Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கிலயேர் கற்ற பெருந்தோட்ட தமிழ்

Featured Replies

ஆங்கிலயேர் கற்ற பெருந்தோட்ட தமிழ்

ஆங்கிலேயர் எப்போ எங்கு தமிழ் கற்றார்கள் என்கிறீர்களா? இற்றைக்கு நூறு வருடங்களுக்கு முன்பு கற்றிருக்கிறார்கள். இது குறித்த சுவாரஸ்யமான தகவலை பத்தனை கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்ற மலைச்சாரல் கண்காட்சி நிகழ்வில் அறியக்கூடியதாக இருந்தது.

நூறு வருடங்களுக்கு முன்பு பல தேயிலை தோட்டங்களின் உரிமையாளர்களாகவும் தோட்டத்துரைமார்களாகவும் இருந்தவர்கள் பறங்கியர்களே.இது நாம் அறிந்த விடயம்.

அக்காலகட்டத்தில் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களை வழிநடத்தவும் வேலைத்தலம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ளவும் தமிழைக் கற்றுக்கொள்வதற்கு இவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இவர்களின் சிரமத்தை அறிந்த டபிள்யூ.பி.ஜி. வெல்ஸ் என்பவர் 1915 ஆம் ஆண்டு இவர்களுக்கென ஒரு நூலை எழுதினார் .அதன் பெயர் கூலி தமிழ். இதில் இப்படி உள்ளது, As Understood BY Labourers on Tea and Rubber Estates.

பெருந்தோட்டப்பகுதிகளில் அந்நேரத்தில் வழக்கில் உள்ள சொற்பதங்கள் மட்டுமல்லாது தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியலின் பேச்சு முறைகள் ,உரையாடல்கள் என அனைத்தும் தமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கில மொழியில் அமைந்ததாக இந்நூல் வெளிவந்துள்ளது.

உண்மையைக்கூறப்போனால் தமிழை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் பேசவும் உதவக்கூடிய ஓர் ஆங்கில அகராதி போல் இது உள்ளது. சில உதாரணங்களைத் தருகிறோம்;

(C என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களின் விளக்கமும் உச்சரிப்பும்)

Christian – Vetha karan

Clever – Ketti

Clay – Kalli Mannu

Claim – Urime

Cobra – Nalla Pambu

Clock – Peria orlas

இவ்வாறாக ஆங்கில அகர வரிசைப்படி உள்ள சொற்களுக்கு நேரடியாக தமிழ் வார்த்தையை தரும் விதத்தில் பல சொற்கள் அமைந்துள்ளன.

அந்நேரத்தில் இறப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களுக்கு இந்த நூல் விநியோகிக்கப்பட்டுள்ளது. மலையக மக்கள் தொடர்பிலான வரலாற்றில் இடம்பெறவேண்டிய முக்கிய தகவலாக எனக்கு இது பட்டது.

இந்த நூலின் அசல் பிரதியொன்று மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

சிரமங்களுக்கு மத்தியில் இந்த நூலை சேகரித்ததாக கண்காட்சிக்கு பொறுப்பான கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சிவ ராஜேந்திரன் குறிப்பிட்டார். இவ்வாறான கண்காட்சிகளின் மூலம் எமது வரலாற்றில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான தகவல்களையும் ஆவணங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நூறு வருடங்களுக்கு முன்னர் தொழிலாள வர்க்கத்திடம் வேலை வாங்கவும் அவர்களுடன் உரையாடவும் தமிழைக் கற்க ஆங்கிலத்தில் நூல் அச்சிட்டிருக்கின்றனர் ஆங்கிலேயர். ஆனால் இந்தத்தொழிலாளர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என எவராவது முயற்சி எடுத்தார்களா அல்லது அது தொடர்பில் நூல்கள் எதுவும் வெளியிட்டிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

http://www.alaikal.com/news/?p=90698

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.