Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக்கொடி வழக்கு பொன்சேகாவிற்கு மூன்று வருட கடூழிய சிறை

Featured Replies

வெள்ளைக் கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவைக் குற்றவாளியாகக் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனையை இன்று விதித்தது.மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவெல சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்ற மேற்படி வழக்கின் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.

வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சு செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே.

மூலம்

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு இன்று :

18 நவம்பர் 2011

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது. மூன்றாண்டு கடூழிய சிறைத்தண்டனையுடன் 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சண்டே லீடர் பத்திரிகைக்கு அளித்த செவ்வி தொடர்பில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் முதலாம் குற்றச்சாட்டு மட்டுமே நிரூபணமாகியுள்ளது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் பொன்சேகா குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதவான்களான தீபாலி விஜேசுந்தர, எம்.எஸ்.ராசீன் மற்றும் டபிள்யூ.ரீ.எம்.பீ.பி. வீரவில ஆகிய நீதவான்கள் இந்த வழக்கை விசாரணை செய்து வந்தனர்.

தீபாலி விஜேசுந்தர மற்றும் ராசீன் ஆகிய நீதவான்கள் சரத் பொன்சேகா குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளதுடன், சரத் பொன்சேகா மீதான மூன்று குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றமவர் என நீதவான் வீரவில தீர்மானித்துள்ளார்.

1. சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பெட்ரிக்கா சான்ட்ரா ஜேன்ஸிடம் பிழையான தகவல்களை வழங்கியமை

2. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன உணர்வுகளை தூண்டியமை

3. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியமை

ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, தாம் அரசியலில் ஈடுபடுவதனை விரும்பாத சக்திகள் இவ்வாறு தமக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தம்மை சிறைச்சாலையில் வைத்துக் கொண்டு அரசியல் நடத்த சிலர் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்தன் பின்னர் சரத் பொன்சேகா நீதிமன்றின் வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது பதற்ற நிலைமை ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறைந்தபட்சம் இரண்டு காவல்துறை வாகனங்கள் சேதமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு இன்று :

முப்படைகளின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகாவுக்கு எதிரான வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் தீபாலி விஜேசுந்தர தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் கொண்ட குழுவினர் இன்று வெள்ளைக் கொடி விவகார வழக்கு மீதான தீர்ப்பை அறிவிக்கவுள்ளனர். இதனை முன்னிட்டு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் அரச படையினரிடம் சரணடையவரும் விடுதலைப் புலி உறுப்பினர்களை சுட்டுக் கொலை செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டாரென முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பப்டது.

இதனால் முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவுக்கு எதிராக வெள்ளைக் கொடி விவகார வழக்கு கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்யப்பட்டது.

வெள்ளைக்கொடி விவகார வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர தலைமையிலான குழுவினர், அரசாங்க தரப்பினர், எதிர்கட்சியினர், பாதுகாப்பு பிரிவினர், மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் சாட்சியங்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் வெள்ளைக்கொடி விவகார வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றுவதற்காக பொலிஸார் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளைக் கொடி விவகார வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

இதன் காரணமாக இன்றைய தினம் மாத்திரம் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றுவதற்காக பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

எனினும் நீதிமன்ற வளாகத்தை அவ்வாறு அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்போவதில்லை என கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்போது நீதிமன்ற வளாகம் அமைந்துள்ள புதுக்கடைப் பகுதியின் அமைதியை குழப்புவதற்கு எவராவது முயற்சித்தால் குற்றவியல் நடைமுறைக் கோவையின் 90 ஆவது பிரிவின் கீழ் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாழைத்தோட்ட பொலிஸாருக்கு கொழும்பு பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் பொன்சேகாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால் பட்டாசு கொளுத்துவதற்கும் தேங்காய் உடைப்பதற்கும் சிலர் தயாராகிவருவதாக தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது என வாழைத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் தாக்கல் செய்த மனுவொன்றில் தெரிவித்துள்ளனர். இதையடுத்தே நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/70263/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.