Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விதவையின் வெறி

Featured Replies

ஒரு விதவையின் வெறி

ஒரு அழகான கிராமம். நீரோடை, குளங்கள், வயல்கள், மரங்கள், இடைக்கிடையே சிறிய காடுகள். காடுகளில் மயில்கள், மான்கள். இயற்கையின் அழகை இரசித்தவாறே, சுதந்திரமாக, மிக்க வளத்துடன் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

அந்தக் கிராமத்துக்கும் அயல் கிராமத்துக்கும் இடையே உள்ள நீரோடை சம்பந்தமாக, இரண்டு கிராம மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இத் தகராற்றைத் தீர்த்;;து வைப்பதாக, வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவன் முன் வந்தான். ஏதோ பிரச்சினை தீர்ந்தால் சரி என்ற எண்ணத்தில், ஒப்புக்காக இரண்டு கிராம மக்களும் உடன்பட்டனர்.

ஒரு நாள் அதிகாரி, தன் உதவியாளர்கள் சகிதம் நீரோடைப் பக்கம் வந்தான். அங்கே, அந்த அழகான கிராமம் கண்ணுக்குத் தெரிய, அதற்குள் நுழைந்தான். கிராமம் அழகுடன் வளமாகவும் தெரிந்தது. அங்கு வாழ்ந்த பெண்களும் மிக அழகாக இருந்தார்கள். இவை அனைதும் அவனது மனதைப் பாதித்திருக்க வேண்டும். அதனால் அவன் எண்ணம் அந்தக் கிராமத்தைச் சுற்றியிருந்தது. அதனால் தன் உதவி ஆட்கள் சகிதம் அடிக்கடி அக்கிராமத்துக்கு வந்து சென்றான்.

ஒருசில நாட்களின் பின், அந்தக் கிராமத்து ஆண்கள,; வேலை நிமிர்த்தம் வயல்களுக்கு சென்றபோது, அதிகாரியின் உதவி ஆட்கள் கிராமத்துக்குள் புகுந்து, இளம் பெண்கள் சிலரைப் பலாத்காரம் செய்ததுடன், ஒரிருவரைக் கடத்தியும் சென்று விட்டனர். இதனை அறிந்து ஆத்திரம் கொண்ட மக்கள் ஒன்றுகூடி, நடந்த கொடுமைபற்றி எடுத்துக்கூற, தங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் மூவரை அதிகாரியிடம் அனுப்பிவைத்தனர்.

அதிகாரி, கிராமத்துப் பெரியவர்களை உடனடியாகச் சந்திக்காமல், இழுத்தடிப்புச் செய்து, காலங்கடத்திச் சந்தித்தான். அப்போது, வந்தவர்களிடம் தங்களின் பரம்பரைப் பெருமையைக் கூறி, கிராமப் பெரியவர்களின் பேச்சை உதாசீனம் செய்தான்.

அதிகாரியின் நடந்தை கிராமப் பெரியவர்களுக்கு அவமதிப்பாக இருந்தது, இதனை அவர்கள் தமது மக்களுக்கு கூறியபோது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ஆத்திரமடைந்து ஷஷஎல்லாம் அதிகாரியின்

செயல்தான்|| எனக்கூறி, கொதிப்புடன் வெளியேறினர்.

சில நாட்கள் செல்ல, அதிகாரி ஒரு விழாவில் வைத்து கொலை செய்யப்பட்டான். கொலையை யார் செய்தார்கள் என்பது புரியாத புதிராக இருந்தது. இதனை அவனது மனைவி, தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி, அதிகாரப் பொறுப்பதைத் தனதாக்கிக் கொண்டதுடன், தனது கணவனின் படுகொலைப் பழியை கிராமத்து இளைஞர்கள் மீது சுமத்திவிட்டாள். அதன்பின், தான் விதவையாகிவிட்டதாகப் புலம்பி, நீலிக் கண்ணீர்; வடித்தாள். இதனால் அதிகாரியின் உதவியாட்கள் அனைவரும் அவள் மேல் அனுதாபப்பட்டு, அவள் கட்டளைக்கு பணிந்து நின்றார்கள்.

எவரும் எதிர்பாராத நேரம். நடுநிசி. அழிகிய கிராமம் அல்லோல கல்லோலப்பட்டது, வீட்டில் மனைவி, மக்களுடன் உறங்கிய ஆண்கள் வெளியில் இழுத்துவரப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கூக்குரலிட்டுக் குளறிய பெண்கள் பாலியியல் கொடுமைக்குட்படுத்தப்பட்டு பரிதாப நிலைக்குட்படுத்தப்பட்டனர். கிராமமும் அழிக்கப்பட்டு. அழகிழந்து சாம்பற்காடாகக் கிடந்தது.

படுகொலை செய்யப்பட்ட ஆண்களின் பிரேதங்கள் வெளியிலே கிடந்தன. விதவையாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் ஏக்கத்துடனும் சோகத்துடனும் துன்பத்துடனும் சொத்திழந்து, சுகமும் இழந்து, தலைகுனிந்து, செய்வதறியாது தெருவோரத்தில் நின்றார்கள். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த எவரும் இக்கொடுமையைத் தடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை. அதிகாரியின் மனைவியோ இதனைப்பார்த்து, ஆணவப்போக்கில் தலைநிமிர்ந்து நடந்தாள்.

வெளிப்படையாக தெரிந்த ஒரு விடயம் இது. இதை எப்பிடி சுத்திவளைச்சுச் சொன்னாலும் உடனே விளங்கிவிடும் அளவுக்கு பட்டாயிற்று!

இத்தாலியாள் அறுத்த நம் தாலிகள்.......... அவளுக்கு ஆகும் ஒருநாள், சுருக்குக் கயிறாய்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரானிய நேரு குடும்பம் தான் கொங்கிரசை வைத்திருக்கிறது.

அம்மையாருக்கு கான்சர் என்றும் அதனால் தான் அரசாட்ச்சியை....சீ... ஜனநாயக ஆட்ச்சியை ஒன்றுக்கும் உதவாத கொக்கைன் ராகுலுக்கு குடுக்க துடிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[edit] In academia

[edit] In entertainment and sports

[edit] In law and government

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.