Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விரிவாக ஆய்வு செய்து வருகின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Transitional_logo.gif

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவாகாரங்களுக்கான அமைச்சகம் இன்று ஞாயிற்றுக் கிழமை (25-12-2011 ) செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நா.த.அரசாங்கம் விரிவாக ஆய்வு வருவதாக தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் மனித உரிமை சாசனங்களுக்கு முரணான பல்வேறு விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இருப்பது தெட்டத் தெளிவாக உள்ளதென குறிப்பிட்டுள்ள நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் விவாகாரங்களுக்கான அமைச்சகம், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான நா.த.அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கை சனவரி மாத தொடக்கத்தில் சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்படுமென செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், மனித உரிமையாளர்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்களினால் நியமிக்கப்படும் இத்தகைய ஆணையங்கள் சிங்கள பேரினவாத நிலைப்பாட்டடை நியாயப்படுத்துவதோடு, தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை மூடிமறைக்க முனைகின்றது.

சர்வதேசத்தை ஏமாற்றும் இத்தகைய சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான மூலோபாய, தந்திரோபாய செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருவதோடு, ஓருங்குபட்ட செயற்பாடுகளை மையப்படுத்தி 'நீதிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்' என நா.தஅரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

http://youtu.be/LG_vTXkzDSg

http://www.seithy.co...&language=tamil

Edited by தமிழ் அரசு

அரோகரா............

... அட, உந்த Human Rights watch. Amnessty International உட்பட்ட மனித உரிமைகள் அமைப்புகளோ, கூட்டமைப்பு உட்பட்ட ஏனைய பல தமிழ் கட்சிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் 24 மணிநேரத்துக்குள் LLRC இறுதி அறிக்கையை நிராகரித்து விட்டன. ஆனால் ......... நாம் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமதிப்புக்குரியவர்களோ .... இன்னும் .... LLRC Report ஐ ஆராய்கிறார்களாம்!!!!!!!!!!!!!!!!!!!!

.... கேட்கிறவன் கேணையன் என்றால் ..........................!!!!!!!!

Edited by Nellaiyan

இத்தகைய சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான மூலோபாய, தந்திரோபாய செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருவதோடு,

Laughing_hard.gif

சர்வதேசத்தை ஏமாற்றும் இத்தகைய சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான மூலோபாய, தந்திரோபாய செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருவதோடு, ஓருங்குபட்ட செயற்பாடுகளை மையப்படுத்தி 'நீதிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்' என நா.தஅரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

சர்வதேசத்தை ஏமாற்றும் இத்தகைய சிறிலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான மூலோபாய, தந்திரோபாய செயற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருவதோடு, ஓருங்குபட்ட செயற்பாடுகளை மையப்படுத்தி 'நீதிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்' என நா.தஅரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............ அமர்க்களம்!! ... நல்லது, இதுவரை என்ன என்ன மூலோபாய தந்திரோபாய செயற்பாடுகளை முன் எடுத்தீர்கள், என்று நா.க.த.அ எமக்கு சொன்னால் ... நாமும் நீதிக்காக ஒன்றிணைவோரோடு ஒன்றிணையலாம்!!!!!!!!!!!!!

.... டோ... டோ.... டோ .... யாரது பூச்சுத்துகிறது .... காதிலை!

நெல்லையான்: நீங்கள் நா.க.அ. எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்பது கடந்தகாலம். அவர்கள் எல்லோரையும் இணைய சொல்வது வருங்காலம்.

பஞ்சதந்திர கதையில் விவேகமற்ற புறாக்கள் வலையில் விழுந்தபின் தலைமை புறவை பார்த்து கேட்டன என்ன இனி செய்ய முடியும் என்று. ஒருகணம் சிந்தித்த கிழ புறா கூறியது நானும் உங்களுடன் இணந்து என்னையும் அந்த வலையில் சிக்க வைக்க போகிறேன் என்று. அதனைக்கேட்ட மற்றைய புறாகள் தலைவரே அதை மட்டும் செய்யாதீர்கள். நீர் வெளியே இருந்தால் மனம் மாறி எங்களை மன்னிக்கும் போது எங்களுக்கு உதவ முடியும். ஆனால் நீரும் வந்து வலையில் விழுந்து வேடனுக்கு இரையாவதால் ஒரு பலனும் இல்லை. எனவே வேடன் வரும் முன் எங்கேயாவது பறந்து சென்று உம்மையாவது தப்பித்து கொள்ளும் என்றன.

அங்கேதான் கிழ புறா தனது தலைமைத்துவத்தை காட்ட துவங்கியது. மற்றைய புறாக்கள் தடுக்க தடுக்க தானே வலிய சென்று அவைகளுடன் அந்த வலையில் இணந்து கொண்டது. அதன் பின் தனது சொல் வலிமையை வைத்து புறாக்களை சரியான பாதையில் இயங்க வைத்தது.

நெல்லையான்: நீங்கள் நா.க.அ. எதுவும் உருப்படியாக செய்யவில்லை என்பது கடந்தகாலம். அவர்கள் எல்லோரையும் இணைய சொல்வது வருங்காலம்.

... நிகழ்காலத்தை விட்டு விட்டீர்கள் ... அவர்கள் எல்லோரையும் ஏமாற்ற கங்கணம் கட்டியிருப்பது நிகழ்காலம்????

... ஏதோ ஒரு பழமொழி ... முடவனுக்கு ஏன் கொம்புத்தேனோ????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.