Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுக்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடு குறித்து தூதுவர்களுக்கு விளக்க ஏற்பாடு

Featured Replies

அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாட்டு தூதுவர்களைச் சந்தித்து விளக்கவுள்ளது. ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனப்பிரச்சினைக்கான தீர்வின் போது பொலிஸ் , காணி அதிகாரங்கள் வழங்க முடியாதென்றும் வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்ள முடியாது எனவும் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த போது பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமட்டாதென தெரிவித்திருந்தார்.

இதேபோல் அமைச்சரவையின் பேச்சாளரான கெஹெலிய றம்புக்வெல பொலிஸ் அதிகாரம் குறித்து பேசி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தை வீணடிப்பது ஏன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அரசாங்கத்துடன் அடுத்த கட்ட பேச்சுக்களை தொடர்வதா அல்லது பேச்சு வார்த்தையிலிருந்து விலகுவதா என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் தீர்மானமொன்றினை எடுக்கவுள்ளது. இந்த தீர்மானத்துக்கு முன்னர் தமது நிலைப்பாட்டினை வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்குவதற்கு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்குரிய தீர்வினை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்ற நிலையில் பேச்சு வார்த்தையை தொடர்வதா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் விரைவில் வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்துப் பேச நாம் திட்டமிட்டுள்ளோம்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலைக்கு சென்றுள்ளார். அவர் கொழும்பு திரும்பியதும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் தொடர்ந்தும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. தற்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் எம்மை இணைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. அச்றுத்தலை விடுத்தாவது எம்மை தெரிவுக்குழுவில் இணைப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது.

இந்த நிலையிலேயே அரச தரப்பினரால் முரண்பாடான கருத்துக்கள் வெளியிடப் பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத தீர்வு குறித்து நாம் பேசுவதால் பயன் எதுவும் இல்லை.

இவ்விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றமாட்டோம் என ஜானதிபதி கூறுகின்றார். இதேபோல் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க மாட்டோம் என்றும் அவர் உறுதியாக சுட்டிக் காட்டியுள்ளார். இந்த நிலையில் பேச்சுவார்த்தையை தொடர்வதில் பயன் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் இவ்விடயங்கள் தொடர்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து எமது நிலைப்பாட்டை விளக்க வேண்டியது எமது பெரும் பொறுப்பாகும்.

இதற்கேற்ற வகையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தின் பின்னர் இதனை மேற்கொள்வோம். இதனையடுத்து எதிர்வரும் 16ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி தொடர்ந்தும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதா என்பது குறித்து முடிவொன்றினை எடுக்கும். எதிர்வரும் 17ஆம் 18ஆம் 19ஆம் திகதிகளில் அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு திகதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் பேச்சு வார்த்தை தொடர்பில் உறுதியான முடிவொன்றினை நாம் மேற்கொள்வோம். எமது நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கும் விளக்குவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கான நடவடிக்கையும் விரைவில் இடம்பெறும். இதற்கான இணக்கப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் கட்சிகளை பதிவு செய்யுமாறு கோரும் போது நாம் கூட்டமைப்பினை கட்சியாக பதிவு செய்வோம். இவ்வாறு பதிவு செய்யும் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளையும் ஒன்று சேர்க்கும் நிலைமை ஏற்படும். இதற்கிணங்கவே பதிவுகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

http://akkinikkunchu.com/new/

அச்றுத்தலை விடுத்தாவது எம்மை தெரிவுக்குழுவில் இணைப்பதற்கு அரசாங்கம் முயன்று வருகின்றது.

சுமந்திரன் கிறிகெட் அடிப்பதை நிறுத்தினால்த்தான் இதை வெளிநாடுகள் நம்பும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.