Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புரள்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

R-Sampanthan-MR.jpg

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன சாதகமான பதில்களை வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துள்ளது.

இவ்வாறு www.wsws.org இணையத்தளத்தில் விஜே டயஸ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் பலம் வாய்ந்த பிரதான தமிழ்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிபர் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஆரம்பத்திலேயே மறுத்து விட்டது.

பிரிவினை கோரிய தமிழீழ விடுதலைப் புலிகளிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உள்நாட்டுப் போரின் போது சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காயப்படுத்தப்பட்ட பொதுமக்களின் 'கௌரவத்தைப்' பாதுகாத்துக் கொள்வதில் அதிகாரம்மிக்க நாடுகள் தலையிட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், டிசம்பர் 19 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில், "யுத்தக் குற்றங்களுக்கான முக்கிய பொறுப்பாளிகள் சிறிலங்காவிற்குள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள் என்ற விடயத்தை கற்றுக் கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்குழு மீளவும் வலியுறுத்தியுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

"யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறல் விடயத்தில் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான' நடவடிக்கைகளை எடுக்குமாறு" கூட்டமைப்பு 'அனைத்துலக சமூகத்திடம்' கோரியுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் உண்மையான மீளிணக்கப்பாட்டிற்கான சந்தர்ப்பங்கள் தட்டிக்கழிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதி தொடர்பாகவோ அல்லது இனங்களிற்கிடையில் மோதலை ஏற்படுத்துவதற்கு மூல காரணமாக இருந்த, தமிழ் மக்களிற்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் புறக்கணிப்புக்களை முடிவிற்குக் கொண்டு வருவதிலோ கூட்டமைப்பு கரிசனை கொள்ளவில்லை.

'மீளிணக்கப்பாடு' என்பது தமிழ்க் கட்சிக்கும், கொழும்பு அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு என்றே கூட்டமைப்பு கருதுகின்றது.

ராஜபக்சவையும் அவரது யுத்தத்தையும் ஆதரித்த இந்தியா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையானது பிறிதொரு பயனற்ற கோரிக்கையாக அமைந்துள்ளது.

கொழும்பு அரசாங்கத்தை அழுத்தம் கொடுப்பதாகவே 'பொறுப்புக்கூறலுக்கான அனைத்துலகப் பொறிமுறை' ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் அழைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையானது பயனற்றதாக உள்ளது. அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற 'மனிதஉரிமைகள்' விவகாரத்தை தமிழ் மக்களின் மீதான எந்தவொரு அனுதாபத்திலும் கருத்திலெடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இதற்கு மேலாக அமெரிக்கா இந்தப் பிராந்தியத்திற்கான தனது மூலோபாய நலன்களுக்காகவே இவ்விடயத்தைக் கருத்திற் கொண்டுள்ளது.

யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா, சீனாவுடன் மேற்கொண்ட நெருங்கிய தொடர்பைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அமெரிக்கா, சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான தனது அழுத்தத்தை பிரயோகித்துக் கொண்டது.

இதேபோன்ற ஒரு அணுகுமுறையையே இந்தியாவும் கைக்கொண்டுள்ளது.

மேற்குலக சக்திகளுடனும் இந்தியாவுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதில் தான் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பதற்கான சமிக்ஞைகளை ராஜபக்ச வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்துறையில் ராஜபக்ச அரசாங்கம் தொடர்ந்தும் விசுவாசத்துடன் அனைத்துலக நாணய நிதியத்துடன் தொடர்புகளைப் பேணுவதுடன், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுடன் தொடர்ந்தும் இராணுவ நிகழ்ச்சித் திட்டங்களையும் பேணி வருகின்றது.

2009ல் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் மீதான அனைத்துலக சமூகத்தின் விமர்சனங்களை முறியடிப்பதற்காகவே ராஜபக்ச, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கிக் கொண்டார்.

போரின்போது பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஜனநாயக உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டமை போன்றவற்றிற்கு ராஜபக்ச அரசாங்கமும் இராணுவத் தளபதிகளுமே பொறுப்பாளிகளாக இருப்பதால், அவற்றை மூடிமறைப்பதற்கான ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை உள்ளது.

எவ்வாறிருப்பினும், இது விடயத்தில் முக்கிய மற்றும் பிராந்திய சக்திகள் எந்தப் பிரதிபலிப்பையும் காண்பிக்கவில்லை.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான விக்ரோரியா நுலண்ட், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானங்கள் தொடர்பாக எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காது, "சிறிலங்கா அரசாங்கம் ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை மட்டும் நிறைவேற்றாது, அதில் உள்ளடக்கப்படாத பிரச்சினைகளையும் முக்கியத்துவப்படுத்த வேண்டும்" என மிகச் சாதாரணமாக சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தார்.

"உள்நாட்டு யுத்தத்தின் வடுக்களைக் குணப்படுத்தும் விதத்தில் பல்வேறு பயனுள்ள உறுதியான தீர்வுகளைப் பரிந்துரைத்துள்ளமை மற்றும் சிறிலங்காவில் நிலையான இறுதி அமைதிநிலையை மேலும் முன்னேற்றுவதற்கான பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளமை" தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு டிசம்பர் 25 அன்று வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் புகழ்ந்துரைத்துள்ளது.

இந்நடவடிக்கை ஊடாக இந்தியா, சிறிலங்கா அரசாங்கத்துடன் பணியாற்றுவதுடன், சிறிலங்காவின் வடக்கு கிழக்கு மாகாணங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான ஏற்பாடுகளை அடைந்து கொள்வதில் இணைந்து பணியாற்றும் எனவும் இந்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அனைத்துலக சமூகத்தால்' மறுப்புத் தெரிவிக்கப்பட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை விரைவில் மாற்றிக் கொண்டது.

"சிறிலங்கா வரலாற்றுப் பதிவுகளின் படி, கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உண்மைத்தன்மையாகும் என நம்புவதற்கு முன்னர் அது எந்தவொரு பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது" என டிசம்பர் 24 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் 'நேசன்' இதழுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

கற்றுக் கொண்ட பாடங்களிற்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது நியாயமானது என ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடாகவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை எட்டுவதற்காக அரசாங்கத்துடன் மேற்கொண்ட பேச்சுக்களை கடந்த நான்கு மாதங்களாகப் புறக்கணித்த கூட்டமைப்பு அதனை முடிவிற்குக் கொண்டு வந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட சமரசப் பேச்சுக்கள், சிறிலங்கா அரசாங்கம் ஆகக் குறைந்த அதிகாரத்தை தமிழ்க் கட்சிக்கு வழங்கக் கூட முன்வராததால் அதிகாரப்பகிர்வு உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டதற்கான எந்தவொரு சமிக்கைகளும் காண்பிக்கப்படவில்லை.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு, வடக்கு கிழக்கு மாகாணசபைக்கு காணி, காவற்துறை அதிகாரத்தை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய தனது அறிக்கையை கடந்த ஆகஸ்ட்டில் கூட்டமைப்பினர் கையளித்திருந்தனர்.

காணி மற்றும் காவற்துறை அதிகாரக் கையளிப்பானது ஏற்கனவே நாட்டின் அரசியலமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை ராஜபக்ச அரசாங்கம் மிகச் சாதாரணமாக அசட்டை செய்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடுவதானது சிறிலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமைமீறல் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்துலக விசாரணையை முடிவிற்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக இருக்கும் எனவும், இதன் மூலம் கூட்டமைப்பின் எந்தவொரு அழுத்தத்தையும் குறைக்க முடியும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் கணிப்பிட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகியன சாதகமான பதில்களை வழங்கியதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கடும்போக்கைக் கடைப்பிடித்துள்ளது.

கடந்த மாதம் இந்தியாவைத் தளமாகக் கொண்டியங்கும் Deccan Chronicle மேற்கொண்ட நேர்காணலின் படி, சிறிலங்காவின் வடக்கு கிழக்குப் பிராந்தியங்களிற்கான தன்னாட்சியை அதிபர் ராஜபக்ச வினைத்திறன் மிக்கதாகக் கொண்டு நடத்துகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புலம்பெயர் தமிழர்களால் கொண்டு நடத்தப்படுகின்றது. அத்துடன் இக்கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் நடத்தைப் போக்குகளைக் கொண்டுள்ளது" எனவும் ராஜபக்ச அந்நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், தனது அரசாங்கம் வேறு நாடுகளிற்கு முன்னுரிமை அளிப்பதற்கு முதல் எந்த விடயத்திலும் இந்தியாவிற்கு முதலில் சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அதிபர் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

"அம்பாந்தோட்டைத் துறைமுக பாரிய திட்டம் உள்ளடங்கலாக நாம் எந்தவொரு திட்டத்தையும் சீனாவிற்கு வழங்க முதல் இந்தியாவிற்கே வழங்கியிருந்தோம்" என ராஜபக்ச பத்திரிகைக்கான நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு, ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா சிறிலங்காவிற்கு பயணம் செய்து சிறிலங்கா அதிபர் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியா பதிலளித்துள்ளது.

இந்தநிலையில் அனைத்துலக சமூகத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்வைத்த முறைப்பாடு, மீண்டும் ஒருமுறை பயனற்றதாகியுள்ளது.

http://www.puthinapp...?20120111105350

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.