Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நோர்வே வெளியேறியிருக்க வேண்டும்! - மதிப்பீட்டுக் குழுத் தலைவர் Gunnar Sørbø

Featured Replies

சமாதான முயற்சிகளின் பிரசன்னம் அற்ற புறநிலையில் நோர்வே வெளியேறியிருக்க வேண்டும்! - மதிப்பீட்டுக் குழுத் தலைவர் Gunnar Sørbø

2006ஆம் ஆண்டு மீண்டும் போர் வெடித்த காலப் பகுதியில் இலங்கைத் தீவின் சமாதான முயற்சிகளில் இருந்து நோர்வே முற்றாக வெளியேறி இருக்க வேண்டும் என நோர்வேயின் சமாதான முயற்சி தொடர்பான மதிப்பீட்டுக் குழுவிற்குத் தலைமை தாங்கிய ஆய்வாளர் Gunnar Sorbo தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆசிர்வாதத்துடனும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விற்கான முனைப்புடன் நின்ற போது, சமாதான முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்தும் தோரணை அவர்களுக்கு இலகுவாக இருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் நோர்வேயினால்; முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகள் தொடர்பாக Gunnar Sorbs தலைமையில் உருவாக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை வெளியிட்டு வைக்கப்படும் கருத்தரங்கு நோர்வே தலைநகரில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அதற்கு முன்னதாக இன்று காலை நோர்வேஜிய இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையிலேயே அவர் நோர்வே மீதான விமர்சனத்தினை முன்வைத்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் தனது வகிபாகத்திற்கு உரிய தெளிவான வரையறைகளை நோர்வே வகுத்திருக்க வேண்டும். 2006 இல் மீண்டும் போர் தொடங்கிய 'சமாதான முயற்சிகளின் பிரசன்னம் அற்ற' புறநிலையில் நோர்வே வெளியேறியிருக்க வேண்;டும்.

ஆனால், தொடர்ச்சியாக சமாதான முயற்சிகளுக்கான தேவை நிலவியதாகவும், விடுதலைப் புலிகளுடனான தொடர்பாடல் இணைப்புப் புள்ளியாக நோர்வேயின் வகிபாகம் முக்கியத்துவம் பெற்றிருந்ததாக எரிக் சொல்ஹெய்மினால் நியாயப்படுத்தப்பட்டது. அதனைப் புரிந்து கொள்வது கடினமல்ல, ஆனால் அதனை நியாயப்படுத்த முடியாது.

அரசியல் சதுரங்கத்திற்குள் நோர்வே பயன்படுத்தப்பட்டமை அக்காலப் பகுதியிலேயே அவதானிக்கப்பட்டு, தற்போது மிகத் தெளிவாகியுள்ளது. சீனாவின் ஆசீர்வாதத்துடன் மட்டுமல்லாமல், இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஆசிர்வாதத்துடனும் சிறிலங்கா அரசாங்கம் இராணுவத் தீர்விற்கான முனைப்புடன் நின்ற போது, சமாதான முயற்சிகளில் நோர்வேயை ஈடுபடுத்தும் தோரணை அவர்களுக்கு இலகுவாக இருந்தது.

இந்நிலையில், Gunnar Sorbo இன் முடிவுடன் 110 சதவீதம் முரண்படுவதாக சமாதான சிறப்புத் தூதுவராகக் கடமையாற்றிய நோர்வேயின் சூழல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கருத்துரைத்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நோர்வே சமாதானப் பணிகளைத் தொடர வேண்டும் என விரும்பியதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=1a888b16-7161-480f-b697-93044beec968

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களை கொன்ற பின் யாரையா உங்களையெல்லாம் ஆராய்ச்சி செய்ய சொன்னது?

நோர்வே மக்களின் வரிப்பணத்தை செலவழிப்பதை நிறுத்துங்கள்.

.

நோர்வே வெளியேறியிருக்க வேண்டும்! - மதிப்பீட்டுக் குழுத் தலைவர் Gunnar Sørbø

நாய்கள்.................... வெளியேறியிருந்தால் நம் தலைவர் நம் தலை விதியை நிச்சயம் நிச்சயம் நிச்சயம் நிச்சயம் நிச்சயம் நிச்சயம் எப்படியோ மாற்றியிருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.