Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சு ?

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேச்சு ?

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மீளவும் பேச்சுக்களை ஆரம்பிப்பதில் சிறிலங்கா அரசு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருப்பதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசின் சார்பில் பேச்சுக்களில் ஈடுபட்டுவந்த அமைச்சர்

சிறிபால டி சில்வா கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான புதிய அழைப்பு ஒன்றினை விடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நடைபெறவுள்ள பேச்சுக்களில் எந்தெந்த விடயங்கள் பேசப்படும் என்பன குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை எனினும் பாராளுமன்றத் தெரிவிக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உள்வாங்குவதற்கான முயற்சியாக இந்தப் புதிய பேச்சுக்கள் அமையலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

பராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்குமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இறுதியாக நடந்த பேச்சுக்களில் நிராகிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்: தமிழ் கனேடியன்

பிரசுரித்த நாள்: Dec 05, 2011 17:47:01 GMT

http://www.tamilcana...ll_news&id=9091

Edited by akootha

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தை முறிவதும் தமிழருக்குத்தான் சாதகம்

பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகிடைக்குமாக இருந்தால் அது தந்தை செல்வநாயகத்தின் காலத்திலேயே கிடைத்திருக்க வேண்டும். பேச்சுவார்த்தை மேசைகள் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சாதகமானதாக அமையவில்லை. மாறாக,பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்ப் பிரதிநிதிகள் இருந்ததன் காரணமாக தோல்வியும் ஏமாற்றமுமே எங்களுங்குக் கிடைத்தன என்பது பட்டறிந்த உண்மை.

இனிமேலும் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென தமிழர் தரப்பில் யார் கருதினாலும் அவர்கள் யதார்த்தம் புரியாதவர்கள் அல்லது அவர்களிடம் உள் நோக்கம் உள்ளது என்றே பொருள் கொள்ள வேண்டும். நிலைமை இதுவாக இருக்கையில், அரசுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார் த்தை முறிவடைந்து விட்டது அல்லது முறிவடைகின்றது என்ற தகவல் தமிழ் மக்களைப் பொறுத்தவரை எதிர்பார்க்க ப்பட்டதே. இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைப்பதற்குத் தெரிவுக்குழு அமைத்தல் என்ற திட்டத்தால் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைவதற்கான நிலைமை தோன்றியதாகக் கூறப்படுகின்றது.

தமிழ்மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வென்பது முக்கியம். அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற நினைப்பு எம்மிடம் அறவே இல்லை. ஒருகாலத்தில் விடு தலைப்புலிகளின் போராட்டம் உரிமையை வென்றெடுக்கும் எனத் தமிழ் மக்கள் நம்பினர். ஆனால் அது நடைமுறைப் படாமல் போயிற்று. இப்போது தமிழ்மக்களின் முழு நம்பிக்கையும் சர்வதேசத்தின் மீதே உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண் பதிலிருந்து எவ்வகையிலும் அரசு விலகமுடியாதென்பது அறுதியிட்ட உண்மை. எனவே அரசு எத்தனை குளறுபடிகள் செய்தாலும் சர்வதேசக் கண்கள் இலங்கையை உன்னிப்பாக நோக்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக அமெரிக்காவும், கனடாவும் இலங்கை அரசின் இரட்டை நிலையைப் புரிந்து கொண்டுள்ளன.

எனவே பேச்சுவார்த்தை முறிவடைவது கூடத் தமிழ் மக்களுக்குச் சாதகமாக அமையும் வாய்ப்பே உள்ளதெனலாம். ஆகையால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் இராஜதந்திரத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இருந்தால், அதற்கு இருக்கக் கூடிய ஒரேஒரு வச்சிராயுதம் சர்வதேச அழுத் தமே.ஆக, சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறொன்றும் அறியாதிருக்க வேண்டும் பராபரமே.

http://www.valampurii.com/online/viewnews.php?ID=25729

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திரும்பவும் பேச்சுவார்த்தையாம்.காலம் கடத்த இருசாராருக்கும் கிடைத்த சந்தர்ப்பம்.அதனை பயன்படுத்தி கொள்கிறார்களோ என தோற்றுகிறது. 15 சுற்று பேச்சு வார்த்தையில் ஏற்படாத முன்னேற்றம் என்னும் எத்தனை சுற்றில் ஏற்படும்??

கனடாவும் அமெரிக்காவும் தமிழர்களுக்கு சாதகமாக ஏன் இப்போ மட்டும் செயற்படுகிறது என நாம் நம்புகிறோம்.அப்படி என்ன அவர்களை மாற்றியது??

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திரும்பவும் பேச்சுவார்த்தையாம்.காலம் கடத்த இருசாராருக்கும் கிடைத்த சந்தர்ப்பம்.அதனை பயன்படுத்தி கொள்கிறார்களோ என தோற்றுகிறது. 15 சுற்று பேச்சு வார்த்தையில் ஏற்படாத முன்னேற்றம் என்னும் எத்தனை சுற்றில் ஏற்படும்??

கனடாவும் அமெரிக்காவும் தமிழர்களுக்கு சாதகமாக ஏன் இப்போ மட்டும் செயற்படுகிறது என நாம் நம்புகிறோம்.அப்படி என்ன அவர்களை மாற்றியது??

1958 ம் ஆண்டிலிருந்து....

சிங்களம் ஆரம்பித்த பேச்சுவார்த்தை இன்னும்.... முடிவே இல்லாமல்,

ஒவ்வொரு தலைமை மாற்றத்துடன் நடந்து கொண்டு தான் உள்ளது.

சிங்களவன் உண்மையிலேயே... தமிழனுக்கு ஏதாவது கொடுக்க விருப்பம் இருந்தால்.... எப்பவோ கொடுத்திருப்பான்.

அப்படி கொடுக்க வேண்டுமென்று, அவன் யோசித்தது கூட இல்லை.

பேச்சு வார்த்தையை நம்பி ஏமாறுவது தமிழ்ச் சமூகம் மட்டுமே...

இப்போ... எமக்கு ஒரு தெரிவும் இல்லாததால்.. அமெரிக்க, கனடிய உதவியுடன் ஏதாவது பலன் கிடைக்கிறதா என்று முயற்சி பண்ண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை திரும்பவும் பேச்சுவார்த்தையாம்.காலம் கடத்த இருசாராருக்கும் கிடைத்த சந்தர்ப்பம்.அதனை பயன்படுத்தி கொள்கிறார்களோ என தோற்றுகிறது. 15 சுற்று பேச்சு வார்த்தையில் ஏற்படாத முன்னேற்றம் என்னும் எத்தனை சுற்றில் ஏற்படும்??

கனடாவும் அமெரிக்காவும் தமிழர்களுக்கு சாதகமாக ஏன் இப்போ மட்டும் செயற்படுகிறது என நாம் நம்புகிறோம்.அப்படி என்ன அவர்களை மாற்றியது??

பேச்சு வார்த்தை என்ற சொல்லுக்கே அர்த்தம் தெரியாதவர்கள்

பேசி என்ன பேசாமல் விட்டால் என்ன.

மக்கள் முதுகில் சவாரி செய்யும் அரசியல்வாதிகளினால்

எந்தத் தீர்வினையும் எட்ட முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.