட்டமன்ற நடவடிக்கைகளில் தவறாமல் பங்கேற்பது. 10,பேச்சை மட்டுமே பக்கபலம் என நம்புவதை கைவிடுவது.

36c.jpg

2006 & ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டு 13,777 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றி பெற்றார். 2009&ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் தே.மு.தி.க. சார்பில் தனித்துப் போட்டியிட்டார். சுதீஷ் 24,413 (18 சதவீதம்) வாக்குகள் பெற்றார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 863 இடங்களை தே.மு.தி.க. கைப்பற்றியது. போனதைவிட 248 இடங்கள் இது அதிகம். ஆக, பலம் குறையவில்லை.

- கடற்கரய்

படங்கள்: சித்ராமணி, ஆர்.சண்முகம்

- குமுதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.