Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூகுள், பேஸ்புக்குக்கு தடை வருமா?-இன்று தனது நிலையைத் தெரிவிக்கிறது மத்திய அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13-google-facebook-300.jpg

டெல்லி: கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசமான கருத்துக்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்று டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தனது நிலையை விளக்கவுள்ளது.

கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து, முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுகள்களின் ஆபாச சித்திரங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கூகுள், பேஸ்புக் உள்பட 21 இணையதளங்கள் மீது அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதை விசாரித்த கோர்ட், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதை எதிர்த்து கூகுள், பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகின.

இந்த மனுக்கள் நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் கெய்ட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது பேஸ்புக் இந்தியா மற்றும் கூகுள் இந்தியா நிறுவனங்களின் சார்பில் அவர்களது வக்கீல்கள் ஆஜராகினர். மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சண்டியோக் ஆஜரானார்.

அப்போது கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களின் வக்கீல்கள் வாதிடுகையில், பல லட்சம் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்களில் சிலர் ஆபாச செய்திகளைப் போட்டு விடுகின்றனர். அவற்றைத் தனித் தனியாக கண்காணித்து நீக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. மனுதாரர் குறிப்பிட்ட புகார் எதையாவது கூறினால் அதை எங்களது அமெரிக்க தலைமை நிறுவனத்திடம் சொல்லி நீக்க முயற்சிப்போம் என்றனர்.

இதற்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி கெய்ட், சமூக வளைதளங்களில் ஆபாசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தால், அதை நீக்க முடியாது என்று அவை கூறினால், சீனாவைப் போன்று இந்தியாவிலும் கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகியவை மூடப்படும் என்று எச்சரித்தார். மேலும் கீழ் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்கவும் உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இதையடுத்து டெல்லி மெட்ரோபாலிடன் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வ்நதது. அப்போது மார்ச் மாதம் 13ம் தேதி

கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் 21 பிரதிநிதிகள் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி சுதேஷ் குமார் உத்தரவிட்டார்.

இதற்கிடையே இணையதளங்களில் ஆபாசமானவை போஸ்ட் செய்வதை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்த அரசின் கொள்கை அறிக்கையை மத்திய அரசு இன்று மதியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றது. இதன் மூலம் பேஸ்புக், கூகுள் போன்றவற்றுக்கு இந்தியாவில் தடை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://tamil.oneindi...le-aid0091.html

Edited by தமிழரசு

பகல் கனவு :D

Google என்பது ஒரு தேடு இயந்திரம். அது ஏற்கனவே யாராவது போட்ட படங்களை தான் காட்டுமே தவிற தானாக ஒரு படத்தை போடாது.

இவர்கள் இப்படி ஆபாச படங்கள் போட்டவர்கள் மீது வழக்கு போட வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

Lawyers-police_15910f.jpg

Tamil-Nadu-Lawyers.jpg

நிறைய பேர் லோயருக்கு படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.. ஏதாவது சமூக நல கேஸ் கிடைக்குமா என்று தவித்து கொண்டிருக்கிறார்கள்.. டிராபிக் ராமாசாமி போல பேமஸ் ஆக இது ஒரு நல்ல வாய்ப்பு... வளரும் ஜூனியர் அட்வகேட்கள் பயன் படுத்தி கொள்ளவேண்டும்

டிஸ்கி:

மற்றும்படி மூடுவதா..? ஓ சும்மா காமெடி பண்ணாதிங்கப்பா... :D புதுசா எதாவது உள்ள வராம இருக்கிறதே பெரிய விசயம்.... :D

திருக்குறளில் எழுதாத நீதி இல்லை. சாணக்கியர் சொல்லாத அறிவுரை இல்லை. வத் வாசன முனி வரையாத சிற்றின்ப சூத்திரம் இல்லை. சயங்கொண்டார் பாடாத காதல் இல்லை. எழுத்து பேச்சு சுதந்திரம் இத்தாலியில் மட்டும்தான் சில கொடுங்கோல் போப்பாணடவர்களில் ஏவுதடிகளால் மறுக்க பட்டு கலிலியோ தூக்கிலிடபடவிருந்தார்.

செல்லிடத்தில் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்தில் காக்கிலென் காவாகாலென்.

தீயவை இருந்தும் நெறி தவறாத நிலைதான் ஆன்மிகநிலை. இல்லையேல் கிந்திக்கரனின் சீறையில் இருபோர் எல்லோரையும் ஞானிகளாகத்தான் கருத வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.