Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்தையாரால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் தவறானது தான் – சந்திரிகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் தவறானது தான் – சந்திரிகா!

Published on November 17, 2011-9:53 am

எனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச் சினையின் மூலத்தவறாக அமைந்துவிட்டது. இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தனிச்சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில் தனிச்சிங்களச் சட்டம் பெரும் தடையாக அமைந்தது. குறிப்பாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைச் சிக்கலுக்குள்ளாக் கக்கூடிய சட்டங்கள் அனைத்தையும் ஆட்சியில் இருந்தவர்கள்நான் உட்பட கொண்டுவந்தனர்.

இது இனமுரண்பாடுகளை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இனத்துவ அடையாள அரசியல் ஒரு தவறான பாதையாகும். சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் பன்மைத்துவமே பயன்படுத்தக்கூடிய சிறந்த தெரிவாகும்.

போர் முடிந்த பின்னரும்கூட தாம் எதிர்பார்த்த எதுவுமே நடைபெறாததால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாகக்கூடிய புதிய அரசியல் தலைமை மூலமே போருக்குப் பின்னான காலத்திலாவது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணமுடியும்.

இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அங்குள்ள மக்கள் எப்படி ஒரு சொர்க்கத்தை இழந்தார்கள் என்பதைத்தான் நீங்கள் (அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள்) எம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

http://www.saritham.com/?p=41062

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை கொன்று குவித்ததில் சந்திரிக்காவின் பங்கு தனது தந்தையின் பஙகை விட அளப்பரியது என சொல்ல மறந்து விட்டாரா??

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் - பதவியில் இருக்கும் எந்த அரசியல்வாதியும் ஏனோ ஒரு விரிந்த மனப்பான்மையை கொண்டிருப்பதில்லை. பின்னர் ? பின்னர் தவறுகளை உணர்ந்தவர் போல காட்டி எந்த நன்மையையும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் "சுடலை ஞானம் "என்பார்கள்

சில பௌத்த (காட்டுமிராண்டிப்) பிக்குகளின் தூண்டலில் கிளிண்டனுடன் உள்ள தொடர்பை வைத்து தமிழினப் படுகொலை செய்த சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளை போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்ற சந்திரிகா பல முறை முயன்றுள்ளதாக நம்பகமான தகவல்கள் உண்டு. எனினும் மேற்குலக அரசியல்வாதிகள் பலர் சந்திரிகாவும் பேச்சுவார்த்தை குழம்ப ஒருகாரணம், சந்திரிகா போதியளவு செய்யவில்லை என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளதால் அவரது முயற்சி கைகூடவில்லை.

இப்போது தனது இருப்பையும், தனது பிள்ளைகளின் எதிர்கால அரசியலையும் உறுதிப்படுத்த ஏதாவது செய்தாகவேண்டிய நிலையில், தான் நடுநிலையானவர் என்ற மாயையை ஏற்படுத்த சந்திரிகா முயன்று வருகிறார்.

எனவே முன்னால் ஜனாதிபதியான இந்தச் சிங்களப் பயங்கரவாதியின் கருத்துக்களை பயன்படுத்தும்போது, கவனமாக பயன்படுத்தும் தேவை உண்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.